முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது : இந்திய ராணுவ தளபதி பேட்டி

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லையில் சீனா ராணுவத்தை குவித்து வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை நிலை நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியா - சீனா விவகாரத்தில் மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு படையினருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் பேசிய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, லடாக்கில் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா தனது படைகளை குவிப்பது கவலையளிக்கிறது. சீனப் படைகளின் நகர்வு மற்றும் ஆப்கானிஸ்தான் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்  பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்” என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து