எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை வந்து விட்டாலே வெயில் மண்டையை பிளக்கும். அப்படித்தான் இந்த ஆண்டும் பங்குனி ஆரம்பத்திலேயே வெயில் வெளுத்துக் கட்டுகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரத்தை மக்களால் தாங்க முடியவில்லை. சென்னை போன்ற நகரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் தவிக்கிறார்கள். மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும் அதே நிலைதான் நீடிக்கிறது.
தமிழகத்தில் வெயிலால் அனல் பறக்கிறது என்றால் கர்நாடக மாநிலத்திலோ தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அனல் பறக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டபடியால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சி, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கின்றன. 1992 ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 பேர் கர்நாடக முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
இவர்களில் இப்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நீங்கலாக 8 பேர் இதற்கு முன்பு முதல்வர் பதவி வகித்துள்ளனர். இவர்களில் ஜே.எச். பாட்டீல் காலமாகி விட்டார். மற்ற 7 முன்னாள் முதல்வர்களும் தேர்தல் களத்தில் இயங்கி வருகிறார்கள். இவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மற்றவர்கள் பிரச்சார களத்தில் குதித்துள்ளனர்.
மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டனர். குமாரசாமி ராமநகரம் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. சதானந்த கவுடா, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல இப்போதைய முதல்வரும் ஜெகதீஷ் ஷெட்டரும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
கர்நாடக ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்தலில் போட்டியிடுவதுடன் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதிலும் முனைப்பு காட்டி வருகிறார். பா.ஜ.க வேட்பாளர்களை வீழ்த்த வேண்டும் என்பதே இவரது குறிக்கோளாக உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல் முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம். கிருஷ்ணாவும், தரம்சிங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர்களில் மிகவும் வயதானவர் யார் என்றால் அவர்தான் எஸ்.எம். கிருஷ்ணா. அவருக்கு தற்போது 81 வயதாகிறது. முன்னாள் முதல்வர்களில் இளையவர் என்றால் அவர்தான் குமாரசாமி. அவருக்கு 54 வயதாகிறது. வயதானவரான எஸ்.எம். கிருஷ்ணாவும் மற்றும் இளையவரான குமாரசாமியும் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கிறார்கள். இப்படி பல முன்னாள் முதல்வர்கள் இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தில் குதித்திருப்பதால் அம்மாநிலத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடக்கிறது.
கர்நாடக சட்டசபைக்கு 224 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்போது அங்கு பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்து வருகிறார். மீண்டும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்று இவர் மார்தட்டுகிறார். ஆனால் எடியூரப்பாவோ பா.ஜ.க வை ஆட்சிக்கு வர விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 3 இடத்துக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் முதலிடத்தையும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 வது இடத்தையும் பிடித்தன. ஆனால் எடியூரப்பா கட்சி படுதோல்வி அடைந்தது. எனவே சட்டமன்ற தேர்தலிலும் அவரது கட்சிக்கு இதே கதிதான் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக குஜராத் முதல்வர் மோடி வரவிருக்கிறாராம். அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் பிரச்சாரத்திற்கு வருகிறார். இவர்கள் இருவரும் வந்த பிறகு இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடையும். அப்போது மேலும் அனல் பறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.