எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை வந்து விட்டாலே வெயில் மண்டையை பிளக்கும். அப்படித்தான் இந்த ஆண்டும் பங்குனி ஆரம்பத்திலேயே வெயில் வெளுத்துக் கட்டுகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரத்தை மக்களால் தாங்க முடியவில்லை. சென்னை போன்ற நகரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் தவிக்கிறார்கள். மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும் அதே நிலைதான் நீடிக்கிறது.
தமிழகத்தில் வெயிலால் அனல் பறக்கிறது என்றால் கர்நாடக மாநிலத்திலோ தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அனல் பறக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டபடியால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சி, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கின்றன. 1992 ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 பேர் கர்நாடக முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
இவர்களில் இப்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நீங்கலாக 8 பேர் இதற்கு முன்பு முதல்வர் பதவி வகித்துள்ளனர். இவர்களில் ஜே.எச். பாட்டீல் காலமாகி விட்டார். மற்ற 7 முன்னாள் முதல்வர்களும் தேர்தல் களத்தில் இயங்கி வருகிறார்கள். இவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மற்றவர்கள் பிரச்சார களத்தில் குதித்துள்ளனர்.
மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டனர். குமாரசாமி ராமநகரம் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. சதானந்த கவுடா, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல இப்போதைய முதல்வரும் ஜெகதீஷ் ஷெட்டரும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
கர்நாடக ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்தலில் போட்டியிடுவதுடன் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதிலும் முனைப்பு காட்டி வருகிறார். பா.ஜ.க வேட்பாளர்களை வீழ்த்த வேண்டும் என்பதே இவரது குறிக்கோளாக உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல் முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம். கிருஷ்ணாவும், தரம்சிங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர்களில் மிகவும் வயதானவர் யார் என்றால் அவர்தான் எஸ்.எம். கிருஷ்ணா. அவருக்கு தற்போது 81 வயதாகிறது. முன்னாள் முதல்வர்களில் இளையவர் என்றால் அவர்தான் குமாரசாமி. அவருக்கு 54 வயதாகிறது. வயதானவரான எஸ்.எம். கிருஷ்ணாவும் மற்றும் இளையவரான குமாரசாமியும் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கிறார்கள். இப்படி பல முன்னாள் முதல்வர்கள் இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தில் குதித்திருப்பதால் அம்மாநிலத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடக்கிறது.
கர்நாடக சட்டசபைக்கு 224 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்போது அங்கு பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்து வருகிறார். மீண்டும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்று இவர் மார்தட்டுகிறார். ஆனால் எடியூரப்பாவோ பா.ஜ.க வை ஆட்சிக்கு வர விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 3 இடத்துக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் முதலிடத்தையும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 வது இடத்தையும் பிடித்தன. ஆனால் எடியூரப்பா கட்சி படுதோல்வி அடைந்தது. எனவே சட்டமன்ற தேர்தலிலும் அவரது கட்சிக்கு இதே கதிதான் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக குஜராத் முதல்வர் மோடி வரவிருக்கிறாராம். அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் பிரச்சாரத்திற்கு வருகிறார். இவர்கள் இருவரும் வந்த பிறகு இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடையும். அப்போது மேலும் அனல் பறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


