எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை வந்து விட்டாலே வெயில் மண்டையை பிளக்கும். அப்படித்தான் இந்த ஆண்டும் பங்குனி ஆரம்பத்திலேயே வெயில் வெளுத்துக் கட்டுகிறது. காலை 10 மணிக்கே வெயிலின் உக்கிரத்தை மக்களால் தாங்க முடியவில்லை. சென்னை போன்ற நகரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் தவிக்கிறார்கள். மதுரை, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும் அதே நிலைதான் நீடிக்கிறது.
தமிழகத்தில் வெயிலால் அனல் பறக்கிறது என்றால் கர்நாடக மாநிலத்திலோ தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் அனல் பறக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டபடியால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சி, தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கின்றன. 1992 ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 பேர் கர்நாடக முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
இவர்களில் இப்போதைய முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நீங்கலாக 8 பேர் இதற்கு முன்பு முதல்வர் பதவி வகித்துள்ளனர். இவர்களில் ஜே.எச். பாட்டீல் காலமாகி விட்டார். மற்ற 7 முன்னாள் முதல்வர்களும் தேர்தல் களத்தில் இயங்கி வருகிறார்கள். இவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். மற்றவர்கள் பிரச்சார களத்தில் குதித்துள்ளனர்.
மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டனர். குமாரசாமி ராமநகரம் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. சதானந்த கவுடா, பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல இப்போதைய முதல்வரும் ஜெகதீஷ் ஷெட்டரும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
கர்நாடக ஜனதா கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்தலில் போட்டியிடுவதுடன் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதிலும் முனைப்பு காட்டி வருகிறார். பா.ஜ.க வேட்பாளர்களை வீழ்த்த வேண்டும் என்பதே இவரது குறிக்கோளாக உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இதே போல் முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம். கிருஷ்ணாவும், தரம்சிங்கும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
முன்னாள் முதல்வர்களில் மிகவும் வயதானவர் யார் என்றால் அவர்தான் எஸ்.எம். கிருஷ்ணா. அவருக்கு தற்போது 81 வயதாகிறது. முன்னாள் முதல்வர்களில் இளையவர் என்றால் அவர்தான் குமாரசாமி. அவருக்கு 54 வயதாகிறது. வயதானவரான எஸ்.எம். கிருஷ்ணாவும் மற்றும் இளையவரான குமாரசாமியும் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கிறார்கள். இப்படி பல முன்னாள் முதல்வர்கள் இந்த தேர்தல் பிரச்சாரக் களத்தில் குதித்திருப்பதால் அம்மாநிலத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடக்கிறது.
கர்நாடக சட்டசபைக்கு 224 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்போது அங்கு பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்து வருகிறார். மீண்டும் நாங்களே ஆட்சியைப் பிடிப்போம் என்று இவர் மார்தட்டுகிறார். ஆனால் எடியூரப்பாவோ பா.ஜ.க வை ஆட்சிக்கு வர விடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 3 இடத்துக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் முதலிடத்தையும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 வது இடத்தையும் பிடித்தன. ஆனால் எடியூரப்பா கட்சி படுதோல்வி அடைந்தது. எனவே சட்டமன்ற தேர்தலிலும் அவரது கட்சிக்கு இதே கதிதான் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக குஜராத் முதல்வர் மோடி வரவிருக்கிறாராம். அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் பிரச்சாரத்திற்கு வருகிறார். இவர்கள் இருவரும் வந்த பிறகு இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடையும். அப்போது மேலும் அனல் பறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.