முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் நாகார்ஜூனாவை சிபிஐ விசாரிக்க கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

நகரி, ஏப்ரல்.15 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவருடன் தொழில் அதிபர் நீம்மசுத்த பிரசாத் என்பவரும் சிறையில் உள்ளார். அவரை நடிகர் நாகார்ஜூனா சிறையில் 7 முறை 

சந்தித்துப் பேசினார். சமீபத்தில் நடிகர் லல்லு அரவிந்துடன் சென்று சந்தித்தார். ஜெகன்மோகன் சொத்து குவிப்பு வழக்கில் நடிகர் நாகார் ஜூனாவுக்கும் தொடர்பு உள்ளது. எனவே அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தெலுங்கு தேச எம்எல்ஏ  ரேவந்த்ரெட்டி குற்றம் சாட்டினார் .இதுகுறித்து முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இகுபற்றி ரேவந்த் ரெட்டி கூறியதாவது:

ஆந்கிராவில் ராஜசேகர் ரெட்டி முதல்வராக இருந்தபோது அரசு விளம்பரப் படம் ஒன்றில் நாகார்ஜூனா நடித்தார். அந்த படம் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டது. நாகார்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டூடியோவை அருகில் உள்ள ஏரியிலிருந்து, 6 ஏக்கர் நித்தை ஆக்கிரமித்து கட்டிஉள்ளார்.

ராஜசேகர் ரெட்டிக்கு ஆதரவாக இருந்த காரணத்துக்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுபற்றி விசாராணை  நடத்த வேண்டும். அவரை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்