எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.18 - திரை உலகில் இசை மேதைகளாக விளங்கிய இரட்டையர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி. இவர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. இதுபற்றிய விவரம் வருமாறு:-
பிரபல இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார். இந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தார் கதறி அழுதனர். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் இறந்த செய்தி கேட்டு பொதுமக்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்,தேவா, சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, தி.மு.க. பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் என பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டி.கே.ராமமூர்த்தியின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
டி.கே.ராமமூர்த்தி 1922-ல் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் பிறந்தார். இந்து அய்யர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசாமி, தாத்தா கோவிந்தசாமி ஆகியோர் இசை கலைஞர்கள். அதனால் ராமமூர்த்தியும் சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் இருந்துள்ளது. இவர் 1950-ம் ஆண்டு தர்மாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு மகன் டாக்டர். இவர் இறந்து விட்டார்.
சிறுவயது முதல் ஆர்மோனியம், கீ போர்டு வாசித்து பயிற்சி பெற்ற ராமமூர்த்தி சென்னை வந்து எச்.எம்.வி. ஆடியோ நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு அந்நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகி ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த சரஸ்வதி என்ற இசை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கே சுப்பாராம் என்ற இசையமைப்பாளரிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆர்மோனியம் வாசித்து வந்தார். இந்த சூழலில் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் நண்பர்களானார்கள். இசையமைப்பாளர் சுப்பாராம் இறந்த பிறகு விஸ்வநாதன்- ராமமூர்த்தி சேர்ந்து இசையமைக்க தொடங்கினர். முதல் படம் `பணம்'. இப்படத்தை என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கினார். இந்த படத்திலிருந்து பட டைட்டலில் இருவர் பெயரும் சேர்த்து போடப்பட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என 700 படங்களுக்கு இசையமைத்து இசையின் உச்சத்திற்கு சென்றார்கள்.
பிறகு இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த `ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு இசையமைத்து விட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர் டி.கே.ராமமூர்த்தி தனித்து இசையமைக்க தொடங்கினார். முதல் படம் `சாதுமிரண்டால், 1966-ல் வெளிவந்தது. தொடர்ந்து ரவிச்சந்திரன் நடித்த நான், ஜெய்சங்கர் நடித்த மூன்றெழுத்து, தங்க சுரங்கம், மறக்க முடியுமா?, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, இவள் ஒரு பவுர்ணமி என 19 படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் 29 ஆண்டுகள் கழித்து மீண்டும் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து ராமமூர்த்தி இசையமைக்க தொடங்கினார். சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த `எங்கிருந்தோ வந்தாள்' படம் பெரிய அளவில் பேசப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதனை விட ராமமூர்த்தி ஏழு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் குடும்பங்களும் நெருக்கமாக பழகி நட்பை வளர்த்து வந்தனர்.
இவர்களுக்கு1962-ல் எம்.கே.டி.கலா மன்றம் சார்பில் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1950-லிருந்து 70 வரை உலகில் கொடிகட்டி பறந்தார்கள். இவர்களது இசையில் வெளிவந்த பாடல்கள் இன்றும் தேன் போல் இனிக்கும்.
சமீபத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா திரை இசை சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு கார், தங்க காசுகளை பரிசாக வழங்கினார். டி.கே.ராமமூர்த்தியின் இன்னொரு சிறப்பு இதுவரை இவர் இசையிலும் சரி, பிறருடைய இசையிலும் சரி ஒரு பாடல் கூட பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,