எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.18 - திரை உலகில் இசை மேதைகளாக விளங்கிய இரட்டையர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி. இவர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. இதுபற்றிய விவரம் வருமாறு:-
பிரபல இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார். இந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தார் கதறி அழுதனர். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் இறந்த செய்தி கேட்டு பொதுமக்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்,தேவா, சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, தி.மு.க. பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் என பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டி.கே.ராமமூர்த்தியின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
டி.கே.ராமமூர்த்தி 1922-ல் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் பிறந்தார். இந்து அய்யர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசாமி, தாத்தா கோவிந்தசாமி ஆகியோர் இசை கலைஞர்கள். அதனால் ராமமூர்த்தியும் சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் இருந்துள்ளது. இவர் 1950-ம் ஆண்டு தர்மாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு மகன் டாக்டர். இவர் இறந்து விட்டார்.
சிறுவயது முதல் ஆர்மோனியம், கீ போர்டு வாசித்து பயிற்சி பெற்ற ராமமூர்த்தி சென்னை வந்து எச்.எம்.வி. ஆடியோ நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு அந்நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகி ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த சரஸ்வதி என்ற இசை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கே சுப்பாராம் என்ற இசையமைப்பாளரிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆர்மோனியம் வாசித்து வந்தார். இந்த சூழலில் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் நண்பர்களானார்கள். இசையமைப்பாளர் சுப்பாராம் இறந்த பிறகு விஸ்வநாதன்- ராமமூர்த்தி சேர்ந்து இசையமைக்க தொடங்கினர். முதல் படம் `பணம்'. இப்படத்தை என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கினார். இந்த படத்திலிருந்து பட டைட்டலில் இருவர் பெயரும் சேர்த்து போடப்பட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என 700 படங்களுக்கு இசையமைத்து இசையின் உச்சத்திற்கு சென்றார்கள்.
பிறகு இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த `ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு இசையமைத்து விட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர் டி.கே.ராமமூர்த்தி தனித்து இசையமைக்க தொடங்கினார். முதல் படம் `சாதுமிரண்டால், 1966-ல் வெளிவந்தது. தொடர்ந்து ரவிச்சந்திரன் நடித்த நான், ஜெய்சங்கர் நடித்த மூன்றெழுத்து, தங்க சுரங்கம், மறக்க முடியுமா?, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, இவள் ஒரு பவுர்ணமி என 19 படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் 29 ஆண்டுகள் கழித்து மீண்டும் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து ராமமூர்த்தி இசையமைக்க தொடங்கினார். சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த `எங்கிருந்தோ வந்தாள்' படம் பெரிய அளவில் பேசப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதனை விட ராமமூர்த்தி ஏழு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் குடும்பங்களும் நெருக்கமாக பழகி நட்பை வளர்த்து வந்தனர்.
இவர்களுக்கு1962-ல் எம்.கே.டி.கலா மன்றம் சார்பில் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1950-லிருந்து 70 வரை உலகில் கொடிகட்டி பறந்தார்கள். இவர்களது இசையில் வெளிவந்த பாடல்கள் இன்றும் தேன் போல் இனிக்கும்.
சமீபத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா திரை இசை சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு கார், தங்க காசுகளை பரிசாக வழங்கினார். டி.கே.ராமமூர்த்தியின் இன்னொரு சிறப்பு இதுவரை இவர் இசையிலும் சரி, பிறருடைய இசையிலும் சரி ஒரு பாடல் கூட பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.