எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.18 - திரை உலகில் இசை மேதைகளாக விளங்கிய இரட்டையர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி. இவர்களில் ஒருவரான டி.கே.ராமமூர்த்தி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. இதுபற்றிய விவரம் வருமாறு:-
பிரபல இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பு ராமமூர்த்தி இறந்து விட்டார். இந்த செய்தி கேட்டு அவரது குடும்பத்தார் கதறி அழுதனர். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் இறந்த செய்தி கேட்டு பொதுமக்கள் மற்றும் திரை உலகைச் சேர்ந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்,தேவா, சங்கர் கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி, தி.மு.க. பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் என பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். டி.கே.ராமமூர்த்தியின் உடல் இன்று காலை 10.30 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
டி.கே.ராமமூர்த்தி 1922-ல் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் பிறந்தார். இந்து அய்யர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா கிருஷ்ணசாமி, தாத்தா கோவிந்தசாமி ஆகியோர் இசை கலைஞர்கள். அதனால் ராமமூர்த்தியும் சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் இருந்துள்ளது. இவர் 1950-ம் ஆண்டு தர்மாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 7 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு மகன் டாக்டர். இவர் இறந்து விட்டார்.
சிறுவயது முதல் ஆர்மோனியம், கீ போர்டு வாசித்து பயிற்சி பெற்ற ராமமூர்த்தி சென்னை வந்து எச்.எம்.வி. ஆடியோ நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு அந்நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிலிருந்து விலகி ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த சரஸ்வதி என்ற இசை நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கே சுப்பாராம் என்ற இசையமைப்பாளரிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆர்மோனியம் வாசித்து வந்தார். இந்த சூழலில் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் நண்பர்களானார்கள். இசையமைப்பாளர் சுப்பாராம் இறந்த பிறகு விஸ்வநாதன்- ராமமூர்த்தி சேர்ந்து இசையமைக்க தொடங்கினர். முதல் படம் `பணம்'. இப்படத்தை என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கினார். இந்த படத்திலிருந்து பட டைட்டலில் இருவர் பெயரும் சேர்த்து போடப்பட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என 700 படங்களுக்கு இசையமைத்து இசையின் உச்சத்திற்கு சென்றார்கள்.
பிறகு இவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த `ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு இசையமைத்து விட்டு பிரிந்து விட்டனர்.
பின்னர் டி.கே.ராமமூர்த்தி தனித்து இசையமைக்க தொடங்கினார். முதல் படம் `சாதுமிரண்டால், 1966-ல் வெளிவந்தது. தொடர்ந்து ரவிச்சந்திரன் நடித்த நான், ஜெய்சங்கர் நடித்த மூன்றெழுத்து, தங்க சுரங்கம், மறக்க முடியுமா?, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, இவள் ஒரு பவுர்ணமி என 19 படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் 29 ஆண்டுகள் கழித்து மீண்டும் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து ராமமூர்த்தி இசையமைக்க தொடங்கினார். சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த `எங்கிருந்தோ வந்தாள்' படம் பெரிய அளவில் பேசப்பட்டது. எம்.எஸ்.விஸ்வநாதனை விட ராமமூர்த்தி ஏழு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் குடும்பங்களும் நெருக்கமாக பழகி நட்பை வளர்த்து வந்தனர்.
இவர்களுக்கு1962-ல் எம்.கே.டி.கலா மன்றம் சார்பில் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. 1950-லிருந்து 70 வரை உலகில் கொடிகட்டி பறந்தார்கள். இவர்களது இசையில் வெளிவந்த பாடல்கள் இன்றும் தேன் போல் இனிக்கும்.
சமீபத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா திரை இசை சக்கரவர்த்தி என்ற பட்டத்தை வழங்கினார். அதோடு மட்டுமில்லாமல் ஒரு கார், தங்க காசுகளை பரிசாக வழங்கினார். டி.கே.ராமமூர்த்தியின் இன்னொரு சிறப்பு இதுவரை இவர் இசையிலும் சரி, பிறருடைய இசையிலும் சரி ஒரு பாடல் கூட பாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.