எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.23 - சமீப காலமாக வீழ்ச்சி கண்டு வரும் இந்திய பொருளாதாரம், மீட்சி அடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. கடந்த வெள்ளியன்று வெளியிடப்பட்ட பல்வேறு துறைகளின் உத்யோகப்பூர்வ தரவுகளில் பொருளாதார மீட்சி பெறும் எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை. வெள்ளியன்று வெளியிடப்பட்ட தரவுகள், தொழில்துறை உற்பத்தி மற்றும் நாட்டின் ஏற்றுமதி போன்றாவை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது. அதைவிட மிக முக்கியமாக நாட்டின் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது.
தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (ஐஐட) கடந்த மே மாதத்தில் சுமார் 1.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இதுவே தொழில் துறையின் மிகக் குறைந்த உற்பத்திஅளவாகும். அதே நேரத்தில் ஜூன் மாதத்திற்கான நாட்டின் ஏற்றுமதி சுமார் 4.6 சதவீதம் சரிவடைந்ததாக வணிகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சில்லறை பணவீக்கம், ஜூன் மாதத்தில் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்திற்கு காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த முக்கிய தரவுகள் வரும் ஜூலை 30 ம் தேதியன்று ரிசர்வ் வங்கியால் வெளியிட்டப்பட உள்ள முதல் காலாண்டு நிதி கொள்கையின் மறு ஆய்வு அறிக்கையில் ஒரு முக்கிய தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். மத்திய ரிசர்வ் வங்கி நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் பணவீக்கத்தை குறைப்பது போன்ற இரு முக்கிய செயல்களுக்கு இடையே ஒரு சமநிலையை பராமரிக்கும் ஒரு கடினமான பணியினை மேற்கொண்டு வருகிறது.
எனினும், இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்றாக குறைந்து வரும் வர்த்தக பற்றாக்குறை நம்பிக்கை அளிக்கிறது. வர்த்தக பற்றாக்குறை குறைவதற்கு தங்கம் மற்றும் வெள்ளி போன்ற இதர விலைமதிப்பற்ற பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள செங்குத்தான வீழ்ச்சியே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
வர்த்தக தரவுகள், ஜூன் மாதத்திற்கான வர்த்தக பற்றாக்குறை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டுகின்றன. இதற்கு முந்தைய மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த மிக முக்கியமான துறைகளின் தரவுகளைப் பற்றி பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் (டஆநுயுஊ) தலைவர் திரு சி ரங்கராஜன், ாகடந்த ஆறு ஏழு மாதங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் தாக்கத்தை நாம் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில்தான் உணர முடியும் ... எனவே, நான் தற்பொழுது உள்ள நிலைமையில் நாட்டின் பொருளாதார நிலை கண்டிப்பாக மேம்படும் என நினைக்கின்றேன்ா, எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்திய வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான செயல்பாட்டின் மிக முக்கிய அம்சமான வட்டி விகிதம் குறைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது, மேலும் அதிகரித்து வரும் பணவீக்க விகிதம் வேறு கவலை தரத், தக்க விதத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். டபிள்யூபிஐ (றுடஐ) அடிப்படையிலான பணவீக்க விகித புள்ளிவிவரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
இந்திய அரசாங்கம் ஐஐபி (ஐஐட) மற்றும் சில்லறை பணவீக்க புள்ளிவிவரங்களை மாலை 5.30 மணிக்கு வெளியிட்ட காரணத்தால், பங்குச் சந்தை மற்றும் பணச் சந்தைகளில் இந்தத் தரவுகளின் தாக்கத்தை நம்மால் உடனடியாக உணர முடியவில்லை.
பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 282.41 புள்ளிகள் அதிகரித்து 19,958.47 புள்ளிகளில் முடிவடைந்தது. இது கடந்த மே 30 க்கு பின்னர் சென்ஸெக்ஸ் சந்தித்த உட்ச பட்ச அளவாகும். அதே நேரத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் சுமார் 11 பைசா அதிகரித்து 59.56 என்கிற அளவில் முடிவடைந்துள்ளது. இதுவே கடந்த இரண்டு வார கால அளவில் இந்திய ரூபாயின் அதிக பட்சமாகும்.
ஐஐபி (ஐஐட) தரவுகளின் படி, மே மாத தொழிற்சாலை உற்பத்தி குறைந்தற்கு உற்பத்தி மற்றும் சுரங்க துறைகளின் மோசமான செயல்பாடே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஐஐபி (ஐஐட) 1.9 சதவீதமாகவும், கடந்த ஆண்டின் இதே மாதத்தில் சுமார் 2.5 சதவீதமாகவும் இருந்தது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐஐபி (ஐஐட) அடிப்படையில் அளவிடப்பட்ட தொழிற்சாலை வெளியீடு மிகக் குறைந்த அளவாக 0.1 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே மாதத்தில் இது சுமார் 0.6 சதவீதமாக இருந்தது.
குறியீட்டு எண்ணில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகிக்கும் உற்பத்தி துறையானது சுமார் 2 சதவீதத்தை தொட்டு விட்டது. கடந்த ஆண்டின் இதே பருவத்தில் உற்பத்தித் துறையானது சுமார் 2.6 சதவீதம் என்கிற அளவில் இருந்தது.
மே மாதத்தில் சுரங்க துறை உற்பத்தி மிக அதிகமாக சுமார் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் சுரங்கத்துறை உற்பத்தி சுமார் 0.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது.
ஒட்டுமொத்தமாக உற்பத்தி துறையில் உள்ள 22 தொழில் குழுக்களில் சுமார் 11 குழுக்கள் மே மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை பெற்றுள்ளன.
வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட வர்த்தக தரவுகளின் அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதியானது தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்து வருகிறது. இது கடந்த ஜூன் மாதத்தில் அதற்கு முந்தைய வருடத்தின் அதே பருவத்தை ஒப்பிடுகையில் சுமார் 4.6 சதவீதமாக குறைந்து விட்டது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 23.79 பில்லியன் டாலராக உள்ளது.
நம் நாட்டின் இறக்குமதி அளவு 0.37 சதவீதம், அதாவது 36 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இறக்குமதியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி வர்த்தக பற்றாக்குறையை சுமார் 12.2 பில்லியன் டாலராக குறைத்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 20.1 பில்லியன் டாலராக இருந்தது.
இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவே மிக முக்கிய காரணம் என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் (னுபுகுவு) திரு அனுப் புஜாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜூன் மாதத்தில் சில்லறை வர்த்தக பணவீக்கம் 9.87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் சுமார் 9.31 சதவீதமாக இருந்தது. அதிகரித்து வரும் சில்லறை பணவீக்க விகிதத்திற்கு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வே முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து வந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் திடீரென்று ஒரு ஏற்றத்தை சந்தித்துள்ளது.
காய்கறிகளின் விலையானது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் பொழுது செங்குத்தாக அதாவது சுமார் 14.55 சதவீதம் அதிகரித்துள்ளது. பழங்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இது நாட்டின் பொருளாதார மீட்சி மிக அருகில் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது, வளர்ச்சி இன்னும் அதன் அடித்தளத்தை தொடவில்லைா என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் இன்று த.வெ.க. பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் எஸ்.பி. ஆய்வு
17 Dec 2025ஈரோடு, விஜய் பிரச்சார கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று நேரில் ஆய்வு நடத்
-
100 நாள் வேலை திட்ட விவகாரம்: இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
17 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்ட விவகாரத்தில் இ.பி.எஸ்.க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
கனிமொழி எம்.பி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு
17 Dec 2025சென்னை, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா 326 ரன்கள் குவிப்பு
17 Dec 2025அடிலெய்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் உஸ்மான் குவாஜா, அலெக்ஸ் கேரியின பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
-
சென்னை நங்கநல்லூரில் 2-வது ஹஜ் இல்லம் கட்டப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
17 Dec 2025சென்னை, சென்னை சூளையில் ஹஜ் இல்லம் 2-வது இல்லம் எதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு பரிசளித்தார் ஆனந்த் அம்பானி
17 Dec 2025புதுடெல்லி, சுமார் ரூ.10.91 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரத்தை மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்தார்.
14 ஆண்டுக்கு பிறகு...
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்
17 Dec 2025விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக தமிழகத்தில் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக ரூ.11.40 லட்ச
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
17 Dec 2025சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புதிய சாதனை: அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி
17 Dec 2025துபாய், ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
-
45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்: மம்தா தொகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்ய தி.காங்., திட்டம்
17 Dec 2025கொல்கத்தா, 45 ஆயிரம் வாக்காளர் நீக்கம்ப்பட்டதை அடுத்து மம்தா பானர்ஜி தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
-
தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிச. 23-ல் தமிழகம் வருகை: நயினார்
17 Dec 2025சென்னை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வரும் 23-ம் தேதி தமிழகம் வருகிறார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது: இந்தியாவின் அந்தஸ்து உயர்கிறது: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
17 Dec 2025புதுடெல்லி, பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கியதுக்கு இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்று அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.


