முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனிதர்களை போன்றே....

சமூக ஈடுபாடு மனிதர்களில் அதிகம் காணப்படுகின்றது. இதே இயல்பு குரங்குகளிலும் காணப்படுவதாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கின் மூளையிலுள்ள நரப்பு வலையமைப்பினை ஸ்கேன் செய்து பார்த்த போது இந்த உண்மை வெளியாகியுள்ளது.குரங்குகளின் மூளைகளில் உள்ள நியூரான்களில் மனிதர்களை போன்று கற்பனைத்திறன் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் கருவி

வயலின் என்பதும் அழகிய இசைக்கருவி. இளையராஜா பாட்டை கேட்டவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த இசைக்கருவியின் அற்புதம் எப்படி என... இந்நிலையில் உலகிலேயே அதிகமான விலைக்கு விற்பனையான வயலின் இசைக்கருவி எது தெரியுமா.. லேடி ப்ளூன்ட் ஸ்ட்ராடிவேரியஸ் என்பவர் 1721 ஆம் ஆண்டு உருவாக்கிய வயலின் கருவிதான் அதிக விலைக்கு போனது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது இந்த வயலின் இசைக்கருவி சுமார் 121 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. 2011 இல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த ஆன் லைன் மூலம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இசைக் கருவிகளில் அதிக விலைக்கு விற்ற சாதனையை இது படைத்துள்ளது.

அரிதான நோய்

சீனாவை சேர்ந்த ஹூவாங் சுன்சய் என்பவர் நியூரோஃபிப்ரோடோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் 15 கிலோ கட்டியுடன் இதுவரை 4 முறை அறுவை சிகிச்சைச் செய்தும் பலன் தரவில்லை. இவரை, சீனாவில் ’யானை நாயகன்’ என்று கூறுகின்றனர்.

தவிர்க்க வேண்டியவை

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உடல் எடை கூடும்.

கர்பிணிகள் அச்சம்

பியா...பெண்களுக்கு கர்ப்பம் குறித்த பயத்தை ஏற்படுத்தும் நோய்தான் டோகோபோபியா. இந்த நோயானது இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது. முதல் வகையானது கர்ப்பம் குறித்த எந்த முன் அனுபவமும் இல்லாமல் குழந்தை பிறப்பு குறித்து பிறர் கூறுவது கேட்டு அவர்களுக்கு ஏற்படும் அச்சம். இரண்டாவது வகை முந்தைய கால கர்ப்ப காலத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக ஏற்படும் அச்சம். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களது பயத்தை போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டாடா ஏர்லைன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான  போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago