Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசி

மாப்பிள்ளைச் சாம்பா (Mapillai Samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு வழக்கிழந்த நெல் வகைகளில் ஒன்றாக கருதப்படும் இது, தனது தன்மையின் பெயரே உதாரணத்தை அடிப்படையாகக் கொண்டது.  மாப்பிள்ளை சம்பா அரிசியை பொதுவாக ஆண்கள் திருமணத்தின் போது உண்ண வேண்டும் என முன்னோர் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாது புரதம், நார்சத்து மற்றும் உப்பு சத்துக்கள் நிறைந்தது மாப்பிள்ளை சம்பா. இவற்றை நீரிழிவு நோயாளிகளும் உட்கொள்ளலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டும். மாப்பிள்ளை சம்பா அரிசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இரும்பு சத்தும், துத்தநாக சத்தும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உட்கொள்ளும் போது உடலில் உள்ள அதிகபடியான கொழுப்புகள், குறைந்த இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். இதில் உள்ள அதிகபடியான நார்சத்துகள் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கின்றது. எனவே ஆரோக்கியத்திற்கும், உடல் பலத்திற்கும் உதவும் மாப்பிள்ளைசம்பா அரிசியை உணவில் பயன்படுத்தி ஆரோக்கியமாய் வாழ்வோம்.

ஒரே சமயத்தில் குட் மார்னிங்கும் குட் நைட்டும் சொல்லும் நாடு

அமெரிக்காவில் பகல் என்றால் இங்கு நமக்கு இரவு. இது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் ஒரே நாட்டில் ஒரு பகுதியில் பகல், மறு பகுதியில் இரவு எந்த நாடு தெரியுமா... அது தற்போது உக்ரைனை போட்டு தாக்கிக் கொண்டிருக்கும் ரஷ்யாவில் தான். உலகம் முழுவதும் மொத்தம் 24 சர்வதேச நேர மண்டலங்கள் உள்ளன. அவற்றில் 11 மண்டலங்கள் மட்டும் ரஷ்யாவிலேயே அமைந்துள்ளது. ரஷ்யாவில் ஒரு பகுதியில் ஒருவர் குட்மார்னிங் சொல்லும் அதே வேளையில் மற்றொரு பகுதியில் மற்றொருவர் குட் நைட் சொல்லிவிட்டு போர்வையை இழுத்து போர்த்தி உறங்க தயாராகிக் கொண்டிருப்பார் என்றால் ஆச்சரியம் தானே..

இந்தியாவின் மிதக்கும் சந்தை

இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டூலியில் கடந்த 2018 இல் திறக்கப்பட்டது. இந்தச் சந்தையில் 200 கடைகளுக்கு மேல் உள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும். படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். அருகில் பிற சந்தைகள் இருந்தாலும் இங்கு வந்து பொருட்களை வாங்குவது என்பது புதிய அனுபவமாக உள்ளது என்று வாடிக்கையாளர்களும் வணிகர்களும் கூறுகின்றனர்.

சூரியனால் ஆபத்து

இன்னும் 5 பில்லியன் வருடங்களில் சூரியன், தீவிரமடைந்து 100 மடங்கு பெரிதாகி ‘சிவப்பு இராட்சதன்’ என்ற நிலையை அடையவுள்ளது. உயிர்களை சுட்டு பொசுக்கும் அளவிற்கு வெப்பத்தை உமிழும் சூரியனால்  பூமியின் அழிவு நிச்சயம். மேலும் புதன், வெள்ளி போன்ற கிரகங்கள் அழியும் ஆபத்தும் உள்ளதாம்.

கர்நாடக சங்கீதம் சில குறிப்புகள்

கர்நாடக சங்கீதம் குறித்து இன்றைக்கும் பரவலாக பல்வேறு கற்பிதங்கள் நிலவி வருகின்றன. உண்மையில் தமிழிசை தான் பிற்காலத்தில் கர்நாடக இசை என அழைக்கப்பட்டது. அதற்கான குறிப்புகள் சிலப்பதிகாரம் தொடங்கி பல பழந்தமிழ் நூல்களில் உள்ளன. ஆனால் வடமொழி பழைய இலக்கியங்கள் எதிலும் சாஸ்திரிய இசைக்கான குறிப்புகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. போலவே தமிழிசை குறித்த கல்வெட்டுகளும் சான்றுகளும் ஏராளமாக உள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது.எனவே ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவியிருந்தது கர்நாடக இசை எனப்படும் தமிழிசைதான். அது பிற்காலத்தில் பல்வேறு இசை வடிவங்களின் கலப்பால் தமிழிசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி என பிரிவுகளை கண்டது. கர்நாடக  இசையில் தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் மும்மூர்த்திகளாக போற்றப்படுகின்றனர். அதே போல தமிழிசைக்கும் மும்மூர்த்திகள் என அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோர் போற்றப்படுகின்றனர்.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago