முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தீப்பெட்டிக்கு முன்பாகவே லைட்டர் வந்து விட்டது தெரியுமா?

அறிவியல் எப்போதும் சிக்கலான கால வரிசையை கொண்டிருக்கும். எது எப்போது வெளிப்படும் என்பதை மனிதனால் யூகிக்க முடியாது. அதே போல தான் மிகவும் எளிமையான தீக்குச்சி தீப்பெட்டி போன்றவை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே லைட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அதான்ங்க... சிகரெட்களை பற்ற வைக்க நாம் பயன்படுத்துகிறோமே அந்த குட்டி சாதனம்தான்... 1816 இல் ஜெர்மனி வேதியியலாளர் ஜோகன் வுல்ப்காங் என்பவர் லைட்டரை கண்டு பிடித்து விட்டார்.  அதற்கு பின்னர் சில ஆண்டுகள் கழித்து 1827 இல் தான் தீப்பெட்டியும் தீக்குச்சியையும் பிரிட்டனை சேர்ந்த வேதியியலாளர் ஜான் வாக்கர் என்பவர் சல்பைடு, பொட்டாசியம் குளோரேட், பசை, ஸ்டார்ச் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கிறார். தொடக்கத்தில் தனது கண்டுபிடிப்புக்கு காங்கிரேவ்ஸ் என்று பெயரிட்டார். பின்னர்தான் அவை மேட்ச் தீப்பெட்டி, தீக்குச்சி என்ற பெயரை பெற்றன என்றால் ஆச்சரியம் தானே..

உப்புநீர் ஏரி

ரஷ்யா, ஈரான், துர்க்மெனிஸ்தான், அசர்பைஜான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளைத் தனது எல்லைகளாகக் கொண்ட காஸ்பியன் ஏரி 3 லட்சத்து 17 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவும், 78,200 கன கி.மீ கொள்ளளவும் கொண்டது. ஏறத்தாழ 120 நதிகள் காஸ்ப்பியனை நோக்கி பாய்கின்றன. இதில் வோல்கா நதிதான் மிகப் பெரியது.

விரைவில் வருகிறது

பிஎம்டபிள்யூவின் எவர்க்ரீன் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) பைக்குகளை பறக்கும் வகையில் வடிவமைப்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் மினியேச்சர் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்மார்ட் ஃபோன்

ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று தெரிவித்துள்ளது.

புலிக்கு ஆதரவு

அமெரிக்காவில் சின் சினாட்டியில் மிருக காட்சி சாலையில்  மலேசிய புலி ஒன்றால் ஒதுக்கப்பட்ட 3 பெண் குட்டிகளை மிருக காட்சி சாலை ஊழியர் தனது வீட்டுக்கு தூக்கி சென்று வளர்த்தார். அவரது வீட்டில் உள்ள 6 வயது ஆஸ்திரேலிய ஷெப்பர்டு நாய் 3 புலிக்குட்டிகளையும் தற்போது அன்புடன் பராமரித்து வருகிறது.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago