தாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தாய்லாந்து நாட்டில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் ஏரியில் வசிக்கும் 25-வயதான பெண் ஆமை ’ஒம்சின்’, மற்றவற்றைப் போல எளிதில் நீந்த முடியாமல் கஷ்டப்பட்டது. பின் இதனை சோதனை செய்து பார்த்ததில் இதன் வயிற்றில் அதிக அளவிலான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. அறுவைசிகிச்சை மூலம் ஆமையின் வயிற்றில் இருந்த சுமார் 5 கிலோ அளவு நாணயங்கள் எடுக்கப்பட்டன. இதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மொத்த நாணயங்களின் எண்ணிக்கை மட்டும் 915. இந்த அளவு கணத்தை வயிற்றில் சுமந்துகொண்டுதான் அந்த ஆமை வாழ்ந்து வந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய மத சடங்கிற்காக விட்டெறிந்த நாணயங்களை இந்த ஆமை முழுங்கியதுதான் இதற்கு காரணம்.
ஆடு, மாடுகளை விற்பது போல மனிதர்களை விற்பனை செய்வது உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள ஒன்றாகும். இந்தியா போன்ற ஒரு சில நாடுகளில் அரிதான வன விலங்குகளை வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றம். ஆனால் நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கனோ மாகாணத்தின் Kaduna நகரில் உள்ள 26 வயதான Aliyu Na Idris என்ற வாலிபர் ஒருவர் தன்னையே விற்பனை செய்வதாக விளம்பரம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதன் மூலம் அந்த செய்தி உலகம் முழுவதும் வைரலானது. இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம் விலை என்று போர்டில் எழுதி அதை கையில் பிடித்தபடி படத்துக்கு போஸ் கொடுத்தார். தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு அவர் உதவ முடியும் என்று நம்பினார். இதையடுத்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
பொதுவாக நாணயத்தின் மதிப்பு அதில் பொறிக்கப்பட்டுள்ள அளவுக்கே இருக்கும். கொஞ்சம் பழைய நாணயங்கள், தொல்லியல் நாணயங்கள் சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதுண்டு. அவற்றில் 1500 மதிப்புள்ள 20 அமெரிக்க டாலர் நாணயம் ஒன்று ரூ.57 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. 1933 இல் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த நாணயம் பெரிய அளவில் புழக்கத்தில் விடப்படவில்லை. சிறிய அளவே விடப்பட்டது. அதிலும் பலவற்றை உருக்கி விட்டனர். எஞ்சிய நாணயங்களை சேகரிப்பாளர்கள் வைத்துள்ளனர். அதில் ஒன்றுதான் கடந்த 2002 ஆம் ஆண்டு ரூ.57 கோடிக்கு விற்பனையானது. நாணய விற்பனையில் உலகிலேயே இதுதான் அதிக பட்சமாகும்.
அன்னப்பறவை என்றாலே நமக்கெல்லாம் பொதுவாக பால் போன்ற வெள்ளை நிற அன்னப் பறவைகள்தான் நினைவுக்கு வரும். நம்மூர்களில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த வெள்ளை நிற அன்னப் பறவைகள் தற்போது மிகவும் அருகி விட்டன. அவை அரிய வகை பறவையினங்களில் ஒன்றாக மாறிவிட்டன. தற்போது வட கொரியாவில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுதான் கருப்பு நிற அன்னப் பறவைகளை அதிக அளவில் இனப் பெருக்கம் செய்து, அதன் இறைச்சியை விற்பதன் மூலம் உணவுத்தட்டுப்பாட்டை போக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்புகிறது. இதனால் தற்போது வட கொரியாவில் கருப்பு நிற அன்னப்பறவையின் ராஜ்ஜியம் மேலோங்கத் தொடங்கியுள்ளது. அவற்றை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்யும் தொழில் மடமடவென வளர்ந்து வருகிறது. வெள்ளை அன்னப் பறவைகளைப் போலவே கருப்பு நிற அன்னப் பறவைகளும் பிரத்யேக குணங்களைக் கொண்டதாக உள்ளன. அவற்றின் இறைச்சி கருப்பு நிறத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. நம்மூர்களில் ஒரு சில இடங்களில் காணப்படும் கருமை கோழிகளை போன்றவைதான் இவையும். எனவே கருப்பு அன்னப் பறவைகள் இனப் பெருக்கத் திட்டத்தை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வந்தால். சிறுநீரில் புரதம் கலந்து வெளியாகிறதன் அறிகுறியாகும். காய்ச்சல், நீர்வறட்சி, உடல்நல குறைபாடு போன்றவை உண்டாகும் போது சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறி வரும். மஞ்சள் காமாலை அதிகரித்து இருப்பதை சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளிப்பட்டு காட்டிக் கொடுக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


