முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நோபல் விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய தலைவர் யார் தெரியுமா?

இந்தியாவிலிருந்து ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். அதன் பிறகு சர் சி.வி.ராமன், ஹர் கோவிந்த குரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென் வரை இந்தியர்கள் பலரும் நோபல் பரிசை வென்றுள்ளனர். இந்தியாவின் தேசப்பிதா எனப் போற்றப்படுபவரான காந்தி 5 முறை நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு விருது மறுக்கப்பட்டே வந்தது. 5-வது முறையாக 1948 இல் அவர் பரிந்துரைக்கப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார். 

கலாம் பெயர்

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய உயிரினம், பாக்டீரியா வடிவம் போன்றது. இந்த உயிரினம் பூமியில் காணப்படுவதில்லை. சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுபவை. இந்த உயிரினத்துக்கு மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பெயரை நாசா விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க சைக்கிளிங் சிறந்த பயிற்சி. தினமும் காலை, மாலை என இரு வேளைகள் சைக்கிளிங்கில் செல்லலாம். மேலும், வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு சைக்கிள்களில் செல்லுதல், வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் நீண்டதூரம் சைக்கிள் பயணம் போன்றவை மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மேலும் உடல் பருமனையும் குறைக்கலாம்.

கண்ணாடி பாதுகாப்பு

பெரும்பாலான ஏ.டி.எம் மெஷின்களில் திரைக்கு மேல் ஒரு வட்ட வடிவிலான கண்ணாடி ஒன்று இடம் பெற்றிருக்கும். அது பணம் எடுப்பவரின் உதவிக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும். அது அகலமாக பின்னாடி இருப்பதை உங்களுக்கு காட்டும் வகையில் இருக்கும்.இதன் மூலம், நீங்கள் ரகசிய குறியீடு எண் பதிவு செய்யும் போது யாராவது உங்களை பின்னாடி இருந்து வேவு பார்க்கிறார்களா, திருடர்கள் உள்ளே வருகிறார்களா? போன்றவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். 

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 சத்துக் குறைபாடு, தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு காரணம். மேலும், பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. பரம்பரையின் காரணமாகவும் நரை ஏற்படுவது உண்டு.

புதிய சிகிச்சை

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, வயதானவர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியை மேற்கொண்டது. வயதானவர்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றுவதுதான் அந்த முயற்சி. வயதானவர்கள், உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் முடிவுகள் நல்லவிதமாக வந்துள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago