புகாட்டி லா வொய்ச்சர் நொயர் உலகின் விலை உயர்ந்த கார் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கார்களை மட்டுமே உருவாக்குவது புகாட்டியின் திட்டங்களின் ஒரு பகுதியாகும். தற்போது ஒரே ஒரு நொயர் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது, அது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. முதலில் 2019 இல் மற்றொரு கார் தயாரிப்பு முடிந்து விடும் என குறிப்பிடப்பட்டாலும், புகாட்டி காரை உருவாக்க இன்னும் இரண்டரை ஆண்டுகள் தேவை என்று கூறப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு261 மைல் வேகம், மற்றும் 2.5 வினாடிகளில் 0-60 மைல் வேகத்தை எட்டக்கூடியது. ஏறக்குறைய புயலை போல சீறிப் பாயக் கூடிய இந்த காரில் உலகில் உள்ள அனைத்து கார்களை காட்டிலும் அதிகமான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன என்பது இதன் கூடுதல் சிறப்பு. இதை வாங்கியவரின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை என்ற போதிலும் வரிக்கு முன்பாக காரின் உள்ளடக்க விலை 12.4 மில்லியன் டாலர் என்றும் வரிகளுடன் 18.7 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.140 கோடி என்று சொல்லப்படுகிறது. அம்மாடியோவ்...
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது. நவராத்திரி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் அம்மனுக்கான விசேச பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தெலங்கானாவில் உள்ள மெகபூப்நகரில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வைபவங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தினர் சார்பில் அம்மனுக்கு ரூ. 44444444.44 (4 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 444 ரூபாய் 44 காசுகள்) மதிப்பிலான பணமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக 500,100,20 ரூபாய் பணத்தாள்கள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.
ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கச் சுரங்கத் தொழில் ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முன் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தங்கம் எகிப்து நாட்டில்தான் முதலில் தோண்டி எடுக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்; தங்கச் சுரங்கத் தொழிலின் பல்வேறு படிநிலைகளைக் (stages) காட்டும் சுவரோவியங்கள் அங்கு காணப்படுகின்றன. ஆற்றுத் தண்ணீரிலிருந்தும் தங்கம் பெறப்பட்டது; நீரிலிருந்து ஆற்று மணலைச் சலித்து, எடை மிகுந்த தங்கத் துகள்களை வடிகட்டி எடுத்தனர். கி.மு. 3000 ஆண்டுகளில் தங்க மோதிரங்கள் ஒரு வகை ஊதியமாகத் தரப்பட்டதாம். நாணயங்களாகத் தங்கம் வழங்கப்பட்டதோடு, அணிகலன்களாகவும் அது பயன்படுத்தப்பட்டது. சுமார் கி.மு.2000 ஆண்டுகளில் தரைக்கு அடியில் இருந்து தங்கத் தாதுப் பொருட்களைக் (ores) கண்டறிந்து, அவற்றிலிருந்து தங்கம் பெறப்பட்டது. தங்கம் அதன் தரத்திற்கேற்ப நாணயத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிரிட்டனில் இந்த நாணய மாற்றுமுறை 1821ஆண்டு அறிமுகப்பட்டது என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.
எந்த விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல்நலத்திற்கும், ஃபிட்னெஸுக்கும் ஏற்றது என்பதைக் குறித்து, டிஎன்ஏ மூலமாக கண்டறியும் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஎன்ஏ கிட் பரிசோதனை மேற்கொண்ட பின், நாம் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும், எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை எளிதில் அறியலாம். டிஎன்ஏ பரிசோதனை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருக்கிறது என்றும் எனினும், இதனால் கிடைக்கும் நன்மைகள் வணிக நோக்கில் அளவுக்கதிகமாகவும் மிகைப்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்துவரும் நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், விர்ச்சுவல் ரியாலிட்டி கேமிங்குடன் கூடிய உடற்பயிற்சி சாதனத்தை ஜெர்மனியைச் சேர்ந்த ஹைவ் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.ஐகாரோஸ் ஃப்ளையிங் பிட்னெஸ் மெஷின் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உடற்பயிற்சி சாதனத்தின் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டியில் விளையாடிக்கொண்டே உடற்பயிற்சி செய்ய முடியும். இதன் மூலம் உடல் முழுமைக்குமான உடற்பயிற்சி சாத்தியம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
திருச்செங்கோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.-வின் வெற்றி உறுதி : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
08 Oct 2025திருச்செங்கோடு : திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பீகார் தேர்தல்: தே.ஜ.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஸ்குமார் : பா.ஜ.க. அறிவிப்பு
08 Oct 2025பாட்னா : பீகாரில் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
-
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கையா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
08 Oct 2025ஈரோடு : கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
-
ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப்பரிமாற்ற செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
-
தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Oct 2025சென்னை : தலைமை பதவியில் 25 ஆண்டுகள் பயணம் செய்த பிரதமர் மோடிக்கு எடிப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது: பிரதமர் பேச்சு
08 Oct 2025புதுடெல்லி : முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
-
மகளிர் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியல்: கடைசி இடத்தில் பாகிஸ்தான்
08 Oct 2025கொழும்பு : மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திலும், இந்தியா ரன் ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும் உள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு செந்தில் பாலாஜி நிதியுதவி
08 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
08 Oct 2025திருச்சி : திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
வரும் 12-ம் தேதி முதல் மதுரையில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்
08 Oct 2025மதுரை : மதுரையில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
-
ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றும் புதிய வசதி ஜனவரியில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி வரும் ஜனவரியில் அறிமுகமாகவுள்ளது.
-
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர்: பெங்கால் அணியில் ஷமி, ஆகாஷ் தீப்
08 Oct 2025மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்
08 Oct 2025கரூர் : விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளது.
-
வழக்கறிஞர் மீது தாக்குதல்: திருமாவளவன் விளக்கம்
08 Oct 2025சென்னை : வழக்கறிஞர் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
-
கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் கைது
08 Oct 2025சென்னை : கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
-
தேசத்திற்காக விளையாடுவதில் பெருமை: சாம்சன்
08 Oct 2025மும்பை : இந்திய அணிக்காக நான் எதுவென்றாலும் செய்ய தயார்.
-
பாதசாரிகள் நடமாட்டத்திற்கு விதிகள்: அனைத்து மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
08 Oct 2025புதுடெல்லி : பொது இடங்களில் பாதசாரிகள் நடமாட்டத்துக்கு 6 மாதங்களில் விதிகள் வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள
-
ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பிலான நவிமும்பை விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
08 Oct 2025மும்பை : மும்பையை அடுத்த நவிமும்பையில் ரூ.19 ஆயிரத்து 650 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள விமான நிலையத்தின் முதல்கட்ட பணி நிறைவடைந்ததை அடுத்து அங்கு சர்வதேச விமான நிலையத்த
-
அருங்காட்சியகமாக மாறும் ரவீந்திரநாத் தாகூர் வீடு
08 Oct 2025புவனேஷ்வர் : ரவீந்திரநாத் தாகூர் வாழ்ந்த வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.
-
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை
08 Oct 2025கலிபோர்னியா : கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை மசோதா நிறைவேற்றியுள்ளது.
-
ஈரோடு, நாகமலை குன்றினை 4-வது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவித்தது அரசு
08 Oct 2025சென்னை : நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசு அப்பீல்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
08 Oct 2025புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நாளை (10-ம் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
-
இந்திய பொருளாதாரம் உயரும்: உலக வங்கி
08 Oct 2025புதுடெல்லி : இந்திய பொருளாதாரம் உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: சிராஜ், கே.எல்.ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் முன்னேற்றம்
08 Oct 2025துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கே.எல்.
-
பா.ம.க. நிறுவனர் ராமதாசை நலம் விசாரித்தார் திருமாவளவன்
08 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் ராமதாசை தொடர்பு கொண்டு திருமாவளவன் நலம் விசாரித்தார்.