முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குடியமர்த்தப்பட்ட தமிழர்கள்

கடந்த 1860-ம் ஆண்டு கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டனர். அந்நாட்டில் விளையும் கரும்பு, பருத்தி போன்ற வேளாண் பணிகளுக்காக தமிழகர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர். உலக நாடுகளில் வெளிநாட்டு மக்களை முதலில் குடியமர்த்திய முதல் நாடு தென் ஆப்பிரிக்காதான். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய மாநிலத்தவர்கள் குடியமர்த்தப்பட்ட போது இந்தியா ஒப்பீனியன் என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை தமிழில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஜூராசிக் பார்க்

சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் சுமார் 65 முதல் 145 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய எட்டு விலங்கு இனங்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளதன் மூலம் அங்கு உண்மையான ஜூராசிக் பார்க் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஷெய்ஜங் பகுதியை சேர்ந்த 11,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 82 டைனோசர் படிம தளங்கள், ஆறு டைனோசர் இனம் மற்றும் 25 வகையான படிம டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஷெய்ஜங் ஹைட்ராலஜி மற்றும் ஜியோலஜி நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளர் குழுவினர் இத்தகவலை உறுதி செய்துள்ளனர். 

கர்நாடக சங்கீதம் சில குறிப்புகள்

கர்நாடக சங்கீதம் குறித்து இன்றைக்கும் பரவலாக பல்வேறு கற்பிதங்கள் நிலவி வருகின்றன. உண்மையில் தமிழிசை தான் பிற்காலத்தில் கர்நாடக இசை என அழைக்கப்பட்டது. அதற்கான குறிப்புகள் சிலப்பதிகாரம் தொடங்கி பல பழந்தமிழ் நூல்களில் உள்ளன. ஆனால் வடமொழி பழைய இலக்கியங்கள் எதிலும் சாஸ்திரிய இசைக்கான குறிப்புகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. போலவே தமிழிசை குறித்த கல்வெட்டுகளும் சான்றுகளும் ஏராளமாக உள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது.எனவே ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவியிருந்தது கர்நாடக இசை எனப்படும் தமிழிசைதான். அது பிற்காலத்தில் பல்வேறு இசை வடிவங்களின் கலப்பால் தமிழிசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி என பிரிவுகளை கண்டது. கர்நாடக  இசையில் தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் மும்மூர்த்திகளாக போற்றப்படுகின்றனர். அதே போல தமிழிசைக்கும் மும்மூர்த்திகள் என அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோர் போற்றப்படுகின்றனர்.

கன்ன சுருக்கங்களை வைத்து பொய் சொல்வதை கண்டு பிடிக்கும் கருவி

போலீஸாரின் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையை கூறவில்லை என்றால் லை டிடெக்டர் என்ற கருவி மூலம் மருத்துவ ரீதியாக உண்மையை வரவழைக்க முயற்சிப்பர். பெரும்பாலான நாடுகளில் இந்த முறைக்கு அனுமதி கிடையாது. இது அந்த நபரின் அனுமதியின்றி மருந்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பலத்த எதிர்ப்புகள் உள்ளன. தற்போது இதற்கு முடிவு கட்டும் வகையில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலை கழக பேராசிரியர் டினோ லெவி என்பவர் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். இது பொய் சொல்பவரின் கன்னங்களில் ஏற்படும் சுருக்கம் மற்றும் அதிர்வுகளை கணக்கிட்டு, அவர் பொய் சொல்கிறார் என்பதை காட்டிக் கொடுத்து விடும். இந்த தசை சுருக்கங்களை முன்பு எந்த சென்சராலும் கண்டறிய முடியவில்லை, ஆனால்,ஒரு இஸ்ரேல் நிறுவனத்துக்கு தனது புதுமையான எக்ஸ்ரோடு கருவியை விற்ற பேரா.யேல் ஹனைன் என்பவரின் கருவி இதை மிகச் சரியாக கணித்துள்ளது. சுமார் 75 சதவீத வெற்றியை இது அளித்துள்ளதாக அந்த குழுவினர் கூறுகின்றனர். இதற்காக முகத்தில் ஒட்டப்படும் சிறிய ஸ்டிக்கர்களில் இருக்கும் எக்ஸ்ரோடுகள் இவற்றை கணித்து சொல்லிவிடும் திறன் படைத்தவையாக உள்ளன. இனி வழக்கு விசாரணைகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என நம்பலாம்.

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago