முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மூட நம்பிக்கை

மும்பை, பைகுலாவில் உள்ள மிருக காட்சி சாலையில் மலைப்பாம்புகள் இருக்கின்றன. பாம்புகள் படுத்துக்கிடக்க செயற்கை பாறைகளால் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் காசுகளை பாம்பின் மீது காசுகளை வீசுவது தெரிந்தது. காசை மலைபாம்பு மீது எறிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாழ்க்கை சூப்பராக இருக்கும் என்பதால் அப்படி செய்கிறார்களாம்.

மணல், sand

பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா..  கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்த படி கரையில் உள்ள கற்களையெல்லம் அரித்துக் கொண்டே இருக்கின்றன. சிறு சிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும் போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.

அம்மனுக்கு ரூ.44444444.44 மதிப்பிலான பணமாலை

நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது. நவராத்திரி அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் அம்மனுக்கான விசேச பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் தெலங்கானாவில் உள்ள மெகபூப்நகரில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வைபவங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஆரிய வைசிய சங்கத்தினர் சார்பில் அம்மனுக்கு ரூ. 44444444.44 (4 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரத்து 444 ரூபாய் 44 காசுகள்) மதிப்பிலான பணமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக 500,100,20 ரூபாய் பணத்தாள்கள் மட்டுமே அதில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அந்த படம் நெட்டில் வைரலாகி வருகிறது.

மவுன்டெயின் க்ளைம்பர்

மவுன்டெயின் க்ளைம்பர் பயிற்சி மூலம், இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள சதை குறையும். முழு உடலும் வலுப் பெற உதவும். முதுகுவலியைக் குறைக்கும். உடலின் சமநிலைத்தன்மை அதிகரிக்கும். ஹை நீ  பயிற்சி மூலம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வியர்வையை உண்டாக்கும். கைகால்களின் சீரான இயக்கத்துக்கு உதவும்.

பிரபலமான தலங்கள்

உலகுக்கே காதலை போதித்த காமசூத்ரா எழுதப்பட்ட நாடு இந்தியா. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்து கோயில்களில் அற்புதமாக காதலை வெளிப்படுத்தும் சிற்பங்களை ஏராளம் காணலாம். அவற்றில் காமக்கலையினை காட்சி வடிவமாக பிரதிபலிக்கும் கட்டிடக்கலை அதிசயம் கஜுராஹோ. இதன் காரணமாக இங்கு வெளிநாட்டவர் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது.

யானையா? மனிதனா? வலுக்கும் மோதல்

மாறி வரும் சூழல் காரணமாக பல் உயிர் பெருக்க சுழற்சி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு புவி வெப்பமயதால், கார்பன் எமிசன் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் இயற்கையின் அழிவுக்கு மனிதனின் பேராசை மட்டுமே காரணமாக இருக்க முடியும். இதனால் தென்னிந்தியாவில் மிகப் பெரிய பல்லுயிர் பெருக்க வன வாழ்விடமான மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள் மிகுந்த அபாயத்தை எதிர் கொண்டுள்ளன. இதற்கு முக்கிய உதாரணமாக யானைகளுக்கும் மனிதனுக்கு ஏற்பட்டுள்ள முரண்களை சூழலியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். கடந்த 2019 வரை முந்தைய 5 ஆண்டுகளில் மட்டும் 2300க்கும் அதிகமான மக்கள் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் கூறுகின்றன. அதிலும் அதே கால கட்டத்தில் 500க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளன. அதில் குறிப்பாக 333 யானைகள் மின்சாரம் தாக்கியும், சுமார் 100 யானைகள் வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன என்பது இதன் அவலத்தை நமக்கு தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago