Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நல்லது எண்ணெய்

தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

உலகில் தினமும் எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன என தெரியுமா?

சுற்றுச்சூழலுக்கு மிகவும் உயிர் நாடி மரங்களும் தாவரங்களும். அவற்றை மனிதன் நாள்தோறும் அழித்து வருகிறான். இதனால் கொடிய நோய்களால் அழிந்தும் வருகிறான். உலகம் முழுவதும் சுமார் 3.04 டிரில்லியன் மரங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அவற்றில் சுமார் 27 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. அதுவும் எதற்காக, கழிவறை காகிதம் தயாரிப்பதற்காக. அவ்வாறு பார்த்தால் ஆண்டுக்கு 9.8 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன. தோராயமாக ஒரு மறுசுழற்சி கொண்ட காகிதத்தில் அச்சடிக்கப்படும் நியூ யார்க் டைம்ஸ் மூலமாக 75 ஆயிரம் மரங்களை காப்பாற்ற முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

செலவு குறைவாம்

உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பெங்களூரு 3-வது இடத்தையும், சென்னை 6-வது இடத்தையும், மும்பை 7-வது இடத்தையும், டெல்லி 10-வது இடத்தையும் பிடித்துள்ளன. கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அல்மாட்டி உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கனவுகள் என்ன நிறத்தில் வருகின்றன என்பது தெரியுமா?

உறங்கும் போது மனிதர்கள் கனவு காண்பது வழக்கம். 12 சதவீதம் பேர் கருப்பு வெள்ளையாகவே கனவு காண்கிறார்கள். பார்வை இல்லாதவர்களாலும் கனவு காண முடியும். நாம் ஏற்கனவே பார்த்தவரின் முகத்தை மட்டுமே கனவில் காண முடியும். விழித்து எழுந்த 5 நிமிடத்தில் 50 சதவீதம் கனவுகள் நமக்கு மறந்து போய் விடும். ஒரு சராசரி மனிதன் ஆயுளில் 6 ஆண்டுகள் கனவிலேயே செலவழிக்கிறான். நீங்கள் எங்கிருந்தாலும் ஒரு இரவில் சராசரியாக 4 முதல் 7 கனவுகள் வரை காண முடியும்.

ஹேக்கிங்கைத் தவிர்க்க...

பேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களை ஹேக் செய்யமால் தவிர்க்க பாஸ்வேர்டுகளுடன் யுஎஸ்பி வடிவிலான திறவுகோல் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ’செக்யூரிட்டி கீ’ என்று பெயரிடப்பட்டுள்ள இதை கணினியின் யுஎஸ்பி போர்ட் மூலம் இணைத்து உங்கள் அக்கவுண்ட்டில் லாக்இன் செய்து கொள்ளலாம்

கண் எரிச்சல்

கணினி, லேப்டாப், ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் கண்ணெரிச்சலை போக்க, வெங்காயம் மற்றும் புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்துக் எடுத்து, பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் காய விட்டு, குளித்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நல்ல குளிர்ச்சியடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago