செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் ஒரு நாள் கண்டிப்பாக இக்ளூஸ் வீடுகளில் தான் வாழ்வார்கள். விண்வெளியின் உள்ள கதிர்வீச்சில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, செவ்வாய் கிரகத்தின் அடியில் இருந்து எடுக்கப்படும் ஐஸ்-சை வைத்து மேற்பரப்பில் இந்த வீட்டை உருவாக்க உள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் விண்வெளியில் வாழ்வதற்கு பூமியில் இருந்து பொருட்களை எடுத்து செல்லாமல், செவ்வாய் கிரகத்தின் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைத்துக்கொள்ளலாம். மேலும், இந்த வீடுகள் வேலை பார்ப்பதற்கும், பொழுதுபோக்குவதற்கும், மற்றும் உணவு தயாரிப்பதற்கும் உட்பட பலவற்றிற்கும் இது உபயோகப்படும். ஒவ்வொரு வீடுகளும் 4 பேர் தங்குவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்படவுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது. ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர் பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசா வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
கூகுள் மற்றும் லெவி நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ஸ்மார்ட் ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளன. இதன் சிறப்பம்சம், தொலைபேசி அழைப்புக்களை பயன்படுத்த மற்றும் பாடல்களைக் கேட்கும் வகையில் உள்ளதுதான். இந்த ஸ்மார்ட் ஜாக்கெட்டின் கை பகுதியில் ஸ்லைடு பொருத்தபட்டிருக்கும் இதன் மூலம் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் பற்றிய விவரம் கிடைப்பதை நாம் உணரலாம். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஜாக்கெட் தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் கிடைக்கப்பெறும்போது ஒரு வகையான அதிர்வினை ஆடைகளில் ஏற்படுத்தி தெரிவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ப்ளூடூத்துடன் ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படும், உலகின் மிக ப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்-ஐ, 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரஞ்சு கயானாவிலிருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்த நாசா முடிவு செய்துள்ளது. அகசிவப்பு கதிர்களைக் ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படும்.ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் தொலை தூரத்தில் இருக்கும் சிறிய கிரகங்களையும் நட்சத்திரக்கூட்டங்களையும் காணமுடியும்.
கணினி யுகம் வளர வளர அதன் பயன்பாடுகளும் கற்பனைக்கெட்டாத அளவுக்கு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் 3 அல்லது 3 எம்பி கொண்ட பிளாப்பி டிஸ்க் சேமிப்பகமே மிகப் பெரியதாக கருதப்பட்டது. காலப் போக்கில் 1 ஜிபி வந்து தற்போது டெர்ரா பைட் அளவுக்கு சேமிப்பகங்களும், ஹார்ட் டிரைவ்களும் வந்து சந்தையை கலக்கி வருகின்றன. 1 ஜிபி என்பது 1024 எம்பி. அதேபோல 1 டெர்ரா பைட் என்பது 1024 ஜிபி. அதேபோல தற்போது புதிதாக வந்துள்ள பேட்டா பைட் என்பது 1 பிபி அதாவது ஒரு பேட்டா பைட் என்பது 1024 ஜிபிக்கு இணையானது. இதன் அளவை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் 13.3 ஆண்டுகள் ஓடக் கூடிய உயர்தர ஹெச்டி வீடியோக்களை இதில் சேமிக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள வேறு ஒரு வழியும் உள்ளது. அதாவது வரலாறு தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் மனிதனால் அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் 50 பிபி டிரைவில் அடக்கி விடலாம் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது மனித வரலாறு என்பது 50 பிபி. அம்மாடியோவ்.
குழந்தைகள் காது பிரச்சனையால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். காதுகளில் ஏற்படும் தொற்றுகளுக்கு பூண்டு சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. இந்த பூண்டு சாற்றினை குழந்தைகளின் காதுகளில் 2 துளி விட்டால் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மகளிர் உரிமைத் தொகை 2-ம் கட்ட விரிவாக்கம்: நாளை தொடங்கி வைக்கிறார்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
10 Dec 2025சென்னை, 2-ம் கட்ட மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
-
கூட்டணி குறித்து முடிவெடுக்க இ.பி.எஸ்.சுக்கு அதிகாரம்: அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக அ.தி.மு.க.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
9-வது நாளாக தொடர்ந்த சிக்கல்: 14 இண்டிகோ விமானங்கள் ரத்து
10 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 14 இண்டிகோ விமான சேவைகள் நேற்றும் (டிச. 10) ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது.
-
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி
10 Dec 2025சென்னை, காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி: பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு
10 Dec 2025புதுடெல்லி, யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டதைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
-
மீண்டும் இ-மெயில் மூலம் ராஜஸ்தானில் அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் உள்ள பிரபல அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டின் ஜெய்ப்பூர் கிளை ஆகியவற்றிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
10 Dec 2025சென்னை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
ஓய்வு பெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு ரூ.12,000 மாத ஓய்வூதியத்திற்கான ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
10 Dec 2025சென்னை. ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்வு: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை
10 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.96,240-க்கு விற்பனையானது.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி: இந்திய அணி புதிய சாதனை
10 Dec 2025சென்னை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
அபார வெற்றி....
-
4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகள் அமைச்சர் வழங்கினார்
10 Dec 2025சென்னை, 4 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
10 Dec 2025சென்னை, தமிழகம் முழுவதும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நேற்று தொடங்கிய நிலையில், எஸ்.ஐ.ஆர்.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது: சி.வி.சண்முகம்
10 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
-
ஆஸி.,யில் அமலுக்கு வந்தது 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகங்ளை பயன்படுத்த தடை
10 Dec 2025கென்பரா, 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான தடை அமலுக்கு வந்தது.
-
3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்கள்: ஜஸ்ப்ரிட் பும்ரா புதிய சாதனை
10 Dec 2025புவனேஷ்வர், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை ஆய்வு செய்த தொல்லியல்துறை குழு
10 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
-
ஆணவம் பிடித்த டெல்லிக்கு தமிழ்நாடு என்றைக்குமே அவுட் ஆப் கன்ரோல்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
10 Dec 2025சென்னை, எந்த ஷா வந்தாலென்ன..? எத்தனை திட்டம் போட்டாலென்ன...?
-
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை
10 Dec 2025திருப்பதி, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
-
உணவு தானியங்களை சேமித்து வைக்க 7 மாவட்டங்களில் ரூ.332.46 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
10 Dec 2025சென்னை, ரூ.13.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்களை திறந்து வைத்து, உணவு தானியங்களை சேமித்து வைக்க திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ரூ.3
-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நில அளவர்கள், வரைவளர்கள் 476 பேருக்கு பணி நியமன ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
10 Dec 2025சென்னை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்
-
ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை: கோலி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்
10 Dec 2025துபாய், ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய முன்னணி வீரர் 2 இடங்கள் முன்னேறி கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
10 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



