தரமான ஹேர்டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம். டைகளில் உள்ள கெமிக்கல் தலையிலுள்ள சருமத்திற்கு ஒரு அந்நிய உணர்வை தருகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடனே டை பட்ட இடங்களுக்கு விரைந்து வருவதால் அலர்ஜி மற்றும் எரிச்சல் உண்டாகுகின்றன.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அல்பேனியாவில் பிறந்து கிறிஸ்துவத்தை பின்பற்றிய அன்னை தெரசா கொல்கத்தாவில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டியை தொடங்கி ஏழைகளுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிறமும், ஓரத்தில் 3 நீல நிற கரையும் கொண்ட சேலை அவரது அடையாளமாகவே மாறின. பின்னர் அவரை பின்பற்றி அந்த சாரிட்டியில் உலகம் முழுவதும் பணியாற்றி வரும் கன்னியாஸ்திரிகளும் அந்த புடவையையே சீருடையாக ஏற்று அணிந்து வருகின்றனர். இந்த தனித்தன்மை வாய்ந்த புடவையின் டிசைனை அன்னை தெரசா தான் உருவாக்கினார். தற்போது அதற்கு அறிவுசார் சொத்துரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதை யாரும் வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என அந்த அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது. லாப நோக்கம் அற்ற பொது சேவைகளுக்கு மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 வயதுடைய ‘ஸ்டான் லார்கின்’(Stan Larkin) என்ற வாலிபருக்கு தான் 2014 ஆம் ஆண்டு மிச்சிகன் மெடிக்கல் யூனிவெர்சிட்டியில் (University of Michigan Frankel Cardiovascular Centre)செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இவர் அமெரிக்க்காவின் மிச்சிகன் நகரை சேர்ந்தார். ஸ்டான் லார்கின் பேமலியல் கார்டியோமயோபதி(familial cardiomyopathy) என்ற இதய நோயினால் பாதிக்கப்பற்றிருந்தார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இவருக்கு இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையெனில் இவர் இறந்துவிடுவார் என டாக்டர்கள் கூறினர். அவருக்கு உடனடியாக மாற்று இதயம் கிடைக்காததால், சின்கார்டிஓ என அழைக்கப்படும் செயற்கை இதயத்தை பொறுத்த முடிவு செய்துள்ளனர். இது சீரான ரத்த அழுத்தத்தை செயற்கையாக உடலுக்கு கொடுக்குப்பதற்கும் உதவுகிறது. இதற்காக 13 கிலோ எடையுடைய கம்ப்ரெஸ்ஸரை தனது பையில் எடுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். இந்த கம்ப்ரெஸ்ஸிலிருந்தான் இரு டியூபுகள் வழியாக சுத்தம் செய்யப்பட்ட காற்று வயிற்றின் வழியாக செயற்கை இதயத்துடன் பொருத்தப்பட்டுள்ளது .இந்த கருவி 24 /7 மணி நேரமும் அவர் உடம்பிலேயே இருக்க வேண்டும் இல்லையெனில் அடுத்த நிமிடத்தில் உயிர் போய்விடும். மாற்று இதயம் கிடைக்காததால் 17 மாதங்கள் அதாவது 555 நாட்கள் அவர் இவ்வாறே உயிர் வாழ்ந்தார். பின்னர் ஒரு விபத்தில் இறந்தவரின் இதயம் இவருக்கு மாற்றி பொருத்தப்பட்ட பிறகு இவரிடமிருந்து இந்த கருவி அகற்றப்பட்டது.
ஒரு நிறுவனம் அல்லது ஒரு கம்பெனியில் நீங்கள் அதிகப்பட்சமாக எத்தனை ஆண்டுகள் வேலை செய்து உள்ளீர்கள்? என்று கேட்டால், நம்மில் பலரும் விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்டுகளே சொல்வோம்;ஆனால் பிரேசிலைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேனுக்கு, அவரது பணியிடத்துடனான தொடர்பு மிகவும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.100 வயது மிக்க வால்டர் ஆர்த்மேன் ஒரே நிறுவனத்தின் கீழ் 84 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இதுவொரு உலக சாதனையும் ஆகும். ஆம்! இந்த 100 வயது மிக்க முதியவர், "ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை செய்தவர்" என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்! 1938 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் பிரேசிலில் உள்ள சான்டா கேடரினாவில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் 'ஷிப்பிங் அசிஸ்டென்ட்' ஆக பணியாற்றத் தொடங்கிய வால்டர் ஆர்த்மேன், தன் கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் உதவியுடன் மெல்ல மெல்ல தனக்கான வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார். இப்படியாக 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து சாதனையும் படைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. கோயிலில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார். தமிழகச் சைவக் கோயில்களில் தாராசுரத்தில் மட்டுமே அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் முழுத்தொகுப்பாக காணப்படுகின்றன. தாராசுரம் தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று.
பூம் நிறுவனம் உருவாக்கியுள்ள சூப்பர்சோனிக் எக்ஸ்பி1 விமானம் ஒலியையே மிஞ்சும் விமானமாம். மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ள இதில் விமானி அறை தவிர்த்து, 44 பேர் பயணிக்கலாம். உதாரணத்திற்கு, நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு பயணிக்க 7 மணி நேரம் எனில், இவ்விமானத்தில் 3.5 மணிநேரம் பயணித்து விடலாம். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சிட்னிக்கு செல்ல 15 மணி நேரமாகிறது என்றால் சூப்பர் சோனிக் எக்ஸ் பி1 மூலம் 6.45 மணி நேரத்தில் சென்று விடலாம். சூப்பர் சோனிக் விமானத்திற்கு முன்பு அந்த இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது கான்கார்டு விமானம்தான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது: அமெரிக்கா
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. மேக் இந்தியா திட்டத்தை மேலும் வலுவாக்குகிறது: பிரதமர் மோடி..!
07 Feb 2026டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள் எவை?
07 Feb 2026புதுடில்லி, அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ள
-
தங்கம், விலை மீண்டும் உயர்வு
07 Feb 2026சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –07-02-2026
07 Feb 2026 -
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தான் அதிர்ச்சி
07 Feb 2026நியூயார்க், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது
-
அ.ம.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார் டி.டி.வி.தினகரன்
07 Feb 2026சென்னை, சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும்: மத்திய ரிசர்வ் வங்கி கணிப்பு
07 Feb 2026டெல்லி, 2025-26 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையை வாய்ப்பு கிடக்க உள்ளது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை
07 Feb 2026டெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததால் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிக
-
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு விரைவில் ரூ.25,000 இழப்பீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
07 Feb 2026மும்பை, டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையின் 85 சதவீதம் வரை வழங்கப்படும்.
-
இந்தியா மீதான 25 சதவீதம் வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்: ஜூன் வரை கெடு விதித்த அமெரிக்கா: ஜெலன்ஸ்கி
07 Feb 2026கீவ், ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு
-
ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ட்ரம்ப்..!
07 Feb 2026வாஷிங்டன், ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப், இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் போட்டி?
07 Feb 2026சென்னை, விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா உள்பட த.வெ.க. விருப்ப மனுவில் கேட்கப்பட்ட 36 கேள்விகள்
07 Feb 2026சென்னை, வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது உள்ளிட்ட த.வெ.க. விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை: டெல்லியில் ராகுல் இன்று ஆலோசனை
07 Feb 2026சென்னை, தமிழக சட்டசபையை முன்னிட்டு தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
-
இனி அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
07 Feb 2026சென்னை, அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு த
-
வார ராசிபலன்
07 Feb 2026


