எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தி மொழி எதிர்ப்பு நடத்தி உயிர்நீத்த மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களின் ஆணைக்கிணங்க, ஆவடி எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.பி.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன் முன்னிலை நிகழ்த்தினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., பேசியதாவது:
மொழிபோரில் உயிர்நீத்த தியாகிகளுக்காக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த தகுதியான ஒரே இயக்கம் கழகம் மட்டுமே. மொழி, இனம், இன்றி தமிழக நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாடுபட்டவர்கள் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மொழி இனம் என்று கூறிக்கொண்டு கூறிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் தி.மு.க.விற்கு வீர வணக்கநாள் கூட்ட தகுதியோ, தரமோ கிடையாது. மக்கள் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் துரோகம் செய்து தன் குடும்ப நலனுக்காக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திய சுயநலக்கும்பல் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் ஊழல் நடத்தியவர்கள். கருணாநிதி எவ்வழியோ அவ்வழியே ஸ்டாலின் எந்த காலத்திலும் தமிழக முதலமைச்சராக வரமுடியாது. தன் தந்தையே ஸ்டாலின் முதல்வராக வருவதை ஏற்காததை இந்த நாடே அறியும்.
அரசியல் போர்வையில் நாட்டை ஏமாற்றும் கருணாநிதியை போல் இன்று ஸ்டாலின் செயல் தலைவர் எனறு தானே பதவி சூட்டிக் கொண்டு அரசியலில் விலாசம் தேடி வருகின்றார்.
ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போட்ட தி.மு.க.&காங்கிரஸ்க்கு பீட்டா தடை போட்டபோது ஆட்சி அதிகாரத்தை பெற்றிருந்த தி.மு.க., காங்கிரஸ் இன்று வரை ஒன்றும் செய்யவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஜல்லிகட்டு பிரச்சினையில் மத்திய அரசிடம் காட்சி பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்கள். உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டையாக இருந்தது. 17 வருடங்கள் மத்திய, மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்த தி.மு.க. தமிழக நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக நலன்களையும், உரிமைகளையும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு தமிழினத்திற்கு துரோகம் இழைத்ததுதான் இவர்களது ஆட்சி காலத்தின் சாதனையாகும்.
தி.மு.க.வின் அரசின் நிர்வாகமின்மைக்கு காரணம்தான் கச்சத்தீவு தாரை வார்த்துக் கொடுத்தது, முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் முட்டுக்கட்டை, காவேரி நதிநீர் பிரச்சினையில் கள்ளத்தனம் என தமிழகத்தின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் அனைத்திற்கும் காரணம் தி.மு.க. தான் காரணம். இந்த அனைத்து பிரச்சினைகளிலும் இவர்களின் குடும்பம் செழிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதில் அவர்களின் நிர்வாகத்திறன் நூறுசதவீதம் செயல்பட்டிருக்கிறது.
ஆனால்
தமிழக நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், ஜீவாதார பிரச்சினைகளுக்காவும் யாரும் குரல் கொடுக்காமலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மத்திய அரசு தடைகளை உடைத்தெரிந்து, உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்றிருக்கிறார். காவேரி நதிநீர் பங்கீடை அரசிதழில் வெளியிடச் செய்தார்கள். மீனவர்கள் நலன் கருதி கச்சத்தீவு பிரச்சினையில் அதன் உரிமையை கோரியவர், தேசிய நலன், தமிழக நலனில் குரல் கொடுத்து அதற்காக இறுதி வரை போராடி வெற்றி பெற்றவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
மற்ற மாநிலங்கள் புரட்சித்தலைவி அவர்கள் ஆட்சியில் பெற்ற உரிமைகள், முனைப்பான திட்டங்களுக்காக பாராட்டியுள்ளார்கள். இதுதான் கழக அரசின் சாதனைகள்.
இதுபோன்ற எந்தவித திட்டங்களை தி.மு.க. ஆட்சி செய்ததுண்டா? ஒன்றுமே இல்லை. மத்திய அரசு தமிழக நலன்களை அடகு வைத்த கருணாநிதி மீது போட்ட சர்காரியா கமிஷன் ஊழலுக்காக ஆட்சி இழந்தவர்தான் கருணாநிதி. இப்படி ஊழலுக்காவும், தேச விரோத செயலுக்காகவும் ஆட்சி இழந்த ஒரே கட்சி தி.மு.க.
17 லட்சம் தொண்டர்கள் கொண்ட இயகத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக ராணுவ கட்டுபாட்டுடன் வழி நடத்தினார். இந்தியாவிலேயே மிகப்பெரிய 3வது பெரிய கட்சியாகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் அதிக எம்.பி.க்கள் கொண்ட மாபெரும் இயக்கத்தை உருவாக்கியவர் அம்மா அவர்கள். இதனை நாளை கழக பொதுச்செயலாளர் சின்னம்மா தலைமையில் இந்தியாவிலேயே முதன்மை கட்சியாகவும், நாளை நாட்டை வழி நடத்தும் மாபெரும் இயக்கமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசியுடன் உருவாகும். இந்த இயக்கத்தை அழிக்கவும், கட்சியில் குழப்பத்தை உருவாக்கவும் கருணாநிதி விட்டு சென்ற பணியை அவரது வாரிசு செயலற்ற தலைவர் ஸ்டாலின் நிகழ்த்த துடிக்கின்றார். ஜல்லிக்கட்டுக்கு முட்டுகட்டைக்கு காரணம் தி.மு.க.வே பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஸ்டாலின் போராட்ட போர்வையில் மாணவ சமுதாயத்தை தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தும் கேவலமான நி¬யில் உள்ளார்.
அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் ஆறு கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி ஜல்லிகட்டு அவசர சட்டத்தை, சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை நீக்கிய அம்மா ஆசிபெற்ற முதலமைச்சர் அமைதி, அடக்கம், பொறுமையுடன் தமிழ் தேசியத் தலைவராக எளிமையான வழியில் அறச்செயலில் ஜன நாயக முறையில் வெற்றி கொடி நாட்டியது தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சி. மேலும் மகுடம் சூட்டுகின்ற வகையில் செயல்படாத நாடே பாராட்டுகிறது.
தமிழக நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காகவும் வாழ்ந்த தியாக தீபங்கள் இவர்கள் நல்லாசியுடன் அம்மா ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ளமுடியாத தி-.மு.க. மற்றும் தீயசக்திகள் சதிகள், சூழ்ச்சிகள் மூலமாக ஆட்சியை வீழ்த்திவிடலாம் என பகற்கனவு கண்டு கபட நாடகத்தை அறங்கேற்றம் செய்து வருகின்றனர்.
மாணவ சமுதாயத்தை தூண்டிவிட்டு தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த தி.மு.க. கைக்கூலிகளை ஏவிவிட்டும், தி.மு.க. கட்சிகாரர்கள் மாணவர்கள் நடுவில் ஊடுருவிய தி..மு.க. காரர்கள் சுயரூபத்தை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு முட்டுக்கட்டைக்கு காரணமான தி.மு.கவும். காங்கிரஸ் இன்று மக்களை ஏமாற்ற கபட நாடகம் நடத்தி வருகின்றனர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் நீலிக்கண்ணீர் வடித்தும் தீயசக்திகள் நடத்திய சதிகளுக்கு விரைவில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
தமிழக மக்கள் கருணாநிதி செய்த துரோகத்தை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். தமிழின துரோகி என்று உலக தமிழ் சமுதாயத்தால் சித்தரித்த கருணாநிதியை எந்த தமிழ்சமுதாயமும் எந்த காலத்திலும் மன்னிக்காது. கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இன்று கபட நாடகம் நடிக்கும் தி.மு.க.வின் அட்டூழியத்தை நாட்டுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசிபெற்ற சாதாரண எளியோன் அமைதி, அடக்கம், பொறுமையை தாரக மந்திரமாக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் மூன்று முறை அம்மா அவர்கள்ஆசியுடன் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு இன்று குடியரசு நாளில் தேசியக் கொடியை ஏற்றுகின்றார். இதுதான் அம்மா அவர்களின் ஆட்சி. சமத்துவ ஜல்லிக்கட்டு என்று சொல்லி வன விலங்குகளுக்கு ஜாதி உணர்வு பேசி அரசியல் பிழைப்பு நடத்தும் கேவலமான செயல் தலைவர் ஸ்டாலின். இவர்கள் கனவு என்றுமே பலிக்காது.
மக்கள் நலன் ஒன்ற தன் நலன் என்று பாடுபட்டு வரும் புரட்சித்தலைவி அம்மா ஆசி பெற்ற ஆட்சி மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு பொற்கால ஆட்சி வழங்கி வரும் இதனை ஓர் ஸ்டாலின் அல்ல, ஓர் ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் தமிழகத்தில் முதலமைச்சராக முடியாது. என்றுமே அம்மா ஆட்சிதான் தொடரும்.
இவ்வாறு கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் சின்னய்யா,, தலைமைக் கழகப் பேச்சாளர் ராமராஜன் காசு.ஜனார்த்தனம், திருவேற்காடு பா.சீனிவாசன், கே.குப்பன், புலவர் ரோஜா, அஜெக்ஸ் பரமசிவம்,மகேஷ்பிரபு பெருமாள், பி.ராஜேந்திரன், என்.அய்யனார், கே.கிருஷ்ணன், கோளடி மகேந்திரன், அண்ணா தொழிற்சங்க முல்லை தயாளன்,முகவை சுந்தரம், எஸ்.தருமலிங்கம், பி.கார்மேகம், ஆர்.சுப்பிரமணி, பேரழகன், பி.வேலாயுதம், கே.கிருஷ்ணன், எஸ்.தருமலிங்கம், கூ.வே.பரமசிவம், திருவொற்றியூர் பால்ராஜ், பாத்திமா பீவி, தாராசிங், கே.குமரன், எஸ்.அப்துல்ரபீக், வி.வி.கிரிதரன், சிவசங்கரன், பரமேஸ்வரன், புரட்சி கோபி, எஸ்.மணிவண்ணன், வெங்கடேசன், ஆதிகேசவன், மார்க்ராஜ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, காமராஜ் ரவி, எம்-.ஆர்.ஜானகிராமன், தங்ககுணசேகரன், ஏ.எம்.சுல்தான்,ஏ.எம்.ஸ்.முஸ்தபா,பாடி நாகராஜ்,, வழக்கறிஞர் நிர்மல்குமார், வழக்கறிஞர் அறிவரசன், முகவை சுந்தரம், பானுமதி சிகாமணி, வழக்கறிஞர் வ்கிிஜ்யய்ரகுமார்,முல்லை சித்தார்த்வெங்கட்,கார்த்தி,
அப்துல்காதர்.வினோத்,உட்பட பலர், கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி செயலாளர் எம்.டி.மைக்கேல்ராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.