எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளத்தில் எதிரிகள் நமது கழகத்தை வீழ்த்த முடியாததற்கான காரணம் அம்மாவின் அஞ்சாமையா அல்லது அம்மாவின் ஆளுமையா என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. நகர் கழக செயலாளர் என்.வி.ராதா தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் வரவேற்றார். இப்பட்டிமன்ற நடுவராக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் இருந்தார். இப்பட்டிமன்றத்தை துவக்கி வைத்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசினார். அவர் பேசும், புரட்சித்தலைவர் கழகத்தை தோற்றுவித்தார். 1977ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து 10 ஆண்டுகாலம் சத்துணவு திட்டம், முதியோர் பென்சன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார். அவருடைய மறைவுக்க பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தின் பொதுச்செயலாளராகி 17 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட நமது இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் நலனுக்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி, கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் நிதி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் கூற்றான ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்போம் என ஏழைகளை சிரிக்க வைத்தார். இவருடைய நல்லாட்சி தொடர வேண்டுமென்று 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற நமது கழகத்தை 37 இடங்களில் தமிழக மக்கள் வெற்றி பெற செய்தனர். 32 ஆண்டுகளுக்கு பின் ஆளும் கட்சியை தொடர்ந்து ஆள வைத்தனர். புரட்சித்தலைவி அம்மா இல்லாத இந்த காலகட்டத்திலும் தமிழக மக்கள் நமது கழகத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் தான் சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும் என்று கூறினார். உண்மையான விசுவாசமிக்க தொண்டர்கள் நமது கழகத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு பேசும்போது மகாபாரதத்தில் பரதனுக்கு பிறகு தற்போது தான் தனக்கு கிடைத்த பதவியை புன்னகையோடு திரும்ப கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், இவரை தொண்டராக பெற்றது எனது பெரும் பாக்கியம் என்றார்.
ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு நடந்தது, நமக்கு நாமே என ஊர் ஊராக சுற்றியது தற்போது புது சமுக்காளத்தை விரித்து கிராமசபை கூட்டம் நடத்துவது டிராமா போட்டு வருகிறார். கமலஹாசன் கூட ஸ்டாலின் எதையும் சுயமாக சிந்தித்து செயல்படமாட்டார் என கேலி செய்துள்ளார். திமுக-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம், 2ஜி ஊழல் என எதையும் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். ஸ்டாலின் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது.
அம்மா பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள தினகரனை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1998ல் பெரியகுளம் எம்.பி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினார். அம்மா கைகாட்டிய தினகரரை கழக தொண்டர்கள் வெற்றி பெற செய்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் செய்ய முயற்சித்தார். அதனை அறிந்த அம்மா அவரை கட்சியிலிருந்து நீக்கினார். அதன்பின் தினகரன் 10 ஆண்டுகாலம் பாண்டிச்சேரியில் இருந்தார். அம்மாவின் மறைவுக்கு பின் 40 நாட்களில் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்தார். அதற்கு உறுதுணையாக 18 எம்.எல்.ஏக்கள் சென்றனர். இன்று அவர்களின் கதி நமக்கு எல்லோருக்கும் தெரியும். தினகரனின் கட்சி அழிந்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் அம்மா வழியில் நடைபெற்று வரும் நமது கழக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்களின் நலன் காக்கும் நல்ல திட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பின் சுலபமாக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கணக்கு போட்டவர்கள் எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நடத்தி வரும் ஆட்சியை பார்த்து வாயடைத்து போயுள்ளனர். அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மாவின் வளர்ப்பு பாடமாகும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் ஆன்மாக்கள் நம்மை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் கட்சிகளோடு தான் கூட்டணி அமைக்கும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் 71வது பிறந்த நாள் பரிசாக வழங்க வேண்டும். இந்தியாவின் புதிய பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக நமது கழகம் இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். நகர துணை செயலாளர் அப்துல்சமது நன்றி கூறினார். இப்பிரமாண்ட கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி: 243 தொகுதிகளிலும் போட்டியிட தேஜஸ்வி யாதவ் அதிரடி முடிவு
15 Sep 2025பாட்னா : பீகாரில் தொகுதி பங்கீட்டில் இழுபறி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்
15 Sep 2025தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
நடிகர் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது
15 Sep 2025அமெரிக்கா : நடிகர் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது வழங்கப்பட்டது.