எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளத்தில் எதிரிகள் நமது கழகத்தை வீழ்த்த முடியாததற்கான காரணம் அம்மாவின் அஞ்சாமையா அல்லது அம்மாவின் ஆளுமையா என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. நகர் கழக செயலாளர் என்.வி.ராதா தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் வரவேற்றார். இப்பட்டிமன்ற நடுவராக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் இருந்தார். இப்பட்டிமன்றத்தை துவக்கி வைத்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசினார். அவர் பேசும், புரட்சித்தலைவர் கழகத்தை தோற்றுவித்தார். 1977ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து 10 ஆண்டுகாலம் சத்துணவு திட்டம், முதியோர் பென்சன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார். அவருடைய மறைவுக்க பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தின் பொதுச்செயலாளராகி 17 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட நமது இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் நலனுக்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி, கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் நிதி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் கூற்றான ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்போம் என ஏழைகளை சிரிக்க வைத்தார். இவருடைய நல்லாட்சி தொடர வேண்டுமென்று 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற நமது கழகத்தை 37 இடங்களில் தமிழக மக்கள் வெற்றி பெற செய்தனர். 32 ஆண்டுகளுக்கு பின் ஆளும் கட்சியை தொடர்ந்து ஆள வைத்தனர். புரட்சித்தலைவி அம்மா இல்லாத இந்த காலகட்டத்திலும் தமிழக மக்கள் நமது கழகத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் தான் சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும் என்று கூறினார். உண்மையான விசுவாசமிக்க தொண்டர்கள் நமது கழகத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு பேசும்போது மகாபாரதத்தில் பரதனுக்கு பிறகு தற்போது தான் தனக்கு கிடைத்த பதவியை புன்னகையோடு திரும்ப கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், இவரை தொண்டராக பெற்றது எனது பெரும் பாக்கியம் என்றார்.
ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு நடந்தது, நமக்கு நாமே என ஊர் ஊராக சுற்றியது தற்போது புது சமுக்காளத்தை விரித்து கிராமசபை கூட்டம் நடத்துவது டிராமா போட்டு வருகிறார். கமலஹாசன் கூட ஸ்டாலின் எதையும் சுயமாக சிந்தித்து செயல்படமாட்டார் என கேலி செய்துள்ளார். திமுக-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம், 2ஜி ஊழல் என எதையும் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். ஸ்டாலின் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது.
அம்மா பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள தினகரனை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1998ல் பெரியகுளம் எம்.பி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினார். அம்மா கைகாட்டிய தினகரரை கழக தொண்டர்கள் வெற்றி பெற செய்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் செய்ய முயற்சித்தார். அதனை அறிந்த அம்மா அவரை கட்சியிலிருந்து நீக்கினார். அதன்பின் தினகரன் 10 ஆண்டுகாலம் பாண்டிச்சேரியில் இருந்தார். அம்மாவின் மறைவுக்கு பின் 40 நாட்களில் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்தார். அதற்கு உறுதுணையாக 18 எம்.எல்.ஏக்கள் சென்றனர். இன்று அவர்களின் கதி நமக்கு எல்லோருக்கும் தெரியும். தினகரனின் கட்சி அழிந்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் அம்மா வழியில் நடைபெற்று வரும் நமது கழக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்களின் நலன் காக்கும் நல்ல திட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பின் சுலபமாக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கணக்கு போட்டவர்கள் எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நடத்தி வரும் ஆட்சியை பார்த்து வாயடைத்து போயுள்ளனர். அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மாவின் வளர்ப்பு பாடமாகும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் ஆன்மாக்கள் நம்மை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் கட்சிகளோடு தான் கூட்டணி அமைக்கும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் 71வது பிறந்த நாள் பரிசாக வழங்க வேண்டும். இந்தியாவின் புதிய பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக நமது கழகம் இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். நகர துணை செயலாளர் அப்துல்சமது நன்றி கூறினார். இப்பிரமாண்ட கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.