எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியகுளத்தில் எதிரிகள் நமது கழகத்தை வீழ்த்த முடியாததற்கான காரணம் அம்மாவின் அஞ்சாமையா அல்லது அம்மாவின் ஆளுமையா என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. நகர் கழக செயலாளர் என்.வி.ராதா தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் வரவேற்றார். இப்பட்டிமன்ற நடுவராக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் இருந்தார். இப்பட்டிமன்றத்தை துவக்கி வைத்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசினார். அவர் பேசும், புரட்சித்தலைவர் கழகத்தை தோற்றுவித்தார். 1977ல் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். தொடர்ந்து 10 ஆண்டுகாலம் சத்துணவு திட்டம், முதியோர் பென்சன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார். அவருடைய மறைவுக்க பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழகத்தின் பொதுச்செயலாளராகி 17 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட நமது இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக உருவாக்கினார். 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களின் நலனுக்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி, கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் நிதி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் கூற்றான ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்போம் என ஏழைகளை சிரிக்க வைத்தார். இவருடைய நல்லாட்சி தொடர வேண்டுமென்று 2014 பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற நமது கழகத்தை 37 இடங்களில் தமிழக மக்கள் வெற்றி பெற செய்தனர். 32 ஆண்டுகளுக்கு பின் ஆளும் கட்சியை தொடர்ந்து ஆள வைத்தனர். புரட்சித்தலைவி அம்மா இல்லாத இந்த காலகட்டத்திலும் தமிழக மக்கள் நமது கழகத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற காரணத்தினால் தான் சட்டமன்றத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கும் என்று கூறினார். உண்மையான விசுவாசமிக்க தொண்டர்கள் நமது கழகத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிட்டு பேசும்போது மகாபாரதத்தில் பரதனுக்கு பிறகு தற்போது தான் தனக்கு கிடைத்த பதவியை புன்னகையோடு திரும்ப கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், இவரை தொண்டராக பெற்றது எனது பெரும் பாக்கியம் என்றார்.
ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு நடந்தது, நமக்கு நாமே என ஊர் ஊராக சுற்றியது தற்போது புது சமுக்காளத்தை விரித்து கிராமசபை கூட்டம் நடத்துவது டிராமா போட்டு வருகிறார். கமலஹாசன் கூட ஸ்டாலின் எதையும் சுயமாக சிந்தித்து செயல்படமாட்டார் என கேலி செய்துள்ளார். திமுக-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம், 2ஜி ஊழல் என எதையும் தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். ஸ்டாலின் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது.
அம்மா பெயரில் கட்சியை ஆரம்பித்துள்ள தினகரனை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1998ல் பெரியகுளம் எம்.பி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினார். அம்மா கைகாட்டிய தினகரரை கழக தொண்டர்கள் வெற்றி பெற செய்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு துரோகம் செய்ய முயற்சித்தார். அதனை அறிந்த அம்மா அவரை கட்சியிலிருந்து நீக்கினார். அதன்பின் தினகரன் 10 ஆண்டுகாலம் பாண்டிச்சேரியில் இருந்தார். அம்மாவின் மறைவுக்கு பின் 40 நாட்களில் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்தார். அதற்கு உறுதுணையாக 18 எம்.எல்.ஏக்கள் சென்றனர். இன்று அவர்களின் கதி நமக்கு எல்லோருக்கும் தெரியும். தினகரனின் கட்சி அழிந்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் அம்மா வழியில் நடைபெற்று வரும் நமது கழக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மக்களின் நலன் காக்கும் நல்ல திட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பின் சுலபமாக ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று கணக்கு போட்டவர்கள் எல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நடத்தி வரும் ஆட்சியை பார்த்து வாயடைத்து போயுள்ளனர். அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மாவின் வளர்ப்பு பாடமாகும். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் ஆன்மாக்கள் நம்மை வழிநடத்தி கொண்டிருக்கின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது கழகம் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் கட்சிகளோடு தான் கூட்டணி அமைக்கும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றியை பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று புரட்சித்தலைவி அம்மாவின் 71வது பிறந்த நாள் பரிசாக வழங்க வேண்டும். இந்தியாவின் புதிய பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக நமது கழகம் இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். நகர துணை செயலாளர் அப்துல்சமது நன்றி கூறினார். இப்பிரமாண்ட கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
எனக்கு பாம்பு காது: சபாநாயகரின் பேச்சால் சட்டசபையில் சிரிப்பலை
17 Oct 2025சென்னை : எனக்கு பாம்பு காது என்ற சபாநாயகரின் பேச்சு சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
சத்தீஸ்கரில் 208 நக்சலைட்டுகள் சரண்
17 Oct 2025சத்தீஸ்கர் : 208 நக்சலைட்டுகள் ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து சரண் அடைந்தனர்.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.