முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்கா விட்டால் கடும் நடவடிக்கை - பாக்.கிற்கு சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஜெனீவா : பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை தடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவியை தடுப்பதில்லை எனவும் சர்வதேச பயங்கரவாதிகளை சுதந்திரமாக தனது மண்ணில் உலவ விடுவதாகவும் இந்தியா உள்பட உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு நிதி கிடப்பதை தடுப்பதில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து விட்டதாக சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு (எப்.ஏ.டி.எப் ) தெரிவித்துள்ளது.

பிரான்சு தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த அமைப்பு பயங்கரவாதத்துக்கான நிதி உதவியை தடுப்பது மட்டுமன்றி, சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கிறது. இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கும் நிதி கிடைப்பதையும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகளையும் தடுப்பதில் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை, வரும் அக்டோபருக்குள் பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் கருப்புப் பட்டியலில் அந்நாடு சேர்க்கப்படும் என்று எப்.ஏ.டி.எப் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து