முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் அருகே பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம், -திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பூசாரிபட்டியில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகே மலைப்பாம்பு ஒன்று கிடப்பதாக நத்தம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) திருக்கோள்நாதன், உதவி அலுவலர் லெட்சுமணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு நூலகத்தின் அருகில் இருந்த  மலைப்பாம்பை பொது மக்கள் உதவியுடன் பிடித்த தீயணைப்பு துறையினர் பின்னர் அதை  வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இந்த பாம்பு சுமார் 10 அடி நீளமுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.திடீரென மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து