முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வேகம் தேவை

இந்தியா, பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

டாடா ஏர்லைன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான  போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மரம் ரொம்ப காஸ்டலி

தங்கம், பிளாட்டினம், வைரம் போன்ற உலகின் அரிய வகை தனிமங்கள் தான் உலகின் விலைமதிப்பு மிக்கது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அதை இன்றோடு மறந்துவிடுங்கள். இந்த நகைகளை காட்டிலும் விலைமதிப்பற்ற மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தின் பெயர் அகர் மரம். அதன் விலை கிலோ ரூ.75 லட்சம். அக்குலேரியா என்ற மரத்தின் ஒருவகைதான் இந்த அகர் மரம். இந்த மரத்துக்கு வேறுசில பெயர்களும் உண்டு. அவை கற்றாழை மரம் அல்லது கழுகு மரம். ஜப்பானில் கியாரா அல்லது கயனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியா, ஜப்பான், அரேபியா, சீனா, மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த மரமே உலகின் மிக அரிதான விலைமதிப்புமிக்க ஒரு மரமாகும்.இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பிசின் மூலம் ஒருவகை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் வாசனை திரவியங்களின் தயாரிப்பில் அத்தியாவசியமான பொருளாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த எண்ணெய் ஒரு கிலோ 25 லட்ச ரூபாய் ஆகும். அப்படி என்றால் இந்த மரம் தானே உலகிலேயே மிகவும் காஸ்ட்லி.

கூகுல் ஆப்

புதிய முறையில் புகைப்படம் எடுக்க ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்காக கூகுல் புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் நகரக்கூடிய புகைப்படங்களை எடுக்க முடியும். இந்த ஆப் மூலம் நகரும் புகைப்படத்தை ஜிஃப் ஃபைல் மற்றும் அனிமேடட் புகைப்படங்களை எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

மீல் மேக்கர் என்றால் என்ன?

இன்றைய நவீன  உலகில் உணவும் நவீனமாகி வருகிறது. ஆனால் நவீன உணவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். அதெல்லாம் இருக்கட்டும்.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் பலவற்றை குறித்து நமக்கு எதுவும் தெரிவதில்லை. குறிப்பாக நான் வெஜ் சாப்பிடுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் மீல் மேக்கரை சொல்லலாம். மீல் மேக்கர் என்றால் என்ன. சோயா ஜங்க்.அதான்ங்க அப்படின்னா... அப்படி கேளுங்க.. சோயா பீன்ஸ் அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து எண்ணெய், சாஸ், புரதம், பால், போன்றவற்றை எடுக்கும் தொழில் நுட்பத்தில் கடைசியாக எஞ்சும் சக்கை அல்லது புண்ணாக்குதான் இந்த மீல் மேக்கர். இதை கொரியாவில் உள்ள மீல் மேக்கர் என்ற நிறுவனம் தயாரித்து விற்க அந்த பெயரே நிலைத்து விட்டது. பார்க்க இறைச்சி போல தெரிவதால் அதிகம் பேரால் விரும்பப்படுகிறது. அளவாக உணவில் பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தினால்.. குறிப்பாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, ஹார்மோன் பிரச்னை, விந்தணுக்களில் குறைபாடு போன்றவை தோன்ற வாய்ப்புகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago