முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்தியப் பெருங்கடல், 16 நாடுகள் என 12, 000 கிமீ வியக்க வைக்கும் பயணம்

குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று தென் ஆப்ரிக்காவில் இருந்து மங்கோலியாவிற்கு சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணித்ததை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். குளிர்காலங்களில் சாம்பியாவில் வாழும் இந்த பறவை 16 நாடுகளை தாண்டிப் பறந்துள்ளது. வழியில் பெருங்கடல், அதிக காற்று என அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது. இது ஒரு வியக்கத்தக்கப் பயணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஓனன் என்று அழைக்கப்படும் பறவை மட்டுமே இந்த நெடுந்தூர பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஓனன் பறவை ஓய்வேதும் எடுக்காமல் இந்தியப் பெருங்கடலை மணிக்கு 60 கிமீட்டர் வேகத்தில் கடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கென்யா, செளதி அரேபியா மற்றும் வங்கதேசம் என உலகின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் நாடுகளையும் தனது பயணத்தில் கடந்துள்ளது.

தெரியாத பகுதி

லத்தீன் மொழியில் ஆஸ்திரேலிஸ் என்றால் தெற்கில் உள்ள தெரியாத பகுதி என்று பொருள். பண்டைய ரோமானியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆஸ்திரேலியா சென்றடைய வழி கண்டறியப்படாத காரணத்தாலும், கடல் வழி தெரியாததாலும் இப்பெயர் வைத்தனர். ஆஸ்திரேலிஸ் என்பது காலப்போக்கில் ஆஸ்திரேலியா என்றானது.

விண்வெளியில் பயிர்செய்த மிளகாயை சுவைத்த நாசா விண்வெளி வீரர்கள்

விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவை கொண்டு செல்வதற்கு அதிக சக்தியும் நீண்ட காலமும் தேவைப்படுகிறது. குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கு பேக் செய்யப்பட்ட உணவை கொண்டு செல்லும் போது அது கெட்டு போய் விடுகிறது. உணவின் தரம் பாதிக்கப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் கே போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் பாதிக்கப்படுகின்றன என்றும் நாசா கூறியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.தற்போது விண்வெளியில் மிளகாயை பயிரிட்டு அறுவடை செய்ததன் மூலம் வைட்டமின் சி தேவையை பெறுவதற்கான மிகச் சிறந்த ஆதாரமாக இது உள்ளது. இதற்காக நாசாவைச் சேர்ந்த ஒரு குழு கென்னடி விண்வெளி மையத்தில் வேலை செய்தது. இதற்காக நாசா பிரத்யேகமாக Advanced Plant Habitat என்ற இன்குபேட்டர் போன்ற சாதனத்தையும் தயாரித்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சாதனம் பூமியில் உள்ளதை போன்றே மிளகாய் வளர்வதற்கு சாதகமான நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை தருகிறது. இந்த சாதனத்தில் களிமண் கலவையால் உருவாக்கப்பட்ட தளத்தில் தூவப்பட்ட மிளகாய் விதைகள் வளர்வதற்கு சாதகமான சூழல் கிடைத்தவுடன் மெதுவாக வளர தொடங்கின.மிளகாய் செடியின் வளர்ச்சியை 180 சென்சார்கள் கண்காணித்து தேவைக்கேற்ப நீர், உரம், ஒளி, வெப்பம் போன்றவற்றை அளித்தனர். இதனால் சர்வதேச விண்வெளி மையத்தில் செழித்து வளர்த்த மிளகாய் செடிகள் 4 மாதங்களில் அறுவடைக்கு தயாராகின. தற்போது அவற்றை நாசா விண்வெளி வீரர்கள் சுவைத்துள்ளனர். மேலும் பூமியில் விளைந்த மற்றும் விண்வெளியில் விளைந்த மிளகாய்களுக்கு இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளையும் ஆராய்வதற்காக அவற்றை பூமிக்கு கொண்டு வரவும் நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் மனிதர்கள் குடியேறும் முயற்சியில் நாசாவின் இந்த சாதனை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

உலகின் முதன் எஸ்எம்எஸ்

உலகிலேயே முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எதுவென்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம்தான் முதன் முதலில் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது நெயில் பப்புவோர்த் என்பவர் தனது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு ‘மேர்ரி கிறிஸ்துமஸ்’ (‘Merry Christmas’) என்கிற எஸ்.எம்.எஸ்-யை முதன்முதலில் அனுப்பினார். வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரிதான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் ஆவார். ஆர்பிட்டல் 901 மொபைலுக்கு இந்த எஸ்.எம்.எஸ்-யை அனுப்பி உள்ளார். இது சுமார் 14 கேரக்டர்களை கொண்டது. இந்த எஸ்.எம்.எஸ் 1992 ஆம் வருடம் முதன் முதலில் அனுப்பப்பட்டது. இதில் இன்னொரு சுவாரசியம் என்ன தெரியும் தற்போது இந்த எஸ்எம்எஸ் சுமார் 1.70 லட்சம் யூரோவுக்கு ஏலத்துக்கு வருகிறது என்பதுதான்.

உலகின் மிக பழமையான ஒயின் பாட்டில் அண்மையில் கண்டுபிடிப்பு

மேலைநாடுகளில் ஒயினை தயாரிப்பதும், அவற்றை நூறாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்பதும் வழக்கம். அண்மையில் ரோமை சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் கல்லறை ஜெர்மனியில் அமைந்துள்ளது. அதில்தான் உலகிலேயே மிகவும் பழமையான ஒயின் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒயின் 4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 1650 ஆண்டுகள் பழமையானதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதால் திறந்தால் என்ன ஆகும் என்றோ, தற்போது அது நச்சுத் தன்மைய உடையதாகவோ மாறியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் திறக்கப்படாத பாட்டிலில் அடைக்கப்பட்ட மிக பழமையான ஒயினாக இது கருதப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்காக தானாகவே 16 ஆண்டுகள் சட்டம் பயின்ற முதியவரை உங்களுக்கு தெரியுமா?

சீனாவைச் சேர்ந்தவர் வாங் என்லின். இவர் 3 வகுப்பை கூட நிறைவு செய்யாதவர். ஆனால் இவர் தனக்கு தானே 16 ஆண்டுகள் சட்டம் பயின்றார். எதற்கு மற்றும் எப்படி தெரியுமா.. அவரது கிராமத்தை அருகில் இருந்த ரசாயன ஆலை மாசுபடுத்தியது. அதற்கு எதிராக சட்டப் போர் தொடுக்க வேண்டுமானால் சட்டம் தெரிந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரால் அனைத்து சட்ட நூல்களையும் வாங்க பணமில்லை. எனவே உள்ளூரில் உள்ள புத்தக கடையில் பை நிறைய மக்காசோளத்தை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அங்கேயே அமர்ந்து புத்தகங்களை படிக்க ஏற்பாடு செய்து கொண்டார். டிக்சனரியின் உதவியால் அவர் சட்டம் பயின்று வழக்கையும் நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றார். இறுதியில் தனது வழக்கில் கடந்த 2017 இல் வெற்றியும் பெற்றார் என்றால் ஆச்சரியம் தானே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago