முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      தமிழகம்
Money-2024-04-28

சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல்  செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டது. 

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விதிகள் அமலில் இருந்த போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். 

இதற்கிடையே நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இந்த ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான லோகநாதன் பெற்றுக் கொண்டார். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து