எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வெல்லிங்டன் : ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
125 ரன்களுக்கு...
நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
மூவர் சதம்...
முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. டெவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கோப் டஃபி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 8) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜேக்கோப் டஃபி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், டெவான் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், ஹென்றி நிக்கோல்ஸுடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். களமிறங்கியது முதலே ரச்சின் ரவீந்திரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
476 ரன்கள் முன்னிலை...
சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி நிக்கோல்ஸ் 245 பந்துகளில் 150 ரன்கள் (15 பவுண்டரிகள்) எடுத்தும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 139 பந்துகளில் 165 ரன்கள் (21 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
இன்னிங்ஸ் வெற்றி...
மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலையுடன் முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது ஜிம்பாப்வே. ரன்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் ஜிம்பாப்வேவுக்கு இது மிகப் பெரிய தோல்வியாகவும், நியூசிலாந்து அணிக்கு இது மிகப் பெரிய வெற்றியாகவும் அமைந்தது.
முழுமையாக...
இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணியில் நிக் வெல்ச் 71 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸகாரி ஃபோல்க்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். . இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து அணி முழுமையாக வென்றது. டெவான் கான்வே ஆட்டநாயகனகாவும், மாட் ஹென்றி தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
ஆசிய கோப்பை தொடர் : இந்தியா-பாக்., போட்டி ரத்து? - யு.ஏ.இ. கிரிக்கெட் வாரியம் பதில்
09 Aug 2025துபாய் : இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைமை இயக்க அதிகாரி கூறியுள்ளார்.
-
இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம்
09 Aug 2025சென்னை, இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
-
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
09 Aug 2025சென்னை, இலங்கைக் கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை மீட்க வலுவான, ஒருங்கிணைந்த
-
கம்பன் கழக பொன்விழா நிறைவு விழா: தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
09 Aug 2025சென்னை, பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றும்,‘வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது; இதுதான் கம்பர் கண்ட கனவு’ என்றும் முதல்வர் மு.க.ஸ்
-
சுமார் ரூ.1,650 கோடி செலவில் பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம் : முதல்வா் சித்தராமையா ஆலோசனை
09 Aug 2025பெங்களூரு, : கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார்.
-
672.52 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள்: அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20,021 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
09 Aug 2025பல்லாவரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 20 ஆயிரத்து 21 பேருக்கு ரூ.672.52 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக
-
இந்தியா-பாக். போரை நிறுத்தியது நான்தான்: அதிபர் டிரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு
09 Aug 2025நியூயார்க், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
-
சாத்தூர்: பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் பலி; ஒருவர் படுகாயம்
09 Aug 2025சாத்தூர், சாத்தூரில் பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாம் அடைந்தார்.
-
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: களமிறங்குகிறார் விராட்கோலி?
09 Aug 2025மும்பை : இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
09 Aug 2025சென்னை : தமிழகத்தில் இன்று (ஆக.10) முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்ளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
குஜராத்: விபத்தில் 4 பேர் பலி
09 Aug 2025காந்திநகர், குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் தீயில் கருகி பலி
-
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு பட்டுப்புடவையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் : அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
09 Aug 2025அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி உரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆற்றின
-
ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
09 Aug 2025தாம்பரம், தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
அஜித்குமார் வழக்கில் திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா?
09 Aug 2025சிவகங்கை, அஜித்குமார் வழக்கில் பொய் புகார் கொடுத்தாரா நிகிதா என சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைவு: ஜப்பானில் மக்கள் தொகை சரிவு
09 Aug 2025டோக்கியோ, ஜப்பானில் குழந்தை பெறறுக்கொள்ள ஆர்வம் காட்டாததால் அந்த நாட்டின் மக்கள் தொகை வேகமாக சரிந்து வருகிறது.
-
இமாசலபிரதேசத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் பலி
09 Aug 2025சிம்லா, இமாசலபிரதேசத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
முதன்முதலில் நிலவை சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் காலமானார்
09 Aug 2025நியூயார்க், நிலவை முதன் முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்.
-
அசாமில் மீண்டும் நிலநடுக்கம்
09 Aug 2025திஸ்பூர், அசாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி..!
09 Aug 2025மும்பை : நடந்து முடித்த ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி பல்வேறு வழிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது தெரியவந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-08-2025.
10 Aug 2025 -
இன்னிங்ஸ், 359 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நியூசிலாந்து
09 Aug 2025வெல்லிங்டன் : ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
மெஸ்சி, அர்ஜென்டினா அணி வருகை திடீர் ரத்து : கேரள ரசிகர்கள் அதிர்ச்சி
09 Aug 2025திருவனந்தபுரம் : மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் வருகை ரத்து செய்யப்பட்டதால் கேரள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
இந்திய அணி அபார வெற்றி
09 Aug 2025மகளிருக்கான ஆசிய கோப்பை யு-20 கால்பந்து போட்டியில் இந்திய அணி துர்க்மேனிஷ்தானை 7-0 என வீழ்த்தி அசத்தியது.
-
தேசிய தூய்மை விருதுகள்: விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு முதல் இடம்
09 Aug 2025விசாகப்பட்டினம், தேசிய தூய்மை விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விசாகப்பட்டின துறை முகம் முதல் இடத்தில் உள்ளன.
-
பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை பார்த்து உலகமே வியந்தது: பிரதமர்
10 Aug 2025பெங்களூரூ : ஆபரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமி