முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

64 ஆண்டுகளுக்கு பின்...

உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று தொண்டை சுருக்கு பாம்பு. இந்த அரிய வகை பாம்புகள் பிரேசில் காடுகளில் யார் கண்களுக்கு படாமல் உயிர்வாழ்ந்து வந்தது. இந்நிலையில், அரிய வகை தொண்டை சுருக்கு பாம்பு ஒன்று 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்பு ஒரு பெண் இனம். பாம்பின் நீளம் 1.7 மீட்டர். எடை 1.5 கிலோகிராம்.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

செயற்கை பூமி எங்கிருக்கு தெரியுமா..

சூரிய மண்டலம் தொடங்கி பால்வெளி பாதை வழியாக பிரபஞ்சம் முழுவதும் பயணித்தால்.. அப்படி மனிதனால் பயணிக்க இயலாது.. ஒரு வேளை பயணித்தால்.. பூமியைப் போன்ற நீரும், ஜீவராசிகளும் வசிக்கும் இன்னொரு பூமியை கண்டுபிடிக்க முடியுமா.. முடியவே முடியாது.. இந்த பிரபஞ்சத்தில் ஒரே ஒரு உயிர்க்கோளமான பூமி மட்டும்தான்...ஆனாலும் விஞ்ஞானத்தின் தேடல் தீராது.. அது கிடக்கட்டும்..அப்படியானால் பூமி போல செயற்கை பூமி செய்ய முடியுமா.. அது போன்ற ஒன்று இருக்கிறதா... என்றால் ஆம் அல்லது இல்லை... ஆம் என்ற பதில் மூலமாக நாம் அமெரிக்காவுக்கு சென்றால் அங்குதான் செயற்கை பூமி உள்ளது.. இன்றைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளால் மாசுபட்டு கிடக்கும் பூமிக்கு மாற்றாக.. எந்த வித செயற்கையும் இன்றி இயற்கையாக இருக்கும் வகையில் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தின் டஸ்கர் என்ற நகரிலிருந்து 64 கிமீ தொலைவில்தான் அது அமைக்கப்பட்டுள்ளது. ஆரக்கிள் என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறிய செயற்கை பூமி கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் பூமி தோன்றிய போது எப்படி இருந்ததோ அதே போன்று தூய்மையாக....உயரிய தொழில் நுட்ப செயற்கை கண்ணாடி தடுப்பு சுவர்களுக்குள் 3.4 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிகாற்று உள்ளே செல்லவோ, உள்ளிருக்கும் காற்று வெளியே வரவோ இயலாது. அங்கே, மழைக்காடுகள், பவளப்பாறைகள், வெப்ப மண்டல மரங்கள்,  உயிரினங்கள் என அனைத்தும் மிகவும் சுதந்திரமாக திரிகின்றன. அதற்கு இடையூறு இன்றி அவை விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்படுகின்றன.. என்ன கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..

மாறிய கோவில்

12-ம் நூற்றாண்டில் , 2-ம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அங்கோர் வாட்டை ஆரம்பத்தில் ஓர் விஷ்ணு தள வழிப்பாட்டு கோவிலாக இருந்தது. பின் 14 - 15-ம் நூற்றாண்டுகளில், புத்த மத துறவிகளால் கையகப்படுத்தப்பட்டு கூடுதலான புத்த சிலைகளும், கலைநய வேலைப்பாடுகளும் சேர்க்கப்பட்டு புத்த கோவிலாக மாற்றப்பட்டது.

கொழுப்பை தடுக்கும்

1. மூளை செயல்பாடு அதிகரிக்கும் மற்றும் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.2. கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கிறது மற்றும் உடல் திறன் அதிகரிக்கிறது.3. இதில் இருக்கும் ஆக்சிஜெனேற்றத்தடுப்பான் (antioxidant) பல்வேறு வகையான புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.4. இருதய நோய் வருவதை குறைக்கலாம். 5. நீரிழிவு நோய் வரும் ஆபத்தை குறைக்கலாம்.

தேவை முன்னெச்சரிக்கை

இளம் வயதில் தொண்டைப் புண்ணோ, கை, கால் மூட்டுக்களில் வீக்கமோ, ருமாட்டிக் காய்ச்சலோ வந்தால், அவை இதயத்தைப் பாதிக்கலாம். வருடம் ஒரு முறை ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இசிஜியும் செய்து பார்க்கலாம். குடும்பத்தில் இளவயது மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் இருப்பின், மற்ற நபர்கள், 25 வயதிலிருந்தே, இந்த வருடாந்திர சோதனைகளை ஆரம்பிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago