முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தட்டான்கள் இருக்கும் இடத்தில் கொசு இருக்காது ஏன் தெரியுமா?

டிராகன்ஃபிளைஸ்(Dragonflies) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தட்டான், தட்டாரப்பூச்சி எனவும், தும்பி எனவும், தட்டாம்பூச்சி எனவும் அழைப்பார்கள். தட்டான் பூச்சிகள் மிக வேகமாக லாவகமாக பறக்கின்றன. மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவாக பறக்க கூடியவை. இவை ஒரு ஆண்டில் 14 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறக்கக் கூடியது. ஏறத்தாழ 6000 வகைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 503 தட்டான் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தட்டான் பூச்சிகள் ஏறத்தாழ 325 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் ஒரு உயிரினம். டினோசர்களை விட மிகவும் பழமையானவை. தட்டான்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அவைகள் சூடான காலநிலை மற்றும் தண்ணீருக்கு அருகில் வாழ விரும்புகின்றன. தட்டான் பூச்சிகள் கொசுக்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றன. தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் தொல்லை குறைவாக இருக்கும்.

இந்தியாவின் மர நகரம் எது தெரியுமா?

ஆர்பர் டே அறக்கட்டளை மற்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து ஆண்டுதோறும் ‘உலகின் மர நகரம்’ என்ற அங்கீகாரத்தை உலகில் உள்ள நகரங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மும்பையை “உலகின் மர நகரம் 2021” ஆக அறிவித்துள்ளது. இந்த பட்டத்தை வெல்லும் இந்தியாவின் இரண்டாவது நகரம் மும்பை ஆகும். ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஐதராபாத் ‘உலகின் மர நகரம்’ என்ற பட்டத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரத்தின் மூலம், ஆரோக்கியமான, நெகிழக்கூடிய மற்றும் மகிழ்ச்சியான நகரங்களை உருவாக்குவதில் மரங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை இணந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் (பிஎம்சி) தோட்டத் துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற காடுகளுக்கு மத்தியில் பசுமையை நிலைநிறுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 21 நாடுகளைச் சேர்ந்த 138 நகரங்களின் குழுவில் வட இந்தியாவின் தூக்க நகரமான மும்பையும் இணைக்கப்பட்டுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் முடிவு

பெயிண்ட் பிரஷ் என்ற பெயரில் கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயிண்ட் கிராபிக்ஸ் செயலிக்கு பதில் பெயிண்ட் 3டி அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெயிண்ட் செயலி படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அசாமில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா எது தெரியுமா?

தமிழர்களாகிய நமக்கு தை பொங்கல் தான் அறுவடை திருவிழாவாகும்.அசாமில் ‘மாக் பிஹூ’ என்ற பெயரில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதிக்கு சூரியனின் இடப்பெயர்ச்சியை மையமாக வைத்து கொண்டாடப்படுதம் இந்த பண்டிகையை, வட மற்றும் மத்திய இந்தியாவில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்திக் காலண்டரின் மாக் மாதத்தின் முதல்நாளில் வருவதாலும் இதை மகர சங்ராந்தி என்றழைக்கிறார்கள். மேலும், இந்தியாவில் உள்ள விவசாயிகள், அறுவடை திருநாளாக கொண்டாடுகின்றனர், ஆனால் மாநிலங்களுக்கேற்ப இந்த அறுவடை திருநாள் கொண்டாட்டங்கள் மாறுபடும். அதன் ஓர் அங்கமாக மூங்கில், வைக்கோல் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கலைநயமிக்க தற்காலிக குடிசைகள் அமைப்பது அசாம் மக்களின் தொன்று தொட்ட பழக்கம். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படும்.

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாம்புக்கு உதவி

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மேத்யூ என்பவர், சுமார் 2.5 மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று சாலையை கடக்க உதவியுள்ளார். போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் அந்த மலைப்பாம்பை ஏற்றிவிடாதபடி, அவர் உடனடியாக பாம்புக்கு அரணாக சாலையில் படுத்து அது கடந்து செல்லும் வரை இவ்வாறு 5 நிமிடங்கள் இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago