முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

அமேசான் காட்டில் 12, 500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு

அமேசான் காடுகள் அதிசயங்களுக்கும், மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் குறைவில்லாத மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். உலகின் மிகப் பெரிய வனப்பகுதியுமாகும். இந்த வனத்தின் அனைத்து ஆச்சரியங்களும் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் இதன் பிரம்மாண்டத்துக்கு ஓர் சாட்சி. இந்நிலையில் தெற்கு கொலம்பியாவில்  Chiribiquete National Park என்ற இடத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சுமார் 8 மைல் நீளமுள்ள பாறைத் தொடரில்தான் பழங்கால ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிரோன் மூலம் படம்பிடிக்கப்பட்டு முதன் முதலில் உலகுக்கு தெரிய வந்த போதிலும் அந்த இடத்துக்கு செல்வது அத்தனை எளிதானதாக இல்லை. அண்மையில் அங்கு சென்ற கொலம்பிய- பிரிட்டனைச் சேர்ந்த கூட்டு தொல்லியல் ஆய்வு குழுவினர் மிகக் கடினமான மலையேற்றத்துக்கு பின்னர்தான் அப்பகுதியை அடைந்தனர். அங்கு வரையப்பட்டிருந்த ஓவியங்கள் சுமார் 12 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கும் பழமையானவையாக இருக்கலாம் என்கின்றனர். அவற்றில் விலங்குகள், பறவைகள், மீன்கள், ஊர்வன என பல்வேறு பட்ட உருவங்கள் வரையப்பட்டுள்ளன.  இது வரை இப்படி ஒரு பாறை ஓவியம் உலகில் எங்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்பது இதன் கூடுதல் ஆச்சரியமாகும்.

திருப்பதி ஏழுமலையானின் தினசரி ‘மெனு’

அதிகாலை சுவாமியை சுப்ர பாதத்துடன் துயில் எழுப்பிய பின்னர், அவருக்கு வெண்ணெய், நுரை ததும்ப பசும்பால் படைக்கப்படுகிறது. தோமாலை, சகஸ்ரநாம அர்ச்சனை சேவைகளுக்குப் பிறகு சுவாமிக்கு எள், சுக்கு, வெல்லம் கலந்த பானகம் சாத்துபடி. இவைகளைத் தொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் பால போக நைவேத்தியமாக புளியோதரை, தயிர் சாதம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், ரவா கேசரி சமர்ப்பிக்கப்படும். இதன் பின்னர் சர்வ தரிசனம் தொடங்கும். நண்பகல் 11 மணியில் இருந்து 11.30 மணிக்குள் ராஜ போகம் நைவேத்தியம். இதில், வெண் சாதம், சர்க்கரை அன்னம், புளியோதரை, கூடை அன்னம், போன்றவை படைக்கப்படுகிறது. மாலை 7 மணியளவில் சயன போக நைவேத்யத்தில் மிளகு அன்னம், தோசை, லட்டு, வடை மற்றும் பல காய்கறிகளால் சமைக்கப்பட்ட அன்னம் சமர்ப்பிக்கப்படும்.இத்துடன் ஏழுமலையானின் ‘மெனு’ முடியவில்லை. இரவு ‘திருவீசம்’ எனும் பெயரில் வெல்லத் தால் தயாரிக்கப்பட்ட அன்னம் படைக்கப்படும். பின்னர் சுவாமி பள்ளியறைக்குச் செல்லும் முன் ஏகாந்த சேவையின்போது, நெய்யினால் மிதமாக வறுக்கப்பட்ட பாதாம், முந்திரி மற்றும் பழங்கள், பால் போன்றவை சமர்ப்பிக்கப்படுகிறது. பின்னர் இவை பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

காகித பாட்டில், Paper bottle

1907  ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவு

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரிய ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். குறிப்பாக சூரியனை தவிர மற்ற எந்த கோள்களுக்கும் சுயமாக பிரகாசிக்கும் தன்மை கிடையாது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் சூரிய ஒளியை பூமி பிரதிபலிக்கும் தன்மை சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள பிக் பியர் சோலார் அப்சரவேட்டரி ஆய்வகத்தைச் சேர்ந்த பிலிப் கூடி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கடந்த 1998 முதல் 2017 வரையிலான பூமியின் பிரதிபலிப்பு திறன் குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வு செய்ததில் பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவிக்கின்றனர். அதிலும் கடந்த 3 ஆண்டுகளில் தான் அதிக அளவு சரிவு ஏற்பட்டதாகவும் அவர்களது ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் சீனித்துளசி வளர்த்தால் சர்க்கரைக்கு குட்பை சொல்லி விடலாம்

ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் ‘இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி’ மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. சீனாதான் அதிகம் ஏற்றுமதி செய்கிறது. கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது. கரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கூடுதல் சிறப்பு. அப்புறம் என்ன...இப்போதே நர்சரிக்கு சென்று சீனித்துளசிக்கு ஆர்டர் செய்து விடுங்கள். என்ன சரிதானா..

மாவீரனின் முடிசூட்டும் விழாவைபுறக்கணித்த தாயார் யார் தெரியுமா?

மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார். 1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார். நெப்போலியன், தன் தாயின் மீது அதிக அன்பு கொண்டவர். பிரெஞ்சு சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொண்டபோது, அவரது தாயார் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. முடிசூடிவிட்டு விழாவை ஓவியமாக வரையச் சொன்ன நெப்போலியன், தன்னுடைய தாயும் அந்த  விழாவில் கலந்து கொண்டதைப்போல் ஓவியம் வரையும்படி கேட்டுக் கொண்டார். அவ்வாறு வரையப்பட்ட ஓவியம்தான் பிரான்ஸ் அரண்மனையில் இன்னும் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago