முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பளபளப்பு தேன்

தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவவேண்டும். இது சரும துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல் அதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். எனவே இனிமேல் சோப்பு தேவையின்றி முகத்தை சுத்தம் செய்யலாம்.

புத்துணர்வு தரும்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல் பாதுகாக்க முடிகிறது. கேரட், தக்காளியை பொடியாக நறுக்கி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து அதில் கருப்பு உப்பு, சீரகத்தூள், புதினா இலைகளை கலக்கி பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியான பிறகு எடுத்து அருந்தினால்,  உடல் குளிர்ச்சியும், புத்துணர்வும் பெற இந்த ஜூஸ் உதவுகிறது.

கயி்ற்றின் மீது நடப்பவர்கள்: ரஷ்யாவில் வினோத கிராமம்

நம்மூர்களில் திருவிழாக் காலங்களில் வித்தை காட்டும் கலைஞர்கள் தெருவில் இரு புறமும் கயிறை கட்டி கூத்தாடுவதை பார்த்திருக்கிறோம். அதையை சற்று உயரமாகவும், நீளமாகவும் மாற்றி வெளிநாடுகளில் சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். அண்மையில் இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபில் டவர் மீது கயிற்றை கட்டி அசால்ட்டாக நடந்து சென்று சாதனை செய்த வீடியோ நெட்டில் வைரலாக பரவியதை அனைவரும் பார்த்திருக்கலாம்.ஆனால் ஒரு கிராமமே கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா.. என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த கிராமத்தில் முதியவர் தொடங்கி இளையவர் வரை, பெண்கள் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவரும் கயிற்றில் நடக்கும் வித்தை தெரிந்தவர்களாக அசத்து கின்றனர். இந்த வினோத கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா.. ரஷ்யாவில்.. பொதுவாகவே சர்க்கஸ் துறையில் ரஷ்யர்கள் தான் எப்போதும் முன்னிலையில் இருப்பவர்கள். கடந்த நூற்றாண்டில் சர்க்கஸ் தொழில் செழித்து கிடந்த கால கட்டத்தில் ரஷ்யர்கள் உலகம் முழுவதையும் வியாபித்திருந்தனர். தற்போது சர்ககஸ் தொழில் படிப்படியாக குறைந்து விட்டது.மக்களுக்கும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவது இல்லை. அது கிடக்கட்டும்.. கயிற்றின் நடக்கும் அந்த கிராமம் Russia’s Dagestan autonomous republic என்று சொல்லப்படும் பிராந்தியத்தில் உள்ள Tsovkra-1 என்ற சிறிய கிராமம் தான் அது. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுமே கயிற்றில் நடக்கும் திறன் பெற்றவர்கள் என்பதாலேயே அது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் 3 ஆயிரம் மக்கள் தொகையை கொண்டிருந்த அந்த கிராமம் தற்போது 300 பேராக குறைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கயிற்றின் மேல் நடக்கும் மரபை அவர்கள் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாப்பிங் மால் முதன்முதலில் எங்கு கட்டப்பட்டது

இன்றைக்கு நவீன நாகரிக உலகில் பேஷன் மால்களை கடக்காமல் நம்மால் ஒரு நாளை கூட தாண்ட முடியாது... முதன் முதலில் ஷாப்பிங் சென்டர்கள் எங்கு கட்டப்பட்டன தெரியுமா...ரோமில்தான். அங்குள்ள குயிரினல் ஹில் பகுதியில் தான் டாமஸ்கஸ் கட்டிட கலைஞர் அப்போலோ டோரஸ் என்பவரால் முதன் முதலில் இரண்டாம் நூற்றாண்டில் 5 அடுக்கு ஷாப்பிங் மால் கட்டப்பட்டது. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பெரிய சந்தை வணிக வளாகம் இதுவாகும். தற்போது இந்த கட்டிடம் ஒரு அருங்காட்சியகமாக பராமரிக்கப்படுகிறது.

மெட்ரிக் முறையிலான கணக்கீடுகளை பயன்படுத்தாத நாடு எது தெரியுமா&?

இன்றைய நவீன உலகத்தில் நீட்டல், முகத்தல், நிறை என அனைத்தும் நவீன கணிதத்தின் மெட்ரிக் முறையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. நீர் பொருள்களை அளக்க லிட்டர், மில்லி லிட்டர் இப்படி, நீளத்தை அல்லது தூரத்தை அளக்க மில்லி மீட்டர், செமீ, மீட்டர் இப்படி, எடையை அளக்க கிராம், மில்லி கிராம், கிலோ கிராம்... இப்படி. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 நாடுகள் இந்த முறைகளையே அளவீடுகளுக்கு பயன்படுத்துகின்றன. ஆனால் இதை பயன்படுத்தாத நாடுகளும் உலகில் உள்ளது என்றால் ஆச்சரியமானது தானே.. அவை மியான்மர், லைபீரியா மற்றும் அமெரிக்கா.  அண்மையில் லைபீரியாவும், மியான்மரும் மெட்ரிக் அளவீடுகளை ஏற்பதாக அறிவித்தன. ஆனால் அமெரிக்கா மட்டும் விதி விலக்கு. அவை யார்டு, அவுன்சு, பவுண்டு என்று பழைய கணக்கை கொண்டுள்ளது என்றால் ஆச்சரியமானு தானே..

செவ்வாயில் குடியேறலாம்....

அமெரிக்காவில், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, ஓரியண் விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா ஆய்வு மையம் கவனம் செலுத்தி வருகிறது. அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யவும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளுக்காக கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளநிலையில், மற்றொரு ரோவர் விண்கலத்தினை 2020 வாக்கில் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் வரும் 2033ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை நாசா நிச்சயம் அனுப்பும் என நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago