பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா? 1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் உறங்குவதாக திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சில தூங்கி வழியும் அலுவலகங்களும் உண்டு. இதன் அர்த்தம் அதன் மந்தகதியை குறிப்பிட இப்படியும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ அலுவலக பணியிடங்களிலேயே உறங்குபவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் சொல்லி குற்றமில்லை. இரவு முழுவதும் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என நாம் என்ன அருகிலிருந்தா பார்க்க முடியும்.போகட்டும். வேறு சிலருக்கோ பணி ஒவ்வாமை காரணமாக அலுவலகங்களில் தூங்கும் பிரச்னைக்கு ஆளாவார்கள். அதே பிரச்னையை கல்லூரிகளில் நம்மூர் மாணவர்களும் எதிர் கொள்வதுண்டு. படிக்கும் சப்ஜெக்ட்டுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது கொட்டாவி ஆட்டோமேட்டிக்காக நம் வாயை பிளக்க வைத்துவிடும். துடிப்பான இளைஞர்களை கூட தூங்க வைக்கும் சக்தி நமது கல்வி நிலையங்களுக்கு உள்ளது. தூக்கம் வராதவர்களை நம்மூர் பேராசிரியர்களிடம் கொண்டு விட்டால் போதும் ஒரே நிமிடத்தில் கொர் என குறட்டை விட்டு தூங்கத் தொடங்கி விடுவர். எல்லாம் நகைச்சுவைக்காக சொல்லப்படுவதுதான்..ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தூங்கத் தயாரா உங்களுக்கு இந்திய பண மதிப்பில் ரூ.25 லட்சம் சம்பளம் தயார் என ஒரு வெளிநாட்டு நிறுவனம் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த மெத்தை தயாரிக்கும் நிறுவனமான கிராஃப்டட் பெட் நிறுவனம் தான்.. வாருங்கள்.. எங்கும் போக வேண்டாம்.. எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்றும்...எங்கள் மெத்தையில் படுத்து நன்றாக தூங்குகள்.. அவ்வாறு தூங்கினால் ரூ.25 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் மிரர் என்ற செய்தி தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இன்றைக்கு புத்தக கண்காட்சிக்கு போனால் புத்தக விலைகளை கேட்டால் மயங்கி விழாத குறையாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு விலைகள் தாறுமாறாக எகிறிவிட்டன. இதில் பதிப்பாளர்களை குற்றம் சொல்லியும் பயன்இல்லை. புத்தகத்துக்கு தேவையான காகித விலை, மை, அச்சடிக்கும் செலவு எல்லாம் அதிகரிக்கும் போது புத்தக விலையும் கூடத்தானே செய்யும். அது கிடக்கட்டும். உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையான புத்தகம் எது தெரியுமா... லியோனார்டோ டாவின்சியால் எழுதப்பட்ட கோடெக்ஸ் லெயிஸ்டர் என்ற புத்தகம்தான் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையானது. அந்த புத்தகத்தை வாங்கியவர் மைக்ரோ சாப்ட் அதிபர் பில்கேட்ஸ். விலை எவ்வளவு தெரியுமா 30.8 மில்லியன் டாலர். அவர் அந்த பணத்தை வெறும் 1 மணி நேரத்தில் ஈட்டி விடுவார் என்றால் அது அதை விட சுவாரசியம் தானே.
ஏலியன்ஸ் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது யு.எப்.ஓ என்ற அமைப்பு தகவலை கொடுத்து வருகிறது. அதன்படி, செவ்வாய் கிரகத்தில் குரங்கு வடிவில் ஏலியன்ஸ் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான சிலந்தி மற்றும் நத்தைகள் வடிவில் ஏலியன்ஸ் காணப்படுவதாக கூறியுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் நாசா, செவ்வாய் கிரக்ததில் ஆறு இருந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு ஏலியன்ஸ் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது, செவ்வாயில் குடியேறும் மனிதனின் ஆர்வத்தில் பீதியை கிளப்பியுள்ளது.
புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.
கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் ரஷ்யா, ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் காஸ்பியன் கடல் இடையே அஜர்பைஜான் நாடு அமைந்துள்ளது. பெண்களுக்கு உரிமை வழங்கிய முதல் முஸ்லிம் நாடு. 1918 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் முஸ்லீம் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இன்றுவரை ஆண் பெண் சமத்துவ முஸ்லிம் நாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இங்கு திருமணம் நிச்சயம் வித்தியாசமாக தேநீர் கோப்பை மூலமாக நடத்தப்படுகிறது. திருமண நிச்சயம் செய்ய கூடியிருக்கும் பொழுது தேனீர் கோப்பைகள் சர்க்கரை இல்லாமல் பரிமாறப்பட்டால் திருமணம் இன்னும் நிச்சயம் செய்யப்படவில்லை என அர்த்தம். தேனீர் கோப்பையில் தேநீர் இனிப்பு சேர்த்து கொடுக்கப்பட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என அர்த்தம். அஜர்பைஜானின் தேசிய விலங்கு கராபக் குதிரை. இது உலகின் பழமையான இனங்களில் ஒன்றாகும். அஜர்பைஜானில் குதிரை இறைச்சி ஒரு காலத்தில் பரவலாக உண்ணப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு பதிலாக மெனுவில் ஆட்டுக்குட்டி மற்றும் மாட்டிறைச்சியைக் காணலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு அறிவிப்பு திடீர் ‘வாபஸ்'
20 Nov 2025சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதிதேர்வு விண்ணப்பப்பதிவு வாபஸ் ஆனது.
-
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
20 Nov 2025சென்னை: பார்சல்களை அனுப்ப தனி ரயில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.823 கோடிமதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது அமெரிக்கா
20 Nov 2025நியூயார்க்: டாங்கி எதிர்ப்பு ஏவுகண, பீரங்கி குண்டுகள் இந்தியாவுக்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்
20 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஓவியம் ஏலம் போனது.
-
மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Nov 2025ராமநாதபுரம்: மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்துள்ளது.
-
நியூயார்க் மேயரை இன்று சந்திக்கிறோர் ட்ரம்ப்
20 Nov 2025நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
-
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
20 Nov 2025ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
-
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயம்
20 Nov 2025சென்னை, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
-
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
20 Nov 2025டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.
-
தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்துவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசு தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவு படுத்திவருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
சென்னை-ஆந்திரா இடையே சிறப்பு ரயில்
20 Nov 2025சென்னை: சென்னை - ஆந்திரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்
20 Nov 2025பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு
20 Nov 2025புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.
-
இந்திய வீரர்களுக்கு வரவேற்பு
20 Nov 2025இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது.
-
சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை: வரும் 24-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு
20 Nov 2025கேரளா: சபரிமலைக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வருகையை அடுத்து வரும் 24-ம் தேதி வரை ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கல்விசார் கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Nov 2025சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை திறந்து வைத்து, உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் மற்றும் உதவி இயக்குநர்
-
350 சதவீதம் வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா - பாக். போரை நிறுத்தினேன் : அதிபர் ட்ரம்ப் 60-வது முறையாக பேச்சு
20 Nov 2025வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார்.


