முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொடிய விஷமான சயனைடே உயிர்கள் உருவாக காரணமாம்

உயிரை எடுக்க கூடிய சயனைடே உயிர்கள் உருவாக காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.  புதிய ஆராய்ச்சியில் ,  கொடிய சயனைடு  கலவை, உண்மையில், பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது. விஞ்ஞானிகள் சயனைடைப் பயன்படுத்தி ஒரு இரசாயன எதிர்வினையை உருவாக்கியுள்ளனர்,சயனைடு நான்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்கத் உதவியது என கண்டறிந்து உள்ளனர். சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரோஜன் அணுக்களால் உருவானது. இதன் அறிவியல் பெயர் சிஎச் (CH). இதை உட்கொண்டால் உடனே மரணம் தான். பிழைத்தாலும் வாழ்நாள் எல்லாம் நரம்பு சம்பந்த பட்ட நோய்களால் அவதி பட நேரிடும். இதுகுறித்து கூறிய ஆராய்ச்சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம், மேலும் வேற்றுகிரகவாசிகளை கண்டறிய நமக்கு  உதவலாம்' என்று கூறி உள்ளனர். ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் ராமநாராயணன் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கிரகங்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறிகளைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம். இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.

நோபல் பரிசுக்கு ஹிட்லர் பரிந்துரைக்கப்பட்டார் தெரியுமா?

ஹிட்லர், வரலாற்றில் படிந்த ரத்தகறை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் கொடுங்கோலராகவும், யூதர்களை கொன்று குவித்த சர்வாதிகாரியாகவும் உலகம் முழுவதும் அவரை கண்டு ஒரு காலத்தில் நடுநடுங்கியது. இந்த சூழலில் அவர் உலகின் உயரிய விருதான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா.. அதுவும் எதற்கு தெரியுமா... சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு. அவரை பரிந்துரை செய்து 1939 இல் சுவீடன் நாட்டின் எம்பி எரிக் பிரான்டிட் என்பவரால் பரிந்துரை செய்யப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக அந்த பரிந்துரையை அந்த எரிக் பிரான்டிட் திரும்ப பெற்றுக் கொண்டார். இதில் ஒரு முரண் நகையான விசயம் என்னவென்றால், நோபல் பரிசு  பெறுவதற்கு ஜெர்மானியர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஹிட்லர் தடை விதித்திருந்தார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக அவரது பெயரே நோபல் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..

புதிய யுக்தி

சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் போது, ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மருத்துவமனை சிறாரே ரிமோட் கண்ட்ரோல் காரில் செல்லும் வகையிலான புதிய வசதியை உருவாக்கி உள்ளனர். இதனால் சிறார் மற்றும் பெற்றோருடைய பதற்றம் தணிகிறதாம்.

நுங்கின் பயன்

நுங்கு சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளது. மேலும், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடு எது தெரியுமா?

உலகிலேயே சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடு எது தெரியுமா..உலகிலேயே அழகிய நாடு என வர்ணிக்கப்படும் பிரான்ஸ்தான் அது. ஐநாவின் சுற்றுலா கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2017 இல் ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்ஸ் நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 86.9 மில்லியன். இதற்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த நாடு ஸ்பெயின். அங்கு விசிட் அடித்தவர்கள் எண்ணிக்கை 81.8 மில்லியன். அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றவர்கள் 76.9 மில்லியன், சீனா-60.7 மில்லியன்,இத்தாலி - 58.3 மில்லியன் என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago