கரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன். சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன். அடிக்கடி வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதால் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். பல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இ.ஏ. ஜான்சன் என்பவர் தான், தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு முன்னோடி என்று கூறலாம். 1967 வரை ராயல் ரேடார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். வேலையை விட்டு நின்ற பிறகு, 1968ல், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் தொடர்பாக அறிவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில்தான், முதன்முதலாக தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. முதன்முதலாக தொடுதிரையை செயல்வழியில் வெளி உலகுக்குக் காண்பித்தவர், சாம் ஹர்ஸ்ட் என்பவர்.அமெரிக்காவில் உள்ள கென்ட்யூக்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார் ஹர்ஸ்ட். 1971ல், இவர் உருவாக்கிய முதல் தொடுதிரை தொழில்நுட்பத்துக்கு ‘எலோகிராஃப்’ (Elograph -– Electrical and Optoelectronic Graphene Devices) என்று பெயரிடப்பட்டது. இந்த எலோகிராஃப் (Elograph)தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை கென்ட்யூக்கி பல்கலைக்கழகம் பெற்றது. பின்னர் வேலையை விட்டுவிட்டு, எலோகிராஃபிக்ஸ் என்று தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கினார் சாம் ஹர்ஸ்ட். 1974ல், ஒளிபுகும் தொடுதிரையை பேராசிரியர் சாம் ஹர்ஸ்ட் உருவாக்கினார். சீமன்ஸ் நிறுவனத்தின் நிதியுதவிடன்தடை மின்னோட்ட தொடுதிரை தொழில்நுட்பத்தை ( resistive touch screen technology) உருவாக்கி, அதற்கான காப்புரிமையையும் பெற்றார். வளைவான கண்ணாடியாக இருந்த கருவிக்கு, எலோகிராஃபிக்ஸ் நிறுவனம் ‘டச் ஸ்கிரீன்’ என்று பெயரிட்டு அழைத்தது. அப்படிப் பிறந்ததுதான், இன்று நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம்.
இன்றைக்கு நகரங்களில் நம் வீட்டுக்குள்ளேயே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை வந்துவிட்டது. இதற்கு இயற்கையாகவே ஒரு தீர்வு இருக்கிறது, மரூள் (snake plant)-சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில் ஒன்றான மருள், கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைடு, பென்சீன், சைலீன் மற்றும் ட்ரைக்ளோரெத்திலீன் உள்ளிட்ட குறைந்தது 107 அறியப்பட்ட காற்று மாசுபாடுகளை நீக்குகிறது. எந்தவொரு காலநிலையிலும் செழித்து வளரும். மணிபிளான்ட் (Money plant)-இது ஒரு சக்திவாய்ந்த காற்று சுத்திகரிப்பு தாவரமாகும், இது உங்கள் வீட்டிலுள்ள காற்றை மிகவும் திறம்பட சுத்தம் செய்யும், இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் குழந்தைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பீஸ் லில்லி (Peace lily)-இது ஒரு சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரம் ஆகும். இது ஃபர்னிச்சர், மின்னணுப் பொருள்கள் போன்றவற்றால் உருவாகும் தூசுகளையும் தன்னுடைய பெரிய இலைகளின் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளும். கற்றாழை (Aloevera)-சருமம் சார்ந்த பிரச்னைகளுக்குக் கற்றாழை தீர்வை தரவல்லது என்பது நம் மருத்துவத்தில் காலங்காலமாக இருக்கும் விஷயம். அதைத் தவிர்த்து காற்று சுத்திகரிப்பிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. இதை வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கைகொடுக்கும். புதினா (Mint)-இதன் இலைகள் மிகவும் மணமுடையவை. இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் இதை வளர்ப்பதன் மூலம் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி நீடித்திருக்கும். எலுமிச்சைப்புல் (Lemon grass)-இதில் சிட்ரல் (citral) என்னும் வேதிப்பொருள் உள்ளதால், மனச்சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும், காற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும், கிருமிநாசினியாகவும் ஓர் இயற்கை கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது.
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர், துரியன் பழக் கழிவுகளை கொண்டு சூப்பர் மின்தேக்கிகளாக மாற்ற முடிந்தது, இதன் மூலம் ஆற்றலை சீராக வெளியேற்ற முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பரிசோதனை முறையில், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் போன், மடிக்கணினி மற்றும் பிற அன்றாட கேட்ஜெட்களை சார்ஜ் செய்ய முடியும். துரியன் மற்றும் பலாப்பழங்களிலிருந்து வரும் கழிவுகளை “விரைவான மின்சார சார்ஜ் செய்ய” energy stores-களாக மாற்றலாம். துரியன் மற்றும் பலாப்பழங்கள் இந்த ஆய்வுக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏனெனில் அவற்றின் போரோசிட்டி மற்றும் பெரிய பரப்பளவு காரணமாக அவை தேர்வு செய்யப்பட்டன. துரியன் மற்றும் பலா-பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பர்-மின்தேக்கிகள் தற்போது பயன்படுத்தப்படும் பொருட்களை விட கணிசமாக சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த கிராபெனின் அடிப்படையிலான பொருட்களுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியை உருவாக்கலாம். மேலும் இந்த முறை, வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு உதவுவதோடு, புதைபடிவ எரிபொருளை ஆற்றலாக மாற்றுவதற்கான தற்போதைய முறைகளுக்கு ஒரு மாற்றையும் வழங்க முடியும்.
முட்டையை நாம் நிலத்தின் மீது உடைத்தால் அது அப்படியே உடைந்து கலைந்து போவதை நம்மால் காண முடியும். அதே வேளையில் கடலுக்கு அடியில் உடைத்தால் என்ன ஆகும் தெரியுமா... கடலுக்கு அடியில் சுமார் 18 மீட்டர் அல்லது 60 அடி ஆழத்துக்கு கீழே சென்று விட்டாலே அங்கு அழுத்தம் அதிகரித்து காணப்படும். அது வெளிப்புறத்தில் காணப்படுவதை காட்டிலும் 2.8 மடங்கு கூடுதலான அழுத்தத்துடன் இருக்கும். இங்கு ஒரு முட்டையை உடைத்தால் அழுத்தம் காரணமாக அது கலைந்து போகாமல் ஒரு ஜெல்லி மீனைப் போல காட்சி அளிக்கும் என்பது ஆச்சரியம் தானே..
உலகிலேயே மிகவும் குறைவாக மழை பொழியும் இடம் பாலைவனம் என நீங்கள் கருதினால் அது தவறு.. உண்மையில் மழை குறைவாக பெய்யும் இடம் துருவ பிரதேசமான அண்டார்டிகாவில் தான் மழை பொழிவு குறைவு. அங்கு ஆண்டுக்கு 6.5 அங்குலம் மட்டுமே மழை அல்லது பனி பொழிகிறது. அதே நேரத்தில் கொலம்பியாவில் உள்ள லோரோ என்ற இடத்தில் ஆண்டுக்கு 500 அங்குலத்துக்கும் அதிகமாக மழை பொழிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
11 Nov 2025சென்னை : திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை
-
தமிழகத்தில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட்
11 Nov 2025புது டெல்லி : தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருப்பதோடு, சிறப்பு தீவ
-
பீகார் மாநில சட்டசபை தேர்தல் முடிவு: கருத்துக்கணிப்பு விவரம் வெளியீடு
11 Nov 2025புதுடெல்லி : பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அல்லது கூட்டணி யார்? என்ற கருத்துக்கணிப்பு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
-
டெஸ்ட் தொடர் எளிதாக இருக்காது: தென்னாப்பிரிக்க அணிக்கு சவுரவ் கங்குலி எச்சரிக்கை
11 Nov 2025மும்பை : இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது என தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கு
-
மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நமது கடமை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
11 Nov 2025சென்னை : மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க எஸ்.ஐ.ஆர்.-ஐ தடுப்பதே நம்முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய 80 ரோந்து வாகனங்களின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
டெஸ்ட் தொடர் குறித்து சிராஜ்
11 Nov 2025தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடர் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
-
கொல்கத்தா அணியில் இருந்து வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட நான்கு வீரர்கள் விடுவிப்பு?
11 Nov 2025மும்பை : 19-வது ஐ.பி.எல்.
-
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 10 நலிந்த கலைஞர்கள் உள்பட 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
11 Nov 2025சென்னை : தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
வாக்குரிமையை பறிப்பதற்கான சதியில் உள்ளார்: இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி காட்டம்
11 Nov 2025சென்னை : வாக்குரிமையை பறிப்பதற்கு துணை போகும் பா.ஜ.க. சதியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு பார்ட்னர். இந்தியாவிலேயே எஸ்.ஐ.ஆர்.
-
திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Nov 2025சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
-
இடைத்தேர்தல் நடைபெற்ற நுவாபடா உள்ளிட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
11 Nov 2025ஐதராபாத் : 8 பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
-
தமிழ்நாட்டிற்கு மேகதாது அணையால் பாதிப்பில்லை : கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு
11 Nov 2025பெங்களூரு : மேகதாது அணையால், தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: இன்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் இன்று (நவ. 12) மாலை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பீகார் இறுதிக்கட்ட தேர்தல்: விறுவிறுபான ஓட்டுப்பதிவு
11 Nov 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத் தேர்தலில் நேற்று விறுவிறுபான ஓட்டுப்பதிவு நடந்தது. அங்கு 60.40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறி
-
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பிலான சாலை மேம்பாலம் திறப்பு : தியாகி சங்கரலிங்கனார் என பெயர் சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
11 Nov 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 61 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சாலை மேம
-
தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: ஸ்ரேயாஸ் விளையாடுவது சந்தேகம்: பி.சி.சி.ஐ தகவல்
11 Nov 2025சிட்னி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவது சந்தேகம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: இந்திய-தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிக்கு கூடுதல் பாதுகாப்பு
11 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்காக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லி குண்டுவெடிப்பு சதிகாரர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி : பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்
11 Nov 2025திம்பு (பூட்டான்) : டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
தமிழகத்தின் செழுமையை உலகறிய செய்யும்: 'பொருநை அருங்காட்சியகம்' குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Nov 2025சென்னை : பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
சிவகங்கை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Nov 2025சென்னை : சிவகங்கை சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை-அபராதம்
12 Nov 2025சென்னை : சென்னை கவர்னர் மாளிகை முன் 2023-ம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதி
-
தமிழ்நாட்டில் பருவமழை 3 சதவீதம் குறைவு
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் இயல்பை விட 3 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


