தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்தும், மூங்கில் கம்புகளை வைத்தும் அழகான பஸ் ஸ்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. பேம்பூ ஹவுஸ் இந்தியா எனும் தனியார் நிறுவனத்தால் இந்த பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. 1000 பழைய பாட்டில்களை வைத்து 8 அடியில் இந்த பஸ் ஸ்டாப் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று நாட்கள்
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த Scarlett Ashley Cheng என்ற 6 வயது சிறுமி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்றால் நம்புவதற்கு சிறிது கடினம் தான். ஆனால் அதுதான் உண்மை. அவரும், அவரது சகோதரியான 8 வயது Kaylyn என்ற சிறுமியும் இணைந்து 3 388 உதட்டு தைலங்களை சேகரித்து வைத்துள்ளனர். தற்போது இது கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. லிப்ஸ்டிக்கை போலவே லிப் பாம் என அழைக்கப்படும் உதட்டு தைலம் நவீன பேஷனில் ஒரு அங்கமாக உள்ளது. உதடுகளில் விதவிதமாக பூசிக் கொள்ளும் 100 கணக்கான பிராண்டுகள் சந்தைகளில் குவிந்து கிடக்கின்றன. தங்களது பாட்டியிடமிருந்து இது குறித்து தெரிந்து கொண்ட குழந்தைகள் படிப்படியாக இதை சேகரிக்க தொடங்கி இன்று உலக சாதனையாக மாறியுள்ளது.
மின்சாரத்தில் இயங்கக்கூடிய சைக்ளோட்ரான் என்ற தானியங்கி பைக்கில், ஒரே சமயத்தில் இரண்டு பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்ளோட்ரான் தானியங்கி பைக்கில் இரு பயணிகளும் நேருக்கு நேர் அமர்ந்து கொண்டு செல்லலாம். எல்லா காலங்களிலும், அதாவது, குளிர்காலம், வெயில்காலம், மழைகாலத்திலும் இந்த வாகனத்தை இயக்கலாம்.
சென்னையில் விரைவு ரயில், மின்சார ரயில் பயணச்சீட்டுகளை எடுப்பதற்கு கால தாமதத்தை தவிர்க்க, தெற்கு ரயில்வே தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பயணச்சீட்டு வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே இதை வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பயணிகளின் கூடுதல் வசதிக்காகவும், மேலும் கால தாமதத்தை தவிர்க்கவும், தானியங்கி பயணச்சீட்டு விநியோகம் செய்யும் எந்திரத்தில் 'க்யூ. ஆர்' கோடு மூலமாக பணம் செலுத்தும் வசதியையும், பயணச்சீட்டு பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் 'க்யூ. ஆர்' கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம். மேலும் மாதாந்திர பயண சீட்டை க்யூஆர் கோடு மூலம் புதுப்பித்து கொள்பவர்களுக்கு 0.5 சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் தரையில் சீறிப் பாயும் கார்கள் வானில் பறக்கும் என்று கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அந்த கற்பனை உண்மையாகி வருகிறது. வெகு விரைவில் உலகம் முழுவதும் பறக்கும் கார்கள் வானில் வலம் வரப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கு அச்சாரமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வித்தியாசமான கார் பந்தயம் இதை நிரூபித்துள்ளது. அதிலும் இதில் பங்கேற்ற அனைத்து கார்களும் வானில் பறக்கக் கூடியவை. அது மட்டுமின்றி இவை அனைத்தும் பெட்ரோல் போன்ற எரிபொருள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. சுத்தமாக சொன்னால் பறக்கும் எலெக்ட்ரிக் கார்கள். அக்டோபரின் இறுதியில் நடைபெற்ற இந்த போட்டிகள் குறித்த ஆச்சரிய வீடியோ தற்போது வெளியாகி நெட்டை கலக்கி வருகிறது. இந்த போட்டியினை தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலடா ஏரோநாட்டிக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் வடிவமைத்து, தற்போது நடத்தி முடித்துள்ளது. இப் போட்டிக்கு ‘ஏர்ஸ்பீடர்'-இன் முதல் பகுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாலைவன பகுதியில், வெறும் 300மீ தொலைவிற்கு மட்டுமே இந்த போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள எக்ஸா (EXA) எனப்படும் சர்வதேச போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒத்திகை போன்றதாகும். இவ்வாறான பந்தயங்கள் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பிற்கு ஊக்கமளிக்கும்.
மாம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமம் சுருக்கம் அடைவதை தடுக்கும். முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். பின் உங்கள் முகம் ஜொலிக்கும். மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு போகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


