தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனதை மாற்ற, பேஸ்புக், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அப்டேஷன் மிக விரைவில் வெளியாகுகிறது. பேஸ்புக்கில் உள்ள தற்கொலை தடுப்பு டூல்களை பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015-ம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக ஒரு காதை கையில் வளர்த்து, அதை பொருத்தி வெற்றியடைந்துள்ளனர் சீன மருத்துவர்கள். 3டி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து அது கையில் பொறுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவர்களின் உதவியால் கடந்த நவம்பர் மாதம் ஜி காதை வளர்க்க தொடங்கினர். கடந்த 4 மாதங்களாக காது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது. தற்போது நன்கு வளர்ச்சி அடைந்த அந்த காதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி காது இருக்க வேண்டிய இடத்தில் பொருத்தியுள்ளனர். சுமார் ஏழு மணி நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பொருத்தப்பட்ட அவரது காது தற்போது நன்றாக கேட்கப்படுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் ஒரு ஆண், கருவை சுமந்து குழந்தையை பெற்றெடுக்க தயாராகி வருகிறார். உலகம் உருவான நாள் முதல் குழந்தைக்கு தந்தை என ஆண் இருந்து வருகிறார். குழந்தையை கருவில் சுமக்கும் பெண்ணே தாயாக இருந்து வருகிறார். இந்த நிகழ்வை மாற்றும் விதமாக இந்த பிரிட்டனில் ஆண் ஒருவர், கருவை தனது வயிற்றில் சுமந்து குழந்தை பெற முடிவு செய்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக சட்ட பூர்வமாக ஆணாக வாழ்ந்து வருகிறார். இவர் பெண் பாலினத்தில் இருந்து ஆண் பாலினமாக மாறும் ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர். இவர் தனது வயிற்றில் கருவை சுமந்து குழந்தை பெறும் போது குழந்தையை தனது வயிற்றில் சுமந்து பெற்றெடுத்த முதல் பிரிட்டன் ஆண் என்ற சாதனையை படைப்பார்.
உலகளவில், சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வில் ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் உள்ளது. ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.
இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்போது, தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம். புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் மிகவும் அபாயமானது. இந்த வகை நோய்களை கண்டறிய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுகிறது.
நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சந்திராயன் 1 செயற்கைக்கோளை, 2008-ஆம் ஆண்டு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திராயன் 1 செயற்கைக்கோள் அனுப்பட்ட பின் ஓராண்டு காலமாக நிலவைப் பற்றிய பல தகவல்களை கண்டறிந்து, இஸ்ரோவிற்கு அனுப்பியது. அதன்பின் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1-இன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சந்திராயன் 1 தொலைந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் சந்திராயன் 1 செயற்கைக்கோள் இன்னமும் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருப்பதாகவும், அது தொலையவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை
08 Dec 2025புதுடெல்லி, ஜனவரி மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் டிச.14 வரை மழைக்கு வாய்ப்பு
08 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிசம்பர் 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
08 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்கள் துணையுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றும் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வாக்குகள் 2.50 கோடியை தாண்டும் என்றும் மாவட்ட செயலாள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-12-2025
08 Dec 2025 -
புதுச்சேரி இன்று நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க.தலைவர் விஜய் பேசுகிறார்: 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி
08 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார்.
-
பல்கலை., பட்டமளிப்பு விழா: கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல: ஐகோர்ட்
08 Dec 2025மதுரை, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதிப்பது ஏற்புடையதல்ல என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி த.வெ.க. பொதுக்கூட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை - என்.ஆனந்த்
08 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த த.வெ.க. தொண்டர்களுக்கு அனுமதியில்லை என்று பொதுசெயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து த.வெ.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரிடம் சி.பி.ஐ. விசாரணை
08 Dec 2025கரூர், கரூர் சம்பவத்தை தொடர்ந்து சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவி
08 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
-
பாலியல் வழக்கு திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது: விடுதலைக்கு பிறகு நடிகர் திலீப் பேட்டி
08 Dec 2025திருவனந்தபுரம், என் மீதான பாலியல் வழக்கு என் திரைத்துறை வளர்ச்சியை அழித்துவிட்டது என நடிகர் திலீப் வேதனை தெரிவித்துள்ளார்.
-
23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம்: மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
08 Dec 2025சென்னை, 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 சட்டமன்ற தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
முதல்வர் சார்தான் உதவி பன்னணும்: கேரம் சாம்பியன் கீர்த்தனாவின் தாயார் கோரிக்கை
08 Dec 2025சென்னை, உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் கீர்த்தனா 3 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
-
தி.மு.க. ஊழல்: கம்பி எண்ணப்போவது உறுதி - எடப்பாடி பழனிசாமி பரபரப்பு
08 Dec 2025சென்னை, தி.மு.க. ஊழல் கூறித்து கம்பி எண்ணப்போவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
இண்டிகோ குளறுபடிகள் குறித்து பார்லி. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
08 Dec 2025புதுடெல்லி, திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே இண்டிகோ விமான நிறுவனத்தின் குளறுபடிக்கு காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாய
-
வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்றும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது: பிரதமர் மோடி
08 Dec 2025புதுடெல்லி, வருங்கால சந்ததிகளுக்கு வந்தே மாதரம் வழிகாட்டியாக இருக்கும்.
-
இந்து விரோத அரசியலுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்: வானதி சீனிவாசன்
08 Dec 2025சென்னை, தி.மு.க.வின் அரசியலுக்கு முடிவு கட்டப்படும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.
-
கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டது: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வேதனை
08 Dec 2025மும்பை, கிரீமிலேயருக்கு ஆதரவாக பேசியதாக என் மீது குற்றம் சாட்டினர் என்று முன்னாள் தலைமை நீதிபதி பிஆர் கவாய் வேதனை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு மத்திய அரசின் விருதுகளை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற கலெக்டர்கள்
08 Dec 2025சென்னை, மத்திய அரசின் தேசிய நீர் விருதுகள் மற்றும் நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள் உள்ளிட்ட விருதுகளை பெற்ற 5 மாவட்டங்களின் கலெக்டர்கள் தமிழக முதல்வர்
-
வரும் 11-ம் தேதி தே.ஜ. கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி
08 Dec 2025புதுடெல்லி, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பாராளுமன்ற அவை வியூகத்தை நெறிப்படுத்தவும் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப
-
த.வெ.க. தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி: டிடிவி தினகரன் பரபரப்பு
08 Dec 2025திருப்பூர், த.வெ.க. தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
வனவிலங்கு இடமாற்றம்: வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணர் குழு அமைத்த அரசு
08 Dec 2025சென்னை, யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
நடிகை பாலியல் வழக்கு: பிரபல மலையாள பட நடிகர் திலீப் விடுவிப்பு: எர்ணாகுளம் கோர்ட் உத்தரவு
08 Dec 2025எர்ணாகுளம், நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று எர்ணாகுளம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். விவாதம்: பா.ஜ.க. பார்லி., கூட்டம் இன்று கூடுகிறது
08 Dec 2025டெல்லி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (டிச. 9, செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
98.92 கோடி ரூபாய் செலவில் புதிய மீன் விதை பண்ணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Dec 2025சென்னை, புதிய மீன் விதைபண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
100 சதங்கள் அடிப்பார்: கோலி மீது கவாஸ்கர் நம்பிக்கை
08 Dec 2025மும்பை, கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ள சுனில் கவாஸ்கர், அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.


