Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஷாம்பூவை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர்.  இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..

மினி சூரியன்

புவியிலிருந்து சுமார் 472 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கும், ஐந்து மில்லியன் முதல் 10 மில்லியன் வயது கொண்ட ரிக்-210 நட்சத்திரம் திடீரென 5.67 புவிநாட்களில் அதன் ஒளியிலிருந்து 15 சதவிகித பிரகாசத்தை இழந்துள்ளது. திடீரென இவ்வாறு நிகழ்ந்துள்ளது மர்மமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வலியின்றி தற்கொலை செய்து கொள்ள எந்திரம்

உலகிலேயே முதன்முறையாக தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்கள் வலியின்றி தற்கொலை செய்து கொள்வதற்கு ஏற்ற இயந்திரத்துக்கு ஒரு நாடு அனுமதி அளித்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் தற்கொலை முயற்சி என்பது சட்ட விரோதம். மேலும் இயற்கை மற்றும் கடவுளால் அளித்த உயிரை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்ற கருத்தும் உலகம் முழுக்க ஆழமாக வேரூன்றி உள்ளது. இதன் காரணமாகவே இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் மரண தண்டனை அளிக்கும் சட்டத்தை மூட்டை கட்டி வீசி விட்டுள்ளன. இந்த சூழலில்தான் சுவிட்சர்லாந்து அரசு இந்த யந்திரத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி அளித்துள்ள 5 ஐரோப்பிய நாடு சுவிஸ் என்பது கவனிக்கத்தக்கது.தற்போது உலகம் முழுவதும் மனித உரிமை ஆர்வலர்களின் ஹாட் டாப்பிக்காக இது மாறியுள்ளது. சாக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களை வலியின்றி சொர்க்கத்துக்கு பார்சல் செய்து விடும். இதன் மூலம் உடலுக்கு செல்லும் ஆக்சிஸன் குறைந்து, ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மரணம் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. கேட்கவே திகிலாக இருக்கும் இந்த எந்திரத்துக்கு அனுமதி அளித்த சுவிஸ் அரசுக்கு எதிராக ஒருபுறம் கண்டனங்களும் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கவலை வேண்டாம்

வங்கியில் பணம் இருந்தாலும் கையில் பணம் இல்லாத கஷ்டத்தைப் போக்க உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை டோர் டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை ஸ்நாப் டீல் அறிவித்துள்ளது. இணைய வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனம், ஒரு ரூபாய் கட்டணத்தில் 2,000 ரூபாய் பணத்தினை டோர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கேஸ்@ஹோம் என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் 2,000 ரூபாயை ஆர்டர் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. டோர் டெலிவரி முறையில் உங்கள் வீட்டுக்கு வரும் டெலிவரி செய்பவரிடம் உள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டினை ஸ்வைப் செய்து நீங்கள் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று ஸ்நாப்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக குர்காவுன் மற்றும் பெங்களூரு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், மற்ற இந்திய நகரங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் உயரமான மலைச் சிகரம்

உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் எது என்று கேட்டால் எல்லோரும் டக்கென்று எவரெஸ்ட் என்றுதான் சொல்வோம். ஆனால் கொஞ்சம் புவியியல் பற்றி தெரிந்தவர்கள் சற்றே யோசிப்பார்கள்.. ஏன் தெரியுமா... எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்திலிருந்து உலகிலேயே மிகவும் உயரமான சிகரம் தான்.. ஆனால் மெளனா கீ என்ற மலை இருக்கிறதல்லவா அது எவரெஸ்டை காட்டிலும் 3 ஆயிரம் அடி உயரம்.. ஆனால் என்ன பிரச்னை தெரியுமா பசிபிக் கடலில் இருக்கும் இந்த மலை நீர்மட்டத்துக்கு வெளியே வெறும் 13 ஆயிரத்து 796 அடி மட்டுமே தெரிகிறது. ஆனால் கடலுக்கு அடியிலிருந்து அதன் உயரத்தை அளந்தால் 32, 808 அடி உயரம் கொண்டதாகும். இதன் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கியிருப்பதால் நம்மால் இதன் பிரம்மாண்டத்தை உணர முடியவில்லை அவ்வளவுதான்..

அதிசயம் - ஆச்சர்யம்

மெல்போர்ன் நகரில் இருக்கும் ஸ்டீபன் ஹிர்ஸ்ட். மைன் கூன் வகையை சேர்ந்த ஓமர் என்ற பூனையை வளர்த்து வருகிறார். மாமிசத்தை மட்டுமே விரும்பி சாப்பிடும், ஒரு வயது நிரம்பிய இந்த பூனை 120 சென்டி மீட்டர் நீளமும், 14 கிலோ எடையும் உள்ளது.  தற்போது இந்தப் பூனை உலகின் மிக நீளமான பூனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago