ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. ஆனால் அது தான் உண்மை. ஆனால் பால் மட்டும் பசும் பால் அல்ல.. கழுதையின் பால். அதுவும் விற்கப்படுவது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில். அம் மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற இடத்தில் தான் இந்த வியாபாரம் சக்கை போடு போடுகிறது. கழுதைப் பாலை வாங்குவதற்காக கூட்டம் அலை மோதுகிறது. கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் இது போன்ற பல்வேறு மாற்றங்கள் நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கழுதைப் பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். எனவே இதையடுத்து தற்போது கழுதைப் பாலுக்கு அங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெறும் ஒரு ஸ்பூன் பால் ரூ.100 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1 லிட்டர் கழுதைப் பால் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இது குறித்து டாக்டர் ரோட்ஜே கூறுகையில், கழுதைப் பாலால் கொரோனா போன்ற தொற்றுகள் குணமாவதில்லை. இது மக்களின் தவறான நம்பிக்கை உடல் நலம் பாதித்தால் டாக்டரிடம் சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து காசை இவ்வாறு வீணாக வாரி இறைக்கக் கூடாது என்றார். எது எப்படியோ இதன் மூலம் கழுதைக்கும் அதன் பாலுக்கும் புது மவுசு கிடைத்துள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஒரு காலத்தில் தரையில் சீறிப் பாயும் கார்கள் வானில் பறக்கும் என்று கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அந்த கற்பனை உண்மையாகி வருகிறது. வெகு விரைவில் உலகம் முழுவதும் பறக்கும் கார்கள் வானில் வலம் வரப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இதற்கு அச்சாரமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வித்தியாசமான கார் பந்தயம் இதை நிரூபித்துள்ளது. அதிலும் இதில் பங்கேற்ற அனைத்து கார்களும் வானில் பறக்கக் கூடியவை. அது மட்டுமின்றி இவை அனைத்தும் பெட்ரோல் போன்ற எரிபொருள் இல்லாமல் மின்சாரத்தில் இயங்கக் கூடியவை. சுத்தமாக சொன்னால் பறக்கும் எலெக்ட்ரிக் கார்கள். அக்டோபரின் இறுதியில் நடைபெற்ற இந்த போட்டிகள் குறித்த ஆச்சரிய வீடியோ தற்போது வெளியாகி நெட்டை கலக்கி வருகிறது. இந்த போட்டியினை தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலடா ஏரோநாட்டிக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் வடிவமைத்து, தற்போது நடத்தி முடித்துள்ளது. இப் போட்டிக்கு ‘ஏர்ஸ்பீடர்'-இன் முதல் பகுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாலைவன பகுதியில், வெறும் 300மீ தொலைவிற்கு மட்டுமே இந்த போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள எக்ஸா (EXA) எனப்படும் சர்வதேச போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒத்திகை போன்றதாகும். இவ்வாறான பந்தயங்கள் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்பிற்கு ஊக்கமளிக்கும்.
ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்(Johannes Hevelius) சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர். சந்திரனின் முதல் அட்லஸை உருவாக்கித் தொகுத்த வானியலாளர். அது செலினோகிராஃபியா ( Selenographia) என்ற பெயரில் 1647-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் மேற்பரப்பின் ஆரம்பகால விரிவான வரைபடங்களில் ஒன்றையும் அதன் பல அம்சங்களுக்கான பெயர்களையும் கொண்டுள்ளது. சந்திரனில் உள்ள மலைகளுக்கான அவரது சூட்டிய பெயர்களில் இன்னும் சில (எ.கா. ஆல்ப்ஸ்) இன்னும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நினைவாக சந்திரனில் உள்ள பள்ளத்துக்கு ஹெவிலியஸ் பள்ளம் (Hevelius crater) என்றும் பெயரிடப்பட்டது.
உலகம் முழுவதும் இன்றைக்கு செல்வாக்கு செலுத்தும் உணவு பொருளில் உருளை கிழங்கு முதலிடம் வகிக்கிறது. இன்றைக்கு உருளைகிழங்கை சாப்பிடாத ஆட்களே இல்லை என்ற அளவுக்கு பரவியுள்ளது. ஆனால் உருளை கிழங்கு முதன் முதலில் எங்கு பயிரிடப்பட்டது தெரியுமா.. பெரு நாட்டில் தான் முதன் முதலில் பயிரிடப்பட்டது. இன்றைய பெரு நாட்டுப்பகுதியே உருளைக்கிழங்கின் தாயகம் எனப்படுகிறது அங்கிருந்து 1536-ல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டு ஐரோப்பிய கடல் பயணிகள் வழியாக ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கும் சென்றது. அதுவும் பெருவில் எப்போது பயிரிடப்பட்டது தெரியுமா... கிட்டத்தட்ட சுமார் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. அதே போல பெருவில் மட்டும் சுமார் 1000 வகையான தக்காளி ரகங்கள் உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
இன்றைக்கு செல்வந்தர்களின் விளையாட்டாக உலகம் முழுவதும் விளையாடப்படும் விளையாட்டுகளில் ஸ்நூக்கரும் ஒன்று. ஆனால் ஸ்நூக்கர் எங்கு தோன்றியது தெரியுமா... அது இந்தியாவில்தான் தோன்றியது. பின்னர் அது ஆங்கிலேயர்களின் பில்லியர்ஸ் விளையாட்டிலிருந்து மேம்படுத்தப்பட்டது. இது இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்கள் பந்துகளை மேஜையில் வைத்து விளையாடப்படும் விளையாட்டாகும். இருந்த போதிலும் தரையில் பந்துகளை வைத்து, பிளாஸ்டிக் அல்லது மர மட்டைகளால் அவற்றை அடித்து சென்று வளையங்களுக்குள் நுழைய செய்யும் க்ரோக்கெட் என்ற விளையாட்டிலிருந்துதான் ஸ்நூக்கர் வடிவம் பெற்றது. தரையில் விளையாடுவதை போலவே வண்ண பந்துகளை மேஜை குழியில் தள்ளுவதை இது அடிப்படையாக கொண்டுள்ளது.
பறவைகள் மட்டும்தான் பாடுமா, நாய்களில் சில இனங்களும் பாடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிய வகை நாய்கள் நியூ கினியாவில் உள்ள காட்டு நாய்கள் இனமாகும். இவை அழிந்து விட்டதாக கருதிய வேளையில் தற்போது அவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


