இணைய வர்த்தக சேவையில் முதன்முதலா அமேசான் நிறுவனம், ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்து சுமார் 13 நிமிடங்களுக்குள் உரியவரிடம் கொண்டு சேர்க்கப்படும்.பாப்கார்ன் போன்ற மிகவும் எடை குறைவான பொருட்கள் மட்டுமே டிரோன் விமானம் மூலம் டெலிவரி செய்யப்படும். ட்ரோன் மூலம் முதன்முதலில் டிசம்பர் 7 ஆம் தேதி அதன் முதல் விற்பனையை தொடங்கியது. இந்த டிரோன் 400 அடி உயரத்தில் பறந்து செல்லும் திறன் உடையது. வாடிக்கையாளர்களின் டெலிவரி குறித்த ப்ரோக்ராம்மிங் ட்ரோன் விமானத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் படி பறந்து சென்று பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்கிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
உடலின் சூட்டை தணிப்பதற்காக குளிர்வித்துக் கொள்ளும் உயிரியல் செயல்பாடாக வியர்ப்பது நடைபெறுகிறது. நாம் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உடலில் வியர்வை சுரப்பிகள் வேலை செய்து உடல் வியர்வையை வெளியிடுகின்றன. நீச்சல் போட்டியில் ஈடுபடும் நீச்சல் வீரர்கள் தண்ணீருக்குள் பல மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்களுக்கும் வியர்க்கும். ஆனால் வியர்வையை நீர் கழுவி கரைத்து விடுவதால் அவர்களால் அதை உணர முடிவதில்லை. நீருக்கு அடியிலும் உடலுக்கு வியர்க்கும் என்பது ஆச்சரியம் தானே..
சோடாவை தினமும் குடிப்பதால் 50% இதய நோய்கள் உருவாகும். தொடர்ந்து ஒருவருடம் குடித்தால் உடல் பருமன் இரட்டிப்பாகும் . சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக முதுமையில் அல்சீமர் நோய் வரும் ஜாக்கிரதை.
இன்றைக்கு அநேகமாக நமது தினசரி உணவில் இடம் பெறும் காய்கறி வகைகளில் கேரட் முக்கிய இடம் வகிக்கிறது. ஆரஞ்சு நிறத்தில் பச்சையாக தின்பதற்கேற்ற சுவையுடன் இன்றைக்கு கேரட் பயிரிடப்பட்டு கிடைக்கிறது. ஆனால் அதன் அசலான நிறம் என்ன தெரியுமா... 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் கேரட்டின் நிறம் ஊதா தான். கலப்பினங்கள் வாயிலாக மஞ்சள் மற்றும் வெள்ளி நிற கேரட்டுகள் உருவாகின. ஆரஞ்சு நிற கேரட்டுகளை நெதர்லாந்து (டச்சு) விவசாயிகள் பயிரிட்டு வந்துள்ளனர். மத்திய கால கட்டத்தில் ஊதா நிற கேரட்டை கலப்பினத்தின் மூலமாக இன்றைய சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றியவர்கள் அவர்கள் தான். இவை வளர்வதற்கு எளிதாக இருப்பதாக நம்பப்படுவதால் தொடர்ந்து இந்த நிறத்திலேயே பயிரிடப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள். அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்ததாக உள்ளதாம்.கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் கேமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
நம்மில் பெரும்பாலோனோர் இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்்ந்த சுதந்திர போராட்ட தியாகி பிங்கலி வெங்கய்யா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தேசிய கொடியின் அடிப்படையை உருவாக்கி காந்தியிடம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தேசிய கொடியை வடிவமைத்தவர்கள் பக்ரூதீன்தியாப்ஜியும் அவரது மனைவி சுரேயாவும் தான். இதற்கான பொறுப்பை நேரு, பக்ரூதீனிடம் அளித்தார். இந்த குழுவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். மூவர்ண கொடியையும் அதன் மத்தியில் அசோக சக்கரத்தையும் அவர்கள்தான் வடிவமைத்தனர். தேசிய கொடிக்கு ஏற்ற வண்ணத்தை நெய்து கொடுத்தவர் சுரேயா. 1947 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இவர்கள் நேருவிடம் அளித்த கொடி அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


