முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனிதனால் மட்டும்...

சராசரியாக, வாழ்நாளில் 25 கோடி தடவை அழும் அல்லது கண்ணீர் விடும் ஒரே உயிரினம் மனிதன்தான். அதிகமாக சிரிக்கும் போது கண்ணீர் வரக் காரணம், கண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள சுரப்பியுள்ள தசைநார்கள் அழுத்தப்படுவதால்தான். ஆனால், பச்சிளம்குழந்தைகள் அழுவதில்லை, கத்த மட்டுமே செய்யுமாம்.

அம்பானி வீட்டில் 180 ஆண்டுகள் பழமையான 2 மரங்கள் : விலை ரூ.84 லட்சம்

180 ஆண்டுகள் பழமையான மரங்கள் ஸ்பெயினில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டு ஆந்திராவில் உள்ள கவுதம் நர்சரியில் வைத்து வளர்க்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் ஜாம்நகர் பங்களாவில் இந்த 2 அரிய வகை ஆலிவ் மரங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. 180 ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரங்களின் தாவரவியல் பெயர் Olea Europaea.3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினில் இருந்து கௌதமி நர்சரிக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டது. இந்த இரண்டு மரங்களும் நவம்பர் 24 அன்று ஆந்திராவில் இருந்து ஒரே டிரக்கில் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. இந்த மரங்கள் குஜராத்தில் இலக்கை அடைய 5 நாட்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்களின் விலை விவரங்களை தெரிவிக்க கவுதம் நர்சரி மறுத்து விட்ட போதிலும் அவற்றின் மதிப்பு சுமார் ரூ.84 லட்சம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைட் இயர் ஒன்

சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அளவாக பயன்படுத்த

அமெரிக்காவின் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு கவனக் குறைபாடு, சுறுசுறுப்பாக இயங்க முடியாதது, நடத்தை முறைகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. தினமும் அதிகமாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சுமார் 151 இளம் வயதினரிடம் இச்சோதனை நடத்தப்பட்டது.

ஆனியும், ஆவணியும் சொன்ன சேதி

பாமா விஜயம் என்ற படம், இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய படம். அதில் பாடல் ஒன்றில், ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்று கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார். அந்த பாடல் சொல்லும் சுவராஸ்யமான சேதி ஒன்று உண்டு. கண்ணதாசன் காரைக்குடி அருகே உள்ள சிறு கூடல் பட்டியில் பிறந்தவர். அந்த ஊருக்கு அருகிலேதான் நமது கோவில் நகரம் மதுரை உள்ளது. அந்த நகரில் தெற்கு ஆவணி மூல வீதி உள்ளது. அந்த வீதியில்தான் நகரின் பெரும்பாலான நகைக்கடைகள் உள்ளன. அதை குறிக்கும் வகையிலேயே கண்ணதாசன்  ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என குறிப்பிட்டு இருப்பார். இது போன்ற எண்ணற்ற  வாழ்வியல் சுவராசியங்களை திரை மறைவு ரகசியமாக கண்ணதாசன் குறிப்பிட்டு இருப்பார்.

இதுதான் காரணம்

மங்கோலியத் தலைவர் செங்கிஸ்கான் பேரன் குப்ளேகான். அவர் கி.பி. 1286-இல் சீனப் பேரரசனானார். சீனர்களை தான் அடிமைப்படுத்தியதன் அடையாளமாக, அவர்கள் தங்கள் தலைமுடியைப் பின்னலிடும்படி ஆணையிட்டார். அதனால்தான் சீனர்கள் ஆண்களாக இருந்தாலும் பின்னல் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago