Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வங்கி கணக்கை பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்

நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்கியதிலிருந்தே எந்தவித பண பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கிறீர்களா? அப்போ இந்த தகவல் கண்டிப்பா உங்களுக்கு தான் பயன்படும்.  பொதுவாக எந்த வங்கியில் நீங்கள் சேமிப்பு கணக்கு தொடங்கினாலும் அதில் 1 வருட காலம் வரை நீங்கள் வங்கி மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ எவ்வித பண பரிவர்த்தனை செய்யாதிருக்கும் பட்சத்தில் உங்களது சேமிப்பு கணக்கு "INACTIVE" நிலைக்கு சென்றுவிடும். அதனையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இதே போல் வங்கியில் பண பரிவர்த்தனை எதுவும் செய்திடாத நிலையில் உங்களது வங்கி கணக்கு "DORMANT(செயலற்ற நிலை)" நிலைக்கு சென்றுவிடும்.  வங்கி கணக்கு நம்முடைய தேவைக்கு தானே, அதில் ஏன் இத்தகைய செயல்முறை என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் இது தான் அனைத்து வங்கிகளிலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் விதிமுறை ஆகும். இதனால் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற பயம் உங்களுக்கு தேவையில்லை.  இதனால் உங்கள் CIBIL ஸ்கோர் ஒருபோதும் பாதிக்கப்படாது.

தலையால் கூட்டின் கதவை அடைக்கும் வித்தியாச எறும்புகள்

எறும்புகள் ஒருவகையில் தேனீக்களைப் போன்றவை. தேனீக்களை போலவே ராணி, ஆண், வேலைக்கார எறும்புகள் போன்ற வகைகளில் இவற்றிலும் உண்டு. அதில் ஒரு சில இனங்களில் வித்தியாசமான எறும்புகள் உள்ளன. அவை தங்களது தலையால் கூட்டின் வாயிலை கதவு போல அடைத்துக் கொள்கின்றன. இதனால் இவற்றுக்கு கதவு தலை எறும்புகள் (door head ants) என்றே பெயர் கொண்டவை. இவற்றை தாண்டிதான் அன்னியர்கள் உள்ளே வர முடியும். பெரும்பாலும் அன்னியர்களுக்கு அனுமதி கிடையாது. தங்களது இனத்திலேயே கதவு தலை எறும்புகளின் அனுமதி கிடைத்தால் மட்டுமே கூட்டுக்குள் என்ட்ரியாக முடியும்.. எப்படி ஒரு அதிசயம் பாருங்கள்.

குறைந்து வரும் மனித உடலின் வெப்பம் கடந்த 10 ஆண்டுகளில் 0.05F சரிவு

பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று நாம் படித்திருப்போம். 1851 ஆண்டில் கார்ல் ரெய்னஹோல்டு என்பவர் தெர்மோமீட்டரை கண்டு பிடித்தார். அவர் 10 தடவை 25000 பேர்களிடம் ரீடிங் எடுத்து, சராசரியாக மனித உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் என்று அறிவித்தார். இதையே அனைவரும் வேத வாக்காக எடுத்துக் கொண்டனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி மனித உடலின் வெப்பநிலை 1-2 டிகிரி குறைவாகவே காணப்படுவது தெரியவந்துள்ளது. பல்வேறு பதிவுகளில் சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் மூலம் மேற்கொண்ட சோதனையில் கடந்த 100 ஆண்டுகளில் மனித உடலின் வெப்ப நிலை1.5 பாரன்ஹீட் குறைந்துள்ளது. இது போக கடந்த சில ஆண்டுகளில் இந்த குறைகின்ற வேகம் அதிகரித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டில் 0.05 பாரன்ஹீட் வெப்பம் குறைந்து வந்துள்ளது. வழக்கம் போல புவிவெப்பமயமாதல் என்ற பல்லவி பாடப்படுகின்ற போதிலும் இதற்கான சரியான அறிவியல் காரணம் இன்னும் தெரியவரவில்லை என்பதுதான் உண்மை.

சூரியனை பார்க்கும் அதிசய முதியவர்

உத்தரபிரதே மாநிலத்தைச் சேர்ந்தவர் 70 வயதான எம்எஸ் வர்மா. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். இடைவிடாமல, கண்களை கொஞ்சம் கூட இமைக்காமல் சூரியனை 1 மணி நேரம் பார்க்கும் திறமை படைத்தவர். நமக்கெல்லாம் வெளிச்சத்தை சிறிது நேரம் உற்று பார்த்தாலே கண்கள் இருட்டி விடும். மனுசன் சூரியனை விடாமல் பார்ப்பாராம். இதற்காக சுமார் 25 ஆண்டுகள் பயிற்சி எடுத்துள்ளார். ஆன்மிக குரு ஒருவரின் மீதான தாக்கம் காரணமாக அவர் கண்களை இதற்கு பழக்கிக் கொண்டதாக தெரிகிறது. சாதனையை கூலாக முடித்துக் கொண்டு ஹாயாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். 

புதிய திட்டம்

விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் தங்களுடைய சிறுநீரைக் கொண்டே பிளாஸ்டிக் தயாரித்துக் கொள்ளும் புதிய வகை தொழில்நுட்பத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. ஈஸ்ட் மற்றும் கார்பண்டை ஒக்சைட் மூலம் இந்த பிளாஸ்டிக் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் இதை மூலப் பொருளாக பயன்படுத்தி, 3டி பிரிண்டரில் புதிய பிளாஸ்டிக் பொருட்களை விண்வெளியில் தயாரிக்கலாம். இதனால் உருவாக்கப்படும் பொருட்களை கொண்டு நீண்ட தூரம் விண்வெளி பயணம் மேற்கொள்ளலாமாம்.

காப்பி பேஸ்ட் கையடக்க எந்திரம்

தொழில் நுட்ப யுகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. முன்பு ஒரு ஆவணத்தை நகலெடுக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய போட்டோஸ்டெட் இயந்திரங்கள் தேவைப்பட்டன. தற்போது கம்பியூட்டர் யுகத்தில் ஸ்கேனர்கள் வந்துவிட்டன. தற்போது அவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், கையடக்க காப்பி பேஸ்ட் எந்திரம் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே.. இந்த நமக்கு தேவையான எதன் மீதும் வைத்து தேவையான பரப்பில் ஷேவிங் ரேஷரை இழுப்பது போல ஒரு இழு. அவ்வளவுதான்  அப்படியே எழுத்தோ, படமோ காப்பி ஆகிவிடும். பின்னர் நமக்கு தேவையான காகித்த்தில் வைத்து மீண்டும் ஒரு இழு. அவ்வளவுதான் அப்படியே பிரிண்ட் ஆகிவிடும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago