முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தமிழகத்திற்கு பெருமை

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் தமிழர். பொருளாதார நிபுணரும் வழக்கறிஞருமான கோவையைச் சேர்ந்த சண்முகம் செட்டிதான் இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர். இவரின் பொருளாதார மேதைமையைப் பார்த்து, அவர்தான் சுதந்திர இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கத் தகுதி படைத்தவர் என காந்தி முடிவு செய்தார். ஜவஹர்லால் நேருவுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சண்முகம் செட்டியை தனது அமைச்சரவையில் நிதியமைச்சராக்கினார். சண்முகம் செட்டி 1947 நவம்பர் 26ம் தேதி முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கோவையில் பிறந்த சண்முகம் செட்டி சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர்.

மூக்கின் நுகர்வு திறன்

மனித புலன்களில் பார்வை மங்கிப்போனால், அதைச் சரி செய்துகொள்ள கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். காது கேட்கும் திறன் குறைந்தால், ஹியரிங் எய்ட் வைத்துக் கொள்ளலாம். ஆனால், முகர்வுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அப்படி எந்தத் தொழில்நுட்பமும் இல்லையா என உங்களைப் போல எனக்கும் கேள்வி எழுந்தது. அதற்கும் பதில் தொழில்நுட்ப வடிவில் வந்துவிட்டது. ஷக் மெக்கின்லி என்ற பொறியாளர் / கண்டுபிடிப்பாளரின் முயற்சியில் உருவாகியிருக்கும் முகர்வு ரேஞ்சர் (Nasal Ranger) பார்ப்பதற்கு பைனாகுலர் போலவே இருக்கும் இந்த உபகரணம் நம்மைச் சுற்றியிருக்கும் வாசனை வடிவத்தை மேம்படுத்தி ஆல்ஃபேக்டரிக்கு அனுப்புவதன் மூலம் மெல்லிய வாசனைகளையும் கண்டறிந்து சேமித்துக் கொள்ளப் பயன்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி, வாசனைத்திரவிய உருவாக்கம், சுவாசிக்கும் காற்றின் தரம் போன்ற பல பிரிவுகளில் மேற்படி உபகரணம் உதவியாக இருக்கும்.

மனிதர்களோடு ஏலியன்கள் பேசினரா? நீடிக்கும் ரேடியோ சிக்னல் புதிர்கள்

வேற்று கிரகங்களில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வந்தால் அவற்றை ரீசீவ் செய்வதற்கான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் ஓஹேயோ பல்கலை கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேடியோ அப்சர்வேட்டரி ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக் இயர் ரேடியோ டெலஸ்கோப் என்ற அமைப்பாகும். பிரபஞ்சத்துக்கு வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைகளை உள்வாங்கி அதை ஆய்வு செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் சுவாரசியமான விஷயம் ஏலியன்களை குறிவைத்தே இந்த ஆய்வகம் செயல்பட்டது. அது போன்ற தகவல் ஒன்றையும் இந்த ரேடியோ டெலஸ்கோப் ரீசீவ் செய்தது என்பதுதான் ஆச்சரியம்.பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது என்றும், அதன் ரேடியோ அதிர்வெண் 1420 மெகா ஹெர்ட்ஸ் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில்தான் 1977 இல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு அதிசயம் நடந்தது. ஜெர்ரி இகாமென் என்ற ஆய்வாளர் பணியில் இருந்த போது பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து வந்த வித்தியாசமான ரேடியோ அலை ஒன்றை பதிவு செய்துள்ளார். அது வெறும் 72 விநாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. அதை டீகோட் செய்த போதுதான் உலகுக்கே மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது ஆங்கிலத்தில் 'வாவ்' என அது குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் பூமியை, மனிதனை பார்த்து வாவ் என்று கூறியது யார் என்ற மர்மம் இன்னும் விலகாத புதிராகவே நீடித்து வருகிறது. இது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. ஏலியன்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்புகளில் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் என்ற கின்னஸ் சாதனையையும் 1995 இல் இது படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 98 இல் இந்த அப்சர்வேட்டரி கலைக்கப்பட்டு விட்டது.

ஆக்ஸிஜனின் பிறப்பிடம்

பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் ச.கி.மீ. பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இதை ஒரு நாடாக கருதினால், பரப்பளவில் இது 9-வது இடத்தைப் பிடிக்கும். இதில் 6,400 கி.மீ. தூரமுள்ள நதி ஓடுகிறது. நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி 2-ம் இடத்தில் உள்ளது. 40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இங்கு வசிக்கின்றன. அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்போட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள்தான் வாழ்விடமாக இருக்கின்றன. உலகில் 3 டி.செ வெப்பநிலை அதிகரிப்பால் இந்த காடு தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது.

உலகில் முதன்முதலில் வைர சுரங்கம்

இன்றைக்கு உலகின் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கங்களிலிருந்து வைரம் தோண்டி எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பண்டைய காலத்திலேயே இந்தியா வைரத்தின் மதிப்பை உணர்ந்திருந்தது. இந்தியாவில் தான் முதன் முதலில் வைர சுரங்கங்கள் காணப்பட்டன.  கிருஷ்ணா, கோதாவரி நதி படுகைகளில் உள்ள வண்டல் படுகைகளில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்குதான் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றாக இன்றும் இந்தியாவில் கிடைத்தவைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான வைரமாகும்.

காகித கேப்ஸ்யூல்

பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago