முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய வழி இருக்கு

தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கண்டறிய, போன் தொலையும் முன்னரே உங்களது ஸ்மார்ட்போனின் கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருக்க வேண்டும். மேலும் லொகேஷன் ரிபோர்டிங் ஆப்ஷன் செட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். தொலைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை டிராக் செய்ய முதலில் கணினி அல்லது லேப்டாப் மூலம் பிரவுஸர் ஒன்றை ஓபன் செய்து, பின் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவு செய்திருந்த கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்து, இறுதியாக கூகுளில் "find my phone" என டைப் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் இடம் தெரியும். துல்லியமாக அறிந்து கொள்ள "Ring button" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

நிலத்துக்கு அடியில் இருக்கும் அருவி எங்குள்ளது தெரியுமா?

உலகின் மிகப் பெரிய நிலத்தடி நீர் வீழ்ச்சி அமெரிக்காவில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.. அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள  ரூபி பால்ஸ் எனப்படும் இந்த அருவி தரைக்கு கீழே சுரங்கப் பாதைகளின் வழியாக சென்றால் அங்கு அமைந்துள்ளது. ஆம்... தரைக்கு கீழே குகைகளின் வழி பயணம் செய்தால் மிகவும் உயரமான பாறையிலிருந்து நிலத்தடி குகைக்குள் இந்த அருவி கொட்டுவதை பார்ப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும், அவ்வாறு இந்த அருவியில் நீர் கொட்டும் உயரம் மட்டும் எவ்வளவு தெரியுமா 1120 அடி... உலகின் புவியியல் அதிசயங்களில் ரூபி அருவியும் ஒன்றாகும். இதற்காக பிரத்யேக பூங்கா, தரைக்கு கீழே செல்லும் லிப்ட் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகமாக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த அருவி மட்டுமின்றி, இந்த அருவி அமைந்துள்ள தரை கீழ் சுரங்க குகைகளும் ஒரு புவியியல் அற்புதங்கள்தான்.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

இந்தியாவுக்கு முதலிடம்

உலகம் முழுவதும் 32 கோடிக்கும் அதிகமான மக்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுவதாகவும் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, 2015ம் ஆண்டு வரையான காலத்தில், இந்திய அளவில் 5.66 கோடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், 3 கோடி பேர் மன அழுத்தம்.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

பாலின் மகிமை

ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பசுக்களின் பாலை மனிதன் அருந்தி வந்துள்ளான்.  உலகின் பால் தேவையை 90 சதவீதம் பூர்த்தி செய்யக் கூடியவை பசுக்களே. ஒரு பசுமாடு தன் ஆயுள் காலத்தில் 2 லட்சம் டம்ளர் பால் தரும். பண்ணை மாடுகளே உலகின் 90 சதவீத பால் தேவையை பூர்த்தி செய்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago