உலகில் முதன்முறையாக, ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கி உள்ளது. அந்த ரோபோவின் பெயர் சோபியா ‘ஹன்சன் ரோபோடிக்‘ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார். பெண் போன்று பேசும் இந்த ரோபோட், கேட்கும் கேள்விக்கு மனிதர்கள் போன்று சரமாரியாக பதில் அளிக்கிறது. இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைய போர்ப்படை ஆயுதங்களில் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இந்த ஆயுதம் தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காபாற்றத் தகுதி வாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்க முனைந்தது. அப்போது தானியங்கித் துப்பாக்கி ஒன்றைக் கண்டறிவதில் கலாஷ்நிகாவ் ஈடுபட்டார். தேவையான இலக்கை நோக்கிச் சுடுவதில் அப்போதிருந்த கைத்துப்பாக்கி வெற்றிகரமாக அமையவில்லை. இதன் காரணமாக உருவானதுதான் ஏ.கே.47 வகைத் துப்பாக்கி.
பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, மைக்ரேன் எனப்படும் தீராத தலைவலி ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் குழந்தையின்மை போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு ஆரம்பமாக அமைந்துவிடும். கண்டுகொள்ளாமல் விட்டாலோ, சில ஆண்டுகளிலேயே ரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு வரை கொண்டு சென்று விடும் ஆபத்து அதிகம்.
பிடல் காஸ்ட்ரோ ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து கொண்டிருக்கும் போது தான் அரசியல் ஆர்வலராக மாறினார். இவருக்கு, சுருட்டு பிடிப்பது மிகவும் பிடித்தமான விஷயமாக இருந்தது. ஆனால், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு 1985-ல்இருந்து சுருட்டு பிடிப்பதை நிறுத்தினார் . இவர் கியூபாவை, 49 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இது பத்து அமெரிக்க அதிபரின் ஆட்சி கால வருடங்கள் ஆகும். ஈட்டி கொண்டு மீன் பிடிப்பது, சமையல் செய்வது மற்றும் புத்தகம் வாசிப்பது போன்றவை பாலிய வயது பிடல் காஸ்ட்ரோவுக்கு பிடித்த விஷயங்களாக இருந்தன. கியூபாவின் பிரதமராக 1959 - 1976 வரையும்., 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார் பிடல் காஸ்ட்ரோ.
நூறாண்டுகள் பழமையான மர்மங்கள் நிறைந்த அதிசய ஊற்று கிணறு ஒன்று உள்ளது. எங்கே.. இந்தியாவிலா என்றால்.. அதை பற்றி கேட்கவே வேண்டாம்.. பல நூறு ஆண்டுகள் பழமையான குளங்கள், கிணறுகள் போன்றவற்றுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை.. இது அமைந்துள்ளது பிரான்சில். அங்குள்ள Burgundy என்ற பிராந்தியத்தில் அமைந்துள்ள இது Fosse Dionne spring என பிரபலமாக அறியப்பட்டுள்ளது. கடந்த 1700 களில் இதை சுற்றிலும் பொது குளியலறைகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் விநாடிக்கு 311 லிட்டர் வெளியேறுகிறது. சீசன் நேரங்களில் இது 3 ஆயிரம் லிட்டராகவும் அதிகரிக்கும். ரோமானியர்களால் குடிநீராகவும், செல்டியர்களால் புனித நீராகவும் இது கருதப்பட்டு வந்தது. பூமிக்கு அடியில் மிகவும் ஆழமாகவும், நீண்டு செல்லும் சுரங்க பாதைகளையும் கொண்டதாக இதில் எங்கிருந்து நீர் ஊற்று வருகிறது என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது. உள்ளே சென்றவர்கள் யாரும் திரும்ப வருவதில்லை என்ற வதந்தி பரவியதையடுத்து அதற்குள் டைவர்கள் குதிக்க அரசு தடை விதித்திருந்தது. இதனால் இதன் மர்மம் நீடித்தே வந்துள்ளது. கடந்த ஆண்டு தொழில்முறை டைவர் ஒருவர் முறையான அனுமதி பெற்று அதன் உள்பகுதிகளுக்கு சென்று படம் பிடித்து திரும்பினார். இருந்த போதிலும் அவராலும் நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப் பெரிய அரண்மனை அளவுக்கு பூமிக்கு அடியில் உள்ள நீர் சுரங்கத்தில் அவர் படம் பிடிப்பு நடத்திய காட்சிகள் உலகம் முழுவதும் பரவி இந்த ஊற்று நீர் கிணற்றுக்கு மேலும் விளம்பரத்தை தேடி தந்துள்ளது.
நாம் அன்றாட உணவில் உப்பை சேர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. உணவிலுள்ள நச்சுத்தன்மையைப் போக்கும். செரிமானத்தைப் பலப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும். உடல்நலனுக்கு மேலே, மனநலத்துக்கும் ஒரே நிலைப்பாடுடைய மன உணர்வுகளுக்கும் காரணியாக உப்பு அமைகின்றது. நாம் பயன்படுத்தவது இயற்கையான உப்பாக இருப்பது நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ்
03 Dec 2025ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தை கண்டித்து மன்சூர் அலிகான் உண்ணாவிரத போராட்டம்
03 Dec 2025சென்னை : தேர்தல் ஆணையத்தை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஈடுபட்டுள்ளார்.
-
ஐ.சி.சி. தரவரிசை பட்டியல்: முதலிடத்தில் ரோகித் சர்மா; விராட் கோலி முன்னேற்றம்
03 Dec 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
-
தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து மண்டலம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
03 Dec 2025சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனம
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்
03 Dec 2025மும்பை : மும்பை விமான நிலையத்தில் உயரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
-
கார்த்திகை தீபத்திருவிழா: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
03 Dec 2025பழனி : கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் பரணி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது
-
ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல்: உக்ரைனுக்கு புதின் கடும் எச்சரிக்கை
03 Dec 2025மாஸ்கோ : உக்ரைன் துறைமுகங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
03 Dec 2025டெல்லி : பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு
03 Dec 2025சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
-
மதுரை அருகே சோகம்: டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
03 Dec 2025மதுரை : மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு தொங்க விட்ட டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
-
கம்ப்யூட்டரை ‘ஆன்' செய்யாமல் துணை முதல்வர் ஆய்வு செய்தாரா? - தமிழக அரசு விளக்கம்
03 Dec 2025சென்னை : மழை பாதிப்பு புகார் மீதான நடவடிக்கைக்கு கம்ப்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
டி-20 தொடருக்கு கில் ரெடி?
03 Dec 2025மும்பை : காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என சந்தேகம் எழுந்த நிலையில் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட தயாராக உள்ளதாக தகவ
-
15 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் கோலி
03 Dec 2025மும்பை : 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட விராட் கோலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தில்லி கிரிக்கெட் சங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்வு
03 Dec 2025சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு
03 Dec 2025சென்னை : தங்கம் விலை நேற்றும்அதிகரித்து விற்பனையானது.
-
பிரேசிலில் உயிரியல் பூங்காவில் வாலிபரை தாக்கி கொன்ற சிங்கம்
03 Dec 2025பிரேசிலியா : பிரேசிலில் உயிரியல் பூங்காவில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்த வாலிபரை சிங்கம் தாக்கி கொன்றது.
-
திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பா?
03 Dec 2025சென்னை : திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இங்கிலாந்தில் மருத்துவர்கள் ஸ்டிரைக்
03 Dec 2025லண்டன் : இங்கிலாந்தில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என்று தெரிகிறது.
-
சபரிமலை பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்ற தெற்கு ரயில்வே தடை
03 Dec 2025சென்னை : சபரிமலை பக்தர்கள் ரயில்களில் கற்பூரம் ஏற்ற தடை விதித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
-
இன்று 9-ம் ஆண்டு நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
04 Dec 2025சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று மெரினா கடற்கரையில் 'உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
பெரு நாட்டில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு
03 Dec 2025லிமா : பெரு நாட்டில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ருதுராஜ், கோலி அபார சதம்
03 Dec 2025ராய்ப்பூர் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கோலி தனது 53-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
04 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கி மீண்டும் பதிவிட்ட செங்கோட்டையன்
04 Dec 2025கோபிசெட்டிபாளையம், எக்ஸ் தளத்தில் கார்த்திகை தீபம் வாழ்த்து பதிவை நீக்கிய நிலையில் செங்கோட்டையன் மீண்டும் அதே பதிவை பதிவிட்டுள்ளார்.
-
மதீனா-ஐதராபாத் விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்
04 Dec 2025காந்திநகர், மதீனா - ஐதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.


