முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நவபாஷாண சிலைகள்

தமிழ்நாட்டில் பல கடவுள் சிலைகள் நவபாஷாணத்தால் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை 18 சித்தர்களுள் ஒருவராகிய போகர். போகர் கற்று வைத்திருந்த ஆயகலைகள் 64ஐயும் அவர் வேறு எவருக்காவது கற்று தந்தாரா என்றால் இல்லை என்றே தெரிகிறது. அதுகுறித்து அவர் ஓலைச் சுவடிகளில் எழுதியுள்ளதாகவும். அதை படித்து சாகாவரம் தரும் மூலிகைகளைக் கூட கண்டுபிடிக்கலாம் என்று பல முனிவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி சக்தி வாய்ந்த போகர், 64 கலைகளையும் கற்றுகொண்டு, பல்வேறு வகையான மருந்துகளையும், சகாவாரம் தரும் மூலிகைகளையும் கண்டறிந்துள்ளார். அவருக்கு கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்திருந்ததாகவும் பல்வேறு முனிவர்கள் தெரிவிக்கின்றனர்.

புரிதல் சுலபம்

ஜப்பானின் பேனாஸோனிக் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ள புதிய மெகாபோன், பேசும் குரலை ஆங்கிலம், சீனம், கொரியா என பல மொழிகளில் இன்ஸ்டன்டாக மொழிபெயர்க்கிறது. 10 ஆயிரம் மெகாபோன்களை முதல்கட்டமாக தயாரித்துள்ள பேனாஸோனிக் நிறுவனம், அதனை 2018 ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ‘படிகளை கவனியுங்கள்’, ‘ரயில் தாமதமாக வருகிறது’ உள்ளிட்ட 300 ப்ரீசெட் வார்த்தைகளை துல்லியமாக 3 மொழிகளில் ஆட்டோமேடிக்காக மொழிபெயர்க்கும் திறன் கொண்டது இந்த மெகாபோன்.

ஒலியை விட இருமடங்கு வேகம் கொண்ட வர்த்தக விமானங்கள்

அமெரிக்காவில் கடந்த 1976 முதல் 2003 வரை பயன்பாட்டில் இருந்த வர்த்தக விமானங்கள் ஒலியை விட இருமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவை. உதாரணமாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு வெறும் 2 மணி 52 நிமிடத்தில் பறந்து செல்லும் திறன் மிக்கவையாக இருந்தன. ஆனால் இவை அதிக  விபத்துகளை சந்தித்ததுடன், விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த விமானங்களை பயன்படுத்திக் கொள்வது நிறுத்திக் கொள்ளப்பட்டன.

பிராணாயாமம்

தூக்கமின்மையால் உங்கள் நரம்பு மண்டலம் கிளர்ச்சியடைந்து உங்களது மன அழுத்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும் அபாயமும் உண்டாகிறது. நீங்கள் இரவு நேரத்தில் அமைதியான நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தை பெற சந்திர பத்னா பிராணயாமம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மிகவும் எளிய பயிற்சியான இது, உடலையும் மனதையும் அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஷாம்பூவை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர்.  இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..

புதிய தொழில்நுட்பம்

மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள, இஸ்ரேலைச் சேர்ந்த ’எலெக்ட்ரோட்’ (Electroad) எனும் நிறுவனம் புதிய தீர்வை முன்வைத்துள்ளது.எலெக்ட்ரிக் கார்கள் பயணிக்கும் போது ஒயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் உதவியுடன் சாலைகள் மூலம் சார்ஜ் செய்யும் முறை குறித்து அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago