முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாறைகளை விழுங்கும் டைனோசர்கள்

டைனோசர் என்ற பிரம்மாண்டமான அரிய வகை விலங்கு ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அவை அழிந்து விட்டன அவற்றில் சில விசேஷ குணங்களை கொண்ட டைனோசர்களும் காணப்பட்டன அதில் குறிப்பாக சில வகை டைனோசர்கள் பெரிய பாறைகளைக் கூட அப்படியே விழுங்கி விடுமாம் ஏன் தெரியுமா?  அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பையில் காணப்படும் கடினமான உணவுகளை செரிமானம் செய்வதற்கு உதவியாக அவை இவ்வாறு பாறைகளை விட்டுவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அச்சம் தவிர்

இந்தியாவில் பிறந்து உலக நாடுகளை குறிப்பாக ஆங்கிலம் பேசும் மக்களை தனது பேச்சால் ஈர்த்தவர் விவேகானந்தர்.  ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வல்லமையை பெற்றவராக இருந்த போதும் அவர் தனது பள்ளி, கல்லூரி தேர்வுகளில் ஆங்கிப்பாடத்தில் சராசரியாக 45 , 50 என்ற மதிப்பெண்களை தான் எடுத்தார்.

ஆய்வகத்தில் தயாரான செயற்கை வைரங்கள்

நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல்  உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கையும் மேற்கையும் இணைத்த வர்த்தக நகரம்

மத்திய கிழக்கின் தொல்லியல் பெருமைகளில் பல்மைரா நகரம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது மத்திய கிழக்கில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் இடங்களில் பல்மைரா நகரமும் ஒன்று. பாலைவனச் சோலை என கருதப்படும் சிரியாவில் இந்த நகரம் அமைந்துள்ளது. பண்டைய காலங்களில் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் வணிக வழி தொடர்புகளை இணைக்கும் மிகவும் முக்கியமான நகரமாக பல்மைரா விளங்கியது. இந்நகரில் உள்ள பல்வேறு இடங்களையும் ஐநா பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது.

விரைவில் வருகிறது பறக்கும் பைக் - இனி அபார்ட்மெண்டில் பார்க்கிங் சண்டை வராது

நகரங்களில் வசிப்பவர்களின் மிகப் பெரிய பிரச்னை எது என்று கேட்டால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதுதான். இதில் எத்தனை படித்தவர்களாக இருந்தாலும் பார்க்கிங் பிரச்னையை தீர்த்து வைக்க தனி நாட்டாண்மை தான் எப்போதும் வர வேண்டியிருக்கும். போதாக்குறைக்கு வண்டிகளை மாற்றி மாற்றி நிறுத்தி எடுத்து வைப்பதில் கேட் காவலர்களும் களைத்து போய் விடுவர். அபார்ட்மென்ட் கொஞ்சம் பெருசாக இருந்தால் போதும், வண்டியை எங்கே நிறுத்துவது, எப்படி நிறுத்துவது என்பதில் ஒரு இசை நாற்காலி போல பெரும் போட்டியே நடக்கும். இனி அதற்கெல்லாம் வேலையே இருக்காது. நீங்கள் எந்த தளத்தில் இருந்தாலும் அந்த தளத்துக்கு பறக்கும் பைக்கிலோ, காரிலோ போய் இறங்கி, அங்கேயே உங்கள் வீட்டின் பால்கனியில் பறக்கும் பைக் அல்லது காரை நிறுத்திக் கொள்ளலாம். இதனால் நகர நெரிசலில் சிக்கி அவதிப்படவோ, ஹார்ன் ஒலிகளால் தலை வீங்கி போகவோ வேண்டியதில்லை. ஒரு டிஜிட்டல் யுகம் நம் கண்முன்னே மாய உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. நமது பேரப் பிள்ளைகள் சாலைகளில் வாகனங்கள் ஓடின என கேட்டால் சிரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பேக்ஸ் இயந்திரம் எப்படி உருவாச்சு தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843 இல் ஒரு எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அதில், செம்புக் கம்பிச்சுருளில் வைக்கப்படும் பேனா எழுதுவதை, சுருளின் மற்றோர் இடத்தில் இருந்த 2 ஆவது பேனா, அதை நகல் எடுக்கத் துவங்கியது.  பின்னர் 1851இல் ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862 இல் இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. "பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை" என்ற நிறுவனம் இதை 1856 முதல் 1870 வரை தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியது.ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1902இல் புகைப்படங்களை அனுப்பக்கூடிய ஓர் இயந்திரத்தை உருவாக்கினார். இது புதிய பேக்ஸ் இயந்திரத்தின் அசலான முன்னோடி வடிவமாக திகழ்ந்தது. இதைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். அந்நாளில் பல ஜெர்மன் செய்தித்தாள் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தி வந்தன. பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரான்ஸ் விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் புதிய பேக்ஸ் இயந்திரமாக தற்போதுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago