முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

whats app-ஐ திறக்காமலேயே மெசேஜ் அனுப்ப...

whats app செயலியை திறக்காமலேயே நாம் நமது நண்பர்களுக்கு... நண்பிகளுக்கு மெசேஜ் அனுப்ப முடியுமா.. இதென்ன புது கதையா இருக்கு என்பவர்களுக்குத் தான் இந்த தகவல்.. முடியும்.. எப்படி.. அதற்கு முதலில் Google Assistant  செல்லுங்கள்..அதில் send the whatsapp message to XXX அதாவது XXX என்ற இடத்தில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர் பெயரை கூற வேண்டும்.. பின்னர் அவருக்கு அனுப்ப வேண்டிய வாய்ஸ் மெசேஜையும் பதிய வேண்டும்..இப்போது send என்பதை கிளிக் செய்தால் நண்பரின் வாட்ஸ் அப்புக்கு உங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.. இது எப்படி இருக்கு...

பகவதி அம்மன்

கொடுங்களூர் கோயிலில் உள்ள பத்ரகாளி அம்மன் எட்டு கரங்களுடன் அதி உக்கிரமாக அருள் பாலிக்கிறார். இதற்குமதுரையை எரித்த பின் கண்ணகி, உக்கிர கோலத்தில் இங்கு வந்து அம்மனை வேண்டி தவத்தில் ஈடுபட்டதை அடுத்து கண்ணகியை தன்னுள் இழுத்து, அவருக்கு முக்தி வழங்கியதால் தான் இந்த உக்கிரமாம்.

புதிய கிரகம்

விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே தற்போது புதிதாக ஒரு கோள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கிரகத்தை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்த ஆய்வு நடைப்பெற்று வருகிறது.

எய்ட்ஸ் நோய்

உலகம் முழுவதும் ஏராளமானோரை தாக்கி உயிர் பலி வாங்கும் எய்ட்ஸ் நோய்க்கு முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம். உயிர் இழப்புகளை தடுத்து விடலாம். விரைவில் இந்த மருத்துவ முறையை மனிதனிடம் சோதனை நடத்தி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.

7 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.  இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே வாணியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட 7 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிப்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்