Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆக்டோபஸ் அதிசயங்கள் : 3 இதயம், 9 மூளை, நீல ரத்தம்

ஆக்டோபஸ் என்ற உயிரனத்தை நாம் அறிவோம். ஆனால் அதன் உடலில் சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை அறிவோமா.. எல்லா உயிரினங்களுக்கும் 1 இதயம்தான் இருக்கும். ஆனால் ஆக்டோபஸ்ஸூக்கு 3 இதயங்கள். அவற்றில் 2 உடலின் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை சப்ளை செய்ய, மற்றொன்று உடல் உறுப்புகளுக்கு சப்ளை செய்கிறது. ஆக்டோபஸ் நீந்தும் போது இதயம் துடிப்பதில்லை என்பது கூடுதல் சுவாரசியம். அதே போல 9 மூளைகள் உள்ளன. அதில் பிரதானமான மூளை கணிப்பதற்கும், முடிவெடுப்பதற்குமான வேலையை செய்கிறது.  மற்ற 8 மூளைகளும் அதன் ஒவ்வொரு கரங்களுக்கும் அடியில் அமைந்து செயல்பாடுகளை மேற்கொள்கிறது. அதே போல நாம் உள்பட பெரும்பாலான விலங்குகளின் ரத்தம் எல்லாம் சிவப்பாக இருக்கும் போது ஆக்டோபஸ்ஸின் ரத்தம் நீல நிறமானது. நமது ரத்தத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட ஹீமோகுளோபின் செல்களுக்கு ஆக்ஸிசனை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. இதே வேலையை ஆக்டோபஸ்ஸில் காப்பரை அடிப்படையாகக் கொண்ட  கியனோகுளோபின் அந்த வேலையை செய்கிறது.

பென்குயினை கணக்கெடுக்கும் போஸ்ட் ஆபீஸ்

ஆள் அரவமற்ற அமைதியாக பென்குயின்கள் மத்தியில் வேலை செய்ய விரும்புகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அண்டார்டிகாவில் உள்ள பிரிட்டன் அறக்கட்டளைக்கு சொந்தமான போர்ட் லாக்ராய் என்ற இடத்திலுள்ள தபால் அலுவலகத்துக்கு தான். இந்த அலுவலகம் 1944 இல் பிரிட்டன் தன்னார்வ அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு 1962 வரை தபால் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வீடுகளுக்கு எழுத விரும்பும் கடிதங்களை தயார் செய்து அனுப்பும் பணியை மேற்கொண்டது. ஆள் இல்லாத காலங்களில் பென்குயின் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டது. தற்போது யார் கடிதம் அனுப்புறா.. எனவே தபால்களை எண்ணுவதற்கு பதிலாக பென்குயின்களை எண்ணும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. என்ன நீங்க ரெடியா..

நோபல் விருதுக்கு 5 முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய தலைவர் யார் தெரியுமா?

இந்தியாவிலிருந்து ரவீந்திரநாத் தாகூர் முதன்முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். அதன் பிறகு சர் சி.வி.ராமன், ஹர் கோவிந்த குரானா, சுப்ரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென் வரை இந்தியர்கள் பலரும் நோபல் பரிசை வென்றுள்ளனர். இந்தியாவின் தேசப்பிதா எனப் போற்றப்படுபவரான காந்தி 5 முறை நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆனால் தொடர்ச்சியாக அவருக்கு விருது மறுக்கப்பட்டே வந்தது. 5-வது முறையாக 1948 இல் அவர் பரிந்துரைக்கப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு கோட்சேவால் சுட்டு கொல்லப்பட்டார். 

விட்டில்களின் சத்தத்தை வைத்து இன்றையதட்ப வெப்பத்தை சொல்லி விட முடியுமா?

இதென்ன புதுசா இருக்கு.. என்கிறீர்களா... ஆம் விட்டில் பூச்சிகளின் சத்தத்தை வைத்து தட்ப வெப்ப நிலையை நம்மால் கூறிவிட முடியும் என்றால் ஆச்சரியம் தானே... நாம் எப்போவாது இயற்கையை உற்று கவனித்திருந்தால்தானே இதெல்லாம் புரிய போகிறது. இதையெல்லாம் நவீன அறிவியல் விஞ்ஞானிகள் வந்து கண்டு பிடித்து சொல்லும் அளவுக்கு இயற்கையில் இருந்து அந்நியமாகி விட்டோம். சரி கதைக்கு வருவோம்.. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விட்டில் பூச்சிகளின் சத்தத்தை கவனியுங்கள்... ஒரு நொடிக்கு எத்தனை என கணக்கிட்டு கொள்ளுங்கள்.. உதாரணமாக விநாடிக்கு 15 முறை சத்தமிடுகிறிது என வைத்துக் கொள்வோம்.. அதோடு 37 ஐ கூட்டுங்கள்... அவ்வளவுதான் இதுதான் அன்றைய வெப்ப நிலை.. இதை வைத்தே சூழலின் தட்ப வெப்பத்தை சொல்லிவிட முடியும் என்றால் ஆச்சரியம் தானே.

தற்காப்பு கலையான ஜூடோவின் தாயகம்

இன்றைக்கு ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றுள்ளதும், திரைப்படங்களில் சண்டை காட்சிகள் மூலம் பிரபலமானதுமான ஜூடோ எங்கு தோன்றியது தெரியுமா..ஜப்பானில். Kanō Jigorō (1860–1938) என்பவரால் பழைய ஜப்பானிய சமுராய் மரபில் காணப்பட்ட ஜூஜிட்சு மற்றும் பழைய சீன மரபுகளிலிருந்தும் 1882 இல் உருவாக்கப்பட்டது. இதற்காக கோடோகான் ஸ்கூல் ஆஃப் ஜூடோ பள்ளியும் உருவாக்கப்பட்டது. ஜூடோவுக்கும் கராத்தேவுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே வெறும் கைகளால் சண்டையிடுவது போல தோன்றினாலும், கராத்தே ஒரு சண்டைகலை, ஜூடோ ஒரு தற்காப்பு கலை. 1964 இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முறையாக ஜூடோ இடம் பெற்றது. 1992 இல் பெண்களுக்கான ஜூடோ போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றன.

மடக்கும் பைக்

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க ஆர்வம் பெருகியுள்ள நிலையில், கச்சிதமான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதம் சிறபம்சம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago