முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நட்சத்திரங்களை விட மரங்களின் எண்ணிக்கை அதிகம்

கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நாம் அனைவருக்கும் தெரியும் இந்த பிரபஞ்சத்திலேயே உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கிரகம் பூமிதான். அது சரி. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் மில்கிவே என அழைக்கப்படும் கேலக்ஜியில் உள்ள நட்சத்திரங்களை காட்டிலும் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். 20215 இல் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருந்த தகவலின்படி மில்கிவேயில் சுமார் 100 முதல் 400 மில்லியன் வரைதான் நட்சத்திரங்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாம். அதாவது 3.04 ட்ரியல்லியன் என்கிறது அந்த ஆய்வு. ஆச்சரியம் தானே..

உலகின் மிகப்பெரிய குடும்பம் - உறுப்பினர்கள் எண்ணிக்கை 163

உலகின் மிகப் பெரிய குடும்பம் எங்குள்ளது தெரியுமா..இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள பக்த்வாங் என்ற ஊரில் இருக்கும் சியோனா சனா என்பவரின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பமாகும். சியோனா சானாவுக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற வியக்கத்தக்க உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். சியோனா சனா கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

பணக்கார நகரம்

இந்தியாவிலேயே பணக்கார நகரமாக மும்பை திகழ்வதாகவும், இங்கு 46 ஆயிரம் மில்லியனர்களும், 28 பில்லியனர்களும் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்குள்ளோரின் மொத்த சொத்து மதிப்பு 56 லட்சம் கோடி ரூபாயாம். இதை தொடர்ந்து டெல்லி, பெங்களூரு பணக்கார நகரங்களாக உள்ளன. 7-வது இடத்தில் சென்னை உள்ளது.

நினைவாற்றலை அதிகரிக்க

மதிய உணவிற்கு பிறகு ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம் போடுவது மூளையைச் சுறுசுறுப்பாக்கும் எனவும் சிந்தனைத் திறனை மேம்படுகிறதாம்.மேலும், அவர்களின் மூளை ஐந்து வயது இளமையாகி விடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக 60 சதவீதம் பேர் மதிய உணவுக்குப் பிறகு 63 நிமிடங்கள் தூங்குகிறார்களாம்.

தற்காப்பு கலையான ஜூடோவின் தாயகம்

இன்றைக்கு ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றுள்ளதும், திரைப்படங்களில் சண்டை காட்சிகள் மூலம் பிரபலமானதுமான ஜூடோ எங்கு தோன்றியது தெரியுமா..ஜப்பானில். Kanō Jigorō (1860–1938) என்பவரால் பழைய ஜப்பானிய சமுராய் மரபில் காணப்பட்ட ஜூஜிட்சு மற்றும் பழைய சீன மரபுகளிலிருந்தும் 1882 இல் உருவாக்கப்பட்டது. இதற்காக கோடோகான் ஸ்கூல் ஆஃப் ஜூடோ பள்ளியும் உருவாக்கப்பட்டது. ஜூடோவுக்கும் கராத்தேவுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே வெறும் கைகளால் சண்டையிடுவது போல தோன்றினாலும், கராத்தே ஒரு சண்டைகலை, ஜூடோ ஒரு தற்காப்பு கலை. 1964 இல் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முறையாக ஜூடோ இடம் பெற்றது. 1992 இல் பெண்களுக்கான ஜூடோ போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றன.

டிஜிட்டல் ஆடைகள்

எதிர்காலத்தை கலக்க புதிய டிஜிட்டல் ஆடைகள் தயாராகி வருகின்றன. இன்றைய புதிய நூற்றாண்டின் யூத்களின் மனநிலைக்கு ஏற்ப எதிர்காலத்தில் மிகப் பெரிய பேஷன் சந்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் ஆடைகள் என்றால்... வாருங்கள் பார்க்கலாம்..டிஜிட்டல் ஆடைகள் துணி அல்லது உறுதியான எதையும் கொண்டு செய்யப்படவில்லை. கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் மற்றும் 3டி மென்பொருளைப் பயன்படுத்தி ஜவுளிகளை விட பிக்சல்களில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே நிஜ வாழ்க்கையில் நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை அணிய மாட்டீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை ஆன்லைனில் உலாவலாம் மற்றும் நீங்கள் விரும்பும் ஒன்றை ஆர்டர் செய்யலாம்.நீங்கள் இதை வாங்க முடிவு செய்து விட்டால், அதை நேரில் பார்ப்பதற்கு பதிலாக டிஜிட்டல் வடிவில்தான் பார்க்க முடியும். இதை நீங்கள் நேரடியாக தொடவோ அணியவோ முடியாது.  உங்கள் புகைப்படத்தில் தான் அணிய முடியும். இதற்காக பிரத்யேக டிஜிட்டல் ஆடை வடிவமைப்பாளர்கள் உள்ளனர். அவர்களிடம் ஆர்டர் செய்து டிஜிட்டல் முறையில் அவற்றை அணிந்து கொள்ளலாம்.இதில் குறிப்பாக தற்போது ஃபேஷனாக பரவி வருவது என்னவென்றால் வழக்கமான மேல் சட்டை கால் சட்டை என்பதாகஅல்லாமல் பாரம்பரிய உடைகள், வித்தியாசமான உடைகள் என விதவிதமாக கலக்கலாம். இவற்றிற்கும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் தங்களை புதிய அவதார்களாக காட்டிக் கொள்ள விரும்பும் யூத்களுக்கும், நவீன டிஜிட்டல் பேஷன் விரும்பிகளுக்கும் இது மிகப் பெரிய சந்தையாக விரிவடைந்து வருகிறது. தொட்டுணரும் தன்மையிலிருந்து விலகி ஒரு புதிய உலகுக்கான கதவை இது திறந்து விட்டுள்ளது. தற்போது இதை அணியும் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து தற்போது பேஸ்புக்கும் மெட்டாவெர்சன் என்ற புதிய அவதாரத்தை தொடங்கியுள்ளதாகவும் பேஷன் நிபுணர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் புதிய பேஷன் சந்தைக்கான புதிய கதவு திறந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago