முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இரு பாலருக்கும் தனித்தனி ஆடைக்கு எதிர்ப்பு

உலகம் முழுவதும் தற்போது புதிய போக்கு அதான் டிரெண்டிங் ஒன்று உருவாகி வருகிறது. அண்மையில் இங்கிலாந்தில் பெண்களின் ஆடையை அணிந்து வந்த சிறுவனை வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருபாலருக்குமான ஆடை விவகாரம் விவாதப் பொருளாகி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி ஒன்றில் மாணவர்களை குட்டை பாவாடை அணிந்து வரச் சொன்ன சம்பவங்களும் நடைபெற்றன. இந்த சூழலில் இதே போன்ற ஒரு சம்பவம் கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா என்ற இடத்தில் நடந்துள்ளது. அங்கு பெண்கள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என கண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து Mason Boudreau என்ற 17 வயது மாணவன் பெண்கள் அணியும் டாப்ஸ், சார்ட்ஸ் என டூபீஸ் ஆடையில் வந்து பள்ளியை தெறிக்க விட்டுள்ளான். மேலும் இது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு பாலாருக்கு பாலின பாகுபாடு இல்லை என்கிற போது ஆடையில் மட்டும் பாரபட்சம் ஏன் என்ற கேள்வி உலகம் முழுக்க உரத்துக் கேட்கத் தொடங்கியுள்ளது.

இன்ஃப்ராரெட் வைபை

உலகில் தற்சமயம் பயன்படுத்தப்படும் வைபை வேகத்தை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வேகம் வழங்கும் புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது.   இந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியுமாம்.

புதிய தொழில் நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.

அன்னாசிப்பழத்தின் மக்துவம்

அன்னாசி பழத்தில் அதிகளவு மருத்துவ பலன்கள் உள்ளது. இதில் விட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் இரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான தொப்பை குறைய ஆரம்பிக்கும். 100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் விட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது. ஒரு அன்னாசிப்பழம் சாப்பிட்டால், நமக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் புரதச்சத்தை பெற்று விடலாம்.

புதிய தீர்வு

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள யுனிவர்சிடட் கரோல்ஸ் 3டி மாட்ரிட் என்ற நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பிரைலி மூலம் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப் உருவாக்கி அதன் மூலம் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் டி.வி. நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதன் சோதனை ஓட்டம் மாட்ரிட் நகரில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்தது.

ரத்த வங்கி தொடங்கிய வரலாறு

1616 இல் வில்லியம் ஹார்வி என்பவர்தான் விலங்குகளின் உடலில் ரத்தம் பாய்கிறது என்பதை கண்டறிந்தார். 1665 இல் ரிச்சர்ட் லோவர் என்பவர் ஒரு நாயின் உடலிலிருந்து ரத்தத்தை மற்ற நாய்க்கு வெற்றிகரமாக மாற்றி உயிர் பிழைக்க செய்தார். 1667 இல் பிரான்ஸில்தான் மனித உடலில் ஒரு ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை ஏற்றி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1668 இல் ரத்தம் தொடர்பான ஆய்வுகளுக்கு போப் தடைவிதித்தார். 1818 இல் ஒருவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றி வெற்றி கண்டார் மருத்துவர் ஜேம்ஸ் புளூன்ட். 1874 இல் ஒருவரின் ரத்தத்தையே சேமித்து அவருக்கே ஏற்றும் முறையை வில்லியம் ஹைமோர் என்பவர் முதன்முறையாக சோதித்து வெற்றி பெற்றார்.  கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர்தான் யாருடைய ரத்தத்தையும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ற இயலாது என்பதை நிரூபித்தார். பின்னர் 1900 இல் அவர் பரிசோதனையில்தான் ஏ,பி, ஓ வகை ரத்தங்கள் கண்டறியப்பட்டன. இதுதான் ரத்த பரிசோதனையின் மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. மருத்துவர் ஹூஸ்டன்தான் சோடியம் சிட்ரேட்டை பயன்படுத்தி ரத்தம் உறைதலை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போரின் போது பால் பாட்டில்களை சுத்தம் செய்து அதில் ரத்தத்தை அடைத்து வீரர்களுக்கு ஏற்றுவதற்காக கொண்டு செல்லப்பட்டன.  உலகின் முதல் நடமாடும் ரத்த வங்கி ஸ்பானிய உள்நாட்டு போரின் போது 1930களில் அமைக்கப்பட்டது. முதல் ரத்த வங்கி அமெரிக்காவில் 1937 இல் மார்ச் 15 ஆம் தேதி சிகாகோ கூக் கவுன்டி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் ரத்த வங்கி 1939 இல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago