முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஷாம்பூவை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர்.  இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..

ஹேர் டை

தரமான ஹேர்டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம். டைகளில் உள்ள கெமிக்கல் தலையிலுள்ள சருமத்திற்கு ஒரு அந்நிய உணர்வை தருகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடனே டை பட்ட இடங்களுக்கு விரைந்து வருவதால்  அலர்ஜி மற்றும் எரிச்சல் உண்டாகுகின்றன.

நாசா அபாரம்

கெப்ளர் டெலஸ்கோப் மூலம் நாசா ஆராய்ச்சி மையம் புதிய கோள்களை கண்டறிந்துள்ளது. ஒன்று இரண்டல்ல. நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி 1,284 புதிய கோள்களைக் கண்டறிந்துள்ளனர். ஒரே முறையில் இத்தனை கோள்களை நாசா கண்டறிவது இதுதான் முதல் தடவை என்பதும் கூடுதல் சிறப்பு.

அதிசய சிறுமி

சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், தந்தையால் கைவிடப்பட்ட வாங் அண்ணா என்ற 5 வயது சிறுமி. தனது பாட்டி, கொள்ளு பாட்டியுடன் வசித்து வரும் இவள்,  அவர்களுக்கு சமைப்பது, ஊட்டிவிடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது, நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது போன்ற வேலைகளை செய்வது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

வங்கி கணக்கை பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்

நீங்கள் வங்கியில் கணக்கு தொடங்கியதிலிருந்தே எந்தவித பண பரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கிறீர்களா? அப்போ இந்த தகவல் கண்டிப்பா உங்களுக்கு தான் பயன்படும்.  பொதுவாக எந்த வங்கியில் நீங்கள் சேமிப்பு கணக்கு தொடங்கினாலும் அதில் 1 வருட காலம் வரை நீங்கள் வங்கி மூலமாகவோ அல்லது ATM மூலமாகவோ எவ்வித பண பரிவர்த்தனை செய்யாதிருக்கும் பட்சத்தில் உங்களது சேமிப்பு கணக்கு "INACTIVE" நிலைக்கு சென்றுவிடும். அதனையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இதே போல் வங்கியில் பண பரிவர்த்தனை எதுவும் செய்திடாத நிலையில் உங்களது வங்கி கணக்கு "DORMANT(செயலற்ற நிலை)" நிலைக்கு சென்றுவிடும்.  வங்கி கணக்கு நம்முடைய தேவைக்கு தானே, அதில் ஏன் இத்தகைய செயல்முறை என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் இது தான் அனைத்து வங்கிகளிலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் விதிமுறை ஆகும். இதனால் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற பயம் உங்களுக்கு தேவையில்லை.  இதனால் உங்கள் CIBIL ஸ்கோர் ஒருபோதும் பாதிக்கப்படாது.

‘ஃபேஸ் ஆப்’

தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வரும் விஷயம் ‘ஃபேஸ் ஆப்’. இந்த ’ஃபேஸ் ஆப்’ என்னும் அப்ளிகேஷனின் மூலம் ஆண் முகத்தைப் பெண் முகமாகவும் பெண் முகத்தை ஆண் முகமாகவும் மாற்றலாம். நீங்கள் வயதானால் எப்படி இருப்பீர்கள் என்றும் மாற்றிப்பார்க்கலாம். இளைஞராக இருக்கும் உங்கள் முகத்தைக் குழந்தை முகமாகவும் மாற்றிப் பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago