Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கவனம் தேவை

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொண்ட முதல் 30 நாட்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்குமாம்.  சர்வதேச விஞ்ஞானிகள், 4 லட்சத்து 46 ஆயிரத்து 763 பேரிடம் இருந்து தகவல்களைச் சேகரித்து மாரடைப்பு எதனால் வருகிறது என ஆராய்ந்ததில், ஸ்டீராய்டு இல்லாத வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதால் மாரடைப்புக்கான ஆபத்துகள் அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக, அதை உபயோகிக்கும் முதல் வாரத்தில்கூட அதிக ஆபத்துகள் வரக்கூடும் என்றும், அதிக ‘டோஸ்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு முதல் மாதத்திலேயே ஆபத்துகள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதிக நேரம் அல்ல, 3 ஆண்டுகள் தூங்கும் உயிரினம் எது தெரியுமா?

அதிக நேரம் தூங்கும் உயிரினம் எது என்று கேட்டவுடன் நமக்கு கும்பகர்ணன் நினைவுக்கு வரும். அதெல்லாம் கதைக்குத்தான், மனிதனால் 6 மாதம் எல்லாம் தூங்க இயலாது. அது கிடக்கட்டும். கரடியின் குளிர்காலத் தூக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ணத் தூக்கம் போடுவதுண்டு. பாறைகளுக்கு இடையே, மரப்பொந்துகளில் எனப் பாதுகாப்பாகக் கரடிகள் தூங்கும். இதில் சாம்பியன் கரடி என்று நீங்கள் நினைத்தால் தவறு.. அது குட்டியூண்டு நத்தை தான். இவை 3 ஆண்டுகள் வரை தூங்குமாம். சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் மூன்று வருடங்கள் வரை கூட தூங்குகின்றன.

ஆயிரம் லிங்கம்

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊரிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இதே போல கம்போடியா நாட்டில் கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில்தான் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருக்கிறது.

நவீன டிஜிட்டல் செல்பி ஸ்டிக் அறிமுகம்

இன்றைக்கு செல்போனில் படம் பிடிக்க அனைவரும் செல்பி ஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். ஆனால் செல்பி ஸ்டிக்கே படம் எடுக்க பயன்பட்டால்...  இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அடுத்த கட்டமாக 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்கக் கூடிய செல்பி ஸ்டிக்குகள் அறிமுகம் ஆகியுள்ளன. Vecnos IQUI என அறியப்படும் இந்த ஸ்டிக்குகளில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விரும்பிய திசையிலும், 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்க முடியும். இதற்கென சிறப்பு செயலி மற்றும் மென்பொருள்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இனி படமெடுக்க செல்போனோ, கேமராவையோ தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை. இந்த செல்பி ஸ்டிக் போதும்..

சூரிய குடும்பத்தில் எதிர் கடிகார சுற்றில் சுழலும் கிரகம்

சூரிய குடும்பத்தில் 9 கிரகங்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வீனஸ் மட்டும் சற்று பிரகாசமாக தெரியும். இதனால் இதை பகலிலேயே வெறும் கண்ணால் பார்க்க இயலும். எனவே இதை காலை நட்சத்திரம் அல்லது மாலை நட்சத்திரம் என்று கூட குறிப்பிடுவதுண்டு. அதையெல்லாம் விட முக்கியம் சூரிய குடும்பத்தில் அனைத்து கிரகங்களும் சூரியனை எதிர் கடிகார சுற்று முறையில் (வலமிருந்து இடமாக) சுற்றி வருகின்றன. ஆனால் வீனஸ் மட்டுமே கடிகார சுற்று (இடமிருந்து வலமாக) முறையில் சூரியனை சுற்றி வருகிறது.

மக்கள் கொடுத்த நிலத்தை மறுத்த நாடக மேதை யார் தெரியுமா?

தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர் என போற்றப்பட்டவர் பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார். நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள ஆச்சாரப்பன் தெருவில்தான். ஆனால் தன் பெயருக்கு முன்னால், தன் முன்னோரின் ஊரான ‘பம்மல்’ என்பதை போட்டுக்கொண்டார். அந்த ஊர் மக்கள், அவரால் தங்கள் ஊருக்கு பெருமை கிடைத்ததற்காக தங்கள் அன்பின் அடையாளமாக சில ஏக்கர் நிலத்துக்கான உரிமையை அவருக்கு வழங்கினர். ஆனால் அவரோ ‘‘உழுபவனுக்கே நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.எனக்கு எதற்கு நிலம்?’’ என்று கூறி மறுத்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago