முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சோப்பு எப்போ வந்துச்சு..

நாம் மணக்க மணக்க போட்டு குளிக்கும் சோப் எப்போ வந்துச்சு தெரியுமா...நம் தாத்தா, பாட்டன் காலத்தில் இருந்ததா...ஒரு 100 அல்லது 200 ஆண்டுகள் இருக்குமா.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். சோப் கண்டுபிடித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும்.. இதை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் பாபிலோனியர்கள் எனப்படும் தற்போதைய ஈராக்கியர்கள்தான் என்றால் ஆச்சரியம் தானே... பாபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிதஸ் ஆட்சிக் (கிமு 556-530) காலத்தில் அவனது உத்தரவின் பேரில் அரண்மனை ரசவாதிகள் சாம்பல், விலங்குகளின் கொழுப்பு, எண்ணெய், மெழுகு, உப்பு இவற்றைக் கொண்டு சவர்க்காரம் எனப்படும் சோப்பை தயாரித்தனர். முதலில் தரையையும், பின்னர் ஆடைகள், பாத்திரங்களையும் இறுதியில் குளிப்பதற்கும் பயன்பட்டன. இது வணிகர்கள் கண்ணில் படவே நைசாக சிரியா, ரோம், எகிப்து என மொரோக்கோ வரை பயணித்து சோப் பரவலானது. அது சரி.. அதற்கு சோப் என யார் பெயர் வைத்தார்.. கிபி 79 இல் ரோமானிய எழுத்தாளர் பிளினி தி எல்டர் என்பவர் சோப்பை குறிப்பிடும் மூலச் சொல்லான sapo என்று குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக soap என குறிப்பிட்டு விட்டார். அதுவே இன்று வரை சோப்பாக நிலைத்து விட்டது.. என்ன ஓகேவா..

பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவு

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் சூரிய ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். குறிப்பாக சூரியனை தவிர மற்ற எந்த கோள்களுக்கும் சுயமாக பிரகாசிக்கும் தன்மை கிடையாது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் சூரிய ஒளியை பூமி பிரதிபலிக்கும் தன்மை சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கலிபோர்னியாவில் உள்ள பிக் பியர் சோலார் அப்சரவேட்டரி ஆய்வகத்தைச் சேர்ந்த பிலிப் கூடி தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் கடந்த 1998 முதல் 2017 வரையிலான பூமியின் பிரதிபலிப்பு திறன் குறித்த பல்வேறு தரவுகளை ஆய்வு செய்ததில் பூமியின் பிரதிபலிப்பு திறன் 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவிக்கின்றனர். அதிலும் கடந்த 3 ஆண்டுகளில் தான் அதிக அளவு சரிவு ஏற்பட்டதாகவும் அவர்களது ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ரூ.1 கோடி கல்வி கட்டணம் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளி

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான ஹோட்டல், வாகனங்கள், நகைகள் இப்படி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..ஆம் அப்படி ஒரு பள்ளி, சுவிஸ் நாட்டில் உள்ளது. இன்ஸ்டிடியூட் லே ரோசாய் என்ற பள்ளிதான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான பள்ளி. இங்கு ஆண்டு கல்வி கட்டணம் மட்டும் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. உலகின் அரசியல் தலைவர்கள், அரசர்கள் ஆகியோரின் வாரிசுகள் இங்கு தான் படிக்கின்றனர். இப்பள்ளி 1880 இல் நிறுவப்பட்டது. உலகில் உள்ள சகல வசதிகளும், சகல பயிற்சிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.

சோலார் சாலைகள் : இனி மின்சாரம் தயாரிப்பு ரொம்ப ஈஸி

சோலார் சாலைகள். பெயருக்கு ஏற்றார்போல சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் சாலைகள்தான். இவற்றில் சாலையின் மீது சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மீது உடையாத கொரில்லா கிளாஸ் அமைக்கப்படும். இவை சோலார் சாலை என்பதை குறிப்பிடும் வகையில் மத்தியில் ஒளிரும் ரெப்ளெக்டர்கள் மூலம் இதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் பல்வேறு அடையாளங்களையும் இதில் குறித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இவை லேசான அளவில் வெப்பத்தை உமிழ்வது போல அமைக்கப்படுவதால், இதன் மீது படியும் பனி கரைந்து ஓடி விடும். இதில் எளிதாக நடந்து செல்லவும், வாகனங்களிலும் செல்லலாம். மேலும் சேதமடைந்து விட்டால் உடனே மாற்றி விடுவதும் எளிது.

நிறம் மாறும்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயர் (fire) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஹேர் டை தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மை கொண்டது. அடர்சிவப்பு தொடங்கி பல்வேறு நுண்ணிய நிறங்களில் இந்த ஹேர் டை கிடைக்கிறது.

கணிணியில் பயன்படுத்தப்படும் மவுஸ் தொடக்கத்தில் மரத்தில் செய்யப்பட்டது

சில நேரங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் வரலாறு குறித்து தெரியவந்தால் அதில் நாம் அறிந்திராத பல்வேறு சுவாரசியமான செய்திகள் அடங்கியிருக்கும். அதில் ஒன்று, தற்போது நாம் கணிணியில் பயன்படுத்தி வரும் மவுஸ். 1964 இல் ஸ்டான்போர்ட் பொறியாளர் டக்ளஸ் ஏங்கல்பார்ட் என்பவர்தான் மர மவுஸை உருவாக்கியவர். அதில் இரண்டு சக்கரங்கள் மற்றும் ஒரு பொத்தான் கொண்ட மரப்பெட்டி வடிவத்தில் இருந்தது என்றால் ஆச்சரியம் தானே.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago