முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மேலும் வசதி

விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

நன்மைகள் பல

பெரிய திரை கொண்டுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிக தகவல்களை ஒரே ஸ்வைப் மூலம் பார்க்க முடியும். இதோடு புகைப்படம், வீடியோ மற்றும் கேம் உள்ளிட்டவற்றை சிறப்பாக கையாளலாம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட சாதனம் எனில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சம் மூலம் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க முடியும்.

தானியங்கி பேருந்து

பாரீஸின் 2 ரயில் நிலையங்களுக்கு இடையில் தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாமல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பேருந்து சேவையானது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்காக சிறப்பு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. 130 மீட்டர் தொலைவிற்கு இயங்கும் இந்த தானியங்கி பேருந்தில் 10 பயணிகள் வரை பயணிக்க முடியும்.

கழுவி பயன்படுத்தலாம்

ரஃப்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மாடல் ஸ்மார்ட் போனை சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தலாம். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோசெரா என்ற நிறுவனம் இந்த புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சூடான தண்ணீரில் கூட ஸ்மார்ட் போனை சுத்தபடுத்தலாம். இந்த மொபைல் நௌவ்கட் இயங்கு தளத்தில் இயங்கும்.

ஆடையில் புதுமை

கூகுள் மற்றும் லெவி நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ஸ்மார்ட் ஜாக்கெட்டை உருவாக்கியுள்ளன. இதன் சிறப்பம்சம், தொலைபேசி அழைப்புக்களை பயன்படுத்த மற்றும் பாடல்களைக் கேட்கும் வகையில் உள்ளதுதான். இந்த ஸ்மார்ட் ஜாக்கெட்டின் கை பகுதியில் ஸ்லைடு பொருத்தபட்டிருக்கும் இதன் மூலம் ஸ்மார்ட் போனுக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் பற்றிய விவரம் கிடைப்பதை நாம் உணரலாம். ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஜாக்கெட் தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் கிடைக்கப்பெறும்போது ஒரு வகையான அதிர்வினை ஆடைகளில் ஏற்படுத்தி தெரிவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ப்ளூடூத்துடன் ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தீயணைப்பு படை வீரராக பணியாற்றியஹாலிவுட் நடிகர் யார் என்று தெரியுமா?

டெஸ்பரேடோ போன்ற புகழ் பெற்ற படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகரான ஸ்டீவ் பஸ்செமி. இவர் 1980 முதல் 1984 வரையிலும் நியூயூார்க் நகரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் பணியாற்றினார். பின்னர் நடிகராகி பெரும் பணமும் புகழும் ஈட்டினார். இந்த சூழலில் நியூயார்க் நகரில் செப்டம்பர் 2011 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, இவர் தானாகவே விரும்பி சென்று தீயணைப்பு சேவைகளில் ஈடுபட்டார். இதற்காக சக வீரர்களுடன் இணைந்து சுமார் 12 மணி நேரம் வரையிலும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். செப்டம்பர் தாக்குதலில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார் என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago