முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குறிப்பிட்ட நாள் நேரத்தில் மெயில் அனுப்ப...

எதிர்கால இமெயில் அனுப்பும் வசதிகளை தருவதில் LetterMeLater என்ற இந்த வசதிதான் சிறப்பாக செயல் படுவதுடன், கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது. http://www.lettermelater.com/ என்ற முகவரியுள்ள தளத்தில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுக்க வேண்டும்.உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். பின் மின்னஞ்சல் கடிதத்தினைத் தயார் செய்து, அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் நாளினையும் பதிந்து வைக்க வேண்டும். உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் பதிந்து வைத்த எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில் குறித்த செய்தி அனுப்பப்படும்.பின் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நீங்கள் பதிந்த இமெயில் அனுப்பப்படும். பதிந்த நாளுக்குப் பின், தயாரித்த இமெயில் செய்தியில் ஏதேனும் எடிட் செய்திட வேண்டுமானால் இந்த தளம் சென்று, பாஸ்வேர்ட் கொடுத்து, மெயிலைத் திறந்து சேர்க்கலாம். பைல்களை அட்டாச் செய்திடலாம்

தமிழ் இடம் பெற்ற நாணயம் எப்போது வெளியானது தெரியுமா?

இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி ரூபாய் நோட்டுகளில் தமிழ் மொழி இடம் பெற்றிருந்தது நமக்கு தெரியும். அதைவிட பெருமை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான 8 மொழிகள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டு வந்தன. அதில் ஹிந்தி இடம்பெறவில்லை. இந்தி மொழியானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகே ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்தி மொழியானது பெரும்பாலும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற துவங்கின. இந்நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா நூற்றாண்டை போற்றும் வகையில் 2009 இல் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. நினைவு நாணயங்களில் தலைவர்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அண்ணாவின் நாணயத்தில் அவரது சிறப்புப் பெயரான ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என்று பொறிக்கப்பட்டிருப்பது வேறு எந்தத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு. அதேபோல், அண்ணாவின் கையெழுத்தைத் தாங்கியிருக்கும் இந்த நாணயம், தமிழ் மொழி இடம்பெற்றிருக்கும் ஒரே நாணயமாகவும் திகழ்கிறது.

ஒரே நேர்கோட்டில்...

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், சரியாக புவியிடைக்கோடு (30.7352° N, 79.0669) இல் அமைந்துள்ளது. கேதார்நாத்திலிருந்து 221 கி.மீ தூரத்தில் ரிஷிகேஷ் ரயில் நிலையம், அடுத்து 14 கி.மீட்டர் தள்ளி உள்ள காலேஷ்வரம் இவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் அரிதாக அமைந்துள்ளது.

'செவ்வாய்' போகலாம்

மனிதர்கள், 2030-ல் செவ்வாய் கிரகத்தில், வசிக்கலாம் என அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’ அறிவித்திருந்த நிலையில், அங்கு கியூரியாசிட்டி என்ற விண்கலம் நடத்திய ஆய்வின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ அனைத்து வசதிகளும் இருப்பதாக தெரிவித்தது.தற்போது, செவ்வாய் கிரகத்தில் உதோபியா பிளானிசியா என்ற இடத்தில், 80 மீட்டர் ஆழத்திலிருந்து 170 மீட்டர் ஆழம் வரை உள்ள ஒரு மிகப்பெரிய அளவிலான நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, அங்கு இதற்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

தீபாவளி ஓர் ஆச்சரியமான செய்தி

19 ஆம் நூற்றாண்டு வரை தமிழின் எந்த இலக்கிய ஆவணத்திலும் தீபாவளி என்ற சொல் கிடையாது. வட நாட்டில் இருந்தும், விஜயநகர பேரரசின் போதும் தமிழகத்துக்கு தீபாவளி வந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தீபாவளியை இந்துக்கள் தவிர சமணர்கள், புத்தர்கள் மற்றும் சில வெளிநாடுகளிலும் கொண்டாடுகின்றனர்.1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தீபாவளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். எது எப்படியோ இன்றைக்கு தீபாவளிக்கு புத்தாடை புனைந்து, பலகாரங்கள் செய்து, புதுப்படம் ரீலிஸ் செய்தால்தான் தமிழனின் தீபாவளி நிறைவு பெறும்.

மைக்ரோசாப்ட் முடிவு

பெயிண்ட் பிரஷ் என்ற பெயரில் கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயிண்ட் கிராபிக்ஸ் செயலிக்கு பதில் பெயிண்ட் 3டி அறிமுகப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெயிண்ட் செயலி படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago